Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Saturday, July 5
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»திருச்செங்கோடு நீட் தேர்வு மையத்தில் சர்வர் கோளாறு: பெற்றோர் சாலை மறியல்
    மாநிலம்

    திருச்செங்கோடு நீட் தேர்வு மையத்தில் சர்வர் கோளாறு: பெற்றோர் சாலை மறியல்

    adminBy adminMay 4, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    திருச்செங்கோடு நீட் தேர்வு மையத்தில் சர்வர் கோளாறு: பெற்றோர் சாலை மறியல்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    நாமக்கல்: சர்வர் கோளாறு காரணமாக திருச்செங்கோடு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நீட் தேர்வு எழுத வந்த மாணவ, மாணவியர் பயோ மெட்ரிக் முறையில் பதிவு செய்யாமல் தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். இதைக் கண்டித்து மாணவர்களின் பெற்றோர் சாலை மறியிலில் ஈடுபட்டனர்.

    திருச்செங்கோட்டில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகியவற்றில் நீட் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. தேர்வு எழுதுவதற்காக திருச்சி, மதுரை போன்ற வெளிமாவட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவியர் இன்று மேற்குறிப்பிட்ட இரு மையங்களுக்கும் வந்திருந்தனர். இதில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தில் தேர்வு எழுத வந்த மாணவ, மாணவியர் தீவிர பரிசோதனைக்குப் பின் பயோமெட்ரிக் கருவியில் கைரேகை பெறப்பட்டு உள்ளே அனுமதிக்கப்பட்டனர். 420 மாணவ, மாணவியருக்கு பின் பயோமெட்ரிக் சிஸ்டத்தில் கோளாறு ஏற்பட்டது.

    இதனால் காலதாமத்தை தவிர்க்க பயோமெட்ரிக் சிஸ்டம் இல்லாமலே மாணவ, மாணவியர் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். இதைக்கண்ட மாணவ, மாணவியரின் பெற்றோர் தேசிய தேர்வு முகமை நிர்வாகம் போதுமான வசதிகள் செய்யவில்லை என புகார் எழுப்பி திருச்செங்கோடு-சங்ககிரி சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்த நகர காவல் துறையினர், வருவாய் துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பயோமெட்ரிக் சர்வர் குறைபாடுகள் இருப்பதாகவும், பயோமெட்ரிக் கருவி ஒன்று மட்டுமே வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறி இதில் 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பதிவு செய்யாமல் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இதனால் தங்கள் குழந்தைகள் நீட் தேர்வு எழுதியும் அரசின் நிர்வாக கோளாறால் அவர்களது தேர்ச்சி பாதிக்கப்படும் சூழல் உள்ளது. எங்களுக்கு உரிய நியாயம் கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என்றனர்.

    இதுகுறித்து தேசிய தேர்வு முகமை அதிகாரிகள் கூறுகையில், “அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 720 பேர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டிருந்தனர். 9 பேர் தேர்வு எழுத வரவில்லை. மீதி உள்ள 711 பேர் எழுத அனுமதிக்கப்பட்டனர். இதில் 411 மாணவர்கள் தேர்வு எழுத பயோமெட்ரிக்கில் பதிவு செய்யப்பட்டது. அதன்பின் சர்வர் சரியாக வேலை செய்யவில்லை. எனவே மீதமுள்ள 300 மாணவ, மாணவியர் பயோமெட்ரிக் பதிவு செய்யவில்லை. அதற்கு பதில் விடைத்தாள் எண் (ஓஎம்ஆர்) பதிவு செய்து கொண்டு தேர்வு எழுத அனுமதித்துள்ளோம். தேர்வு எழுதுவதில் எந்த காலதாமதமும் ஏற்படவில்லை.” என்றனர்.

    இதனிடையே தேசிய தேர்வு முகமை நாமக்கல் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சிவசேனன் தலைமையிலானோர் மறியலில் ஈடுபட்டோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, “711 பேருக்கும் ஓஎம்ஆர் சீட்டு வழங்கப்பட்டுள்ளது. அதுவே தேர்வு எழுத வந்ததாக கணக்கில் கொல்லப்படும். பயோமெட்ரிக் மாணவர்களை அடையாளம் காணுவதற்கான ஒரு வழிமுறை தான். சர்வர் பாதிப்பினால் தான் அவ்வாறு செய்ய முடியவில்லை. காலதாமதம் எதுவும் ஏற்படவில்லை.” என்றனர்.

    இதையேற்ற பெற்றோர் தங்களது மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். பெற்றோர் போராட்டத்தால் திருச்செங்கோடு-சங்ககிரி சாலையில் 2 மணி நேரம் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    திருச்செந்தூர் கும்பாபிஷேக விழாவில் அன்னதானம் செய்ய முறையான அனுமதி தேவை: அமைச்சர் சேகர்பாபு

    July 5, 2025
    மாநிலம்

    “காவல் துறை அத்துமீறல் நீடித்தால் திமுக ஆட்சிக்கு வீழ்ச்சி உறுதி!” – திருப்புவனத்தில் ஓபிஎஸ் கருத்து

    July 5, 2025
    மாநிலம்

    “அதிமுகவை தோழமைக் கட்சியாக விஜய் பார்க்கிறாரா?” – திருமாவளவன் 

    July 5, 2025
    மாநிலம்

    ‘கமிஷன், கலெக்‌ஷன், கரப்ஷன்… இந்த அவல ஆட்சி தேவையா?’ – தமிழக மக்களுக்கு இபிஎஸ் மடல்

    July 5, 2025
    மாநிலம்

    ‘பழங்குடியின பெண்களை வரி செலுத்துவோராக உயர்த்திய ஈஷா’ – மத்திய அமைச்சர் பாராட்டு

    July 5, 2025
    மாநிலம்

    விடுபட்டோருக்கு மகளிர் உரிமைத் தொகை: ஜூலை 15-ல் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் தொடக்கம்

    July 5, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • திருச்செந்தூர் கும்பாபிஷேக விழாவில் அன்னதானம் செய்ய முறையான அனுமதி தேவை: அமைச்சர் சேகர்பாபு
    • வெறும் வயிற்றில் பழங்கள் இருக்கக்கூடாது என்பதற்கு ஊட்டச்சத்து நிபுணர் 3 ஆபத்தான காரணங்களை அளிக்கிறார்: அதற்கு பதிலாக என்ன செய்ய வேண்டும்
    • “காவல் துறை அத்துமீறல் நீடித்தால் திமுக ஆட்சிக்கு வீழ்ச்சி உறுதி!” – திருப்புவனத்தில் ஓபிஎஸ் கருத்து
    • இந்திய கைவினைஞர் உரிமைகள் Vs பிராடா: கோலபுரி நகல் குறித்து மன்னிப்பு கோருகிறது – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • “அதிமுகவை தோழமைக் கட்சியாக விஜய் பார்க்கிறாரா?” – திருமாவளவன் 

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.