Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Wednesday, August 27
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»திருச்சி பஞ்சப்பூர் அருகே எனக்கு நிலம் இருந்தால் பழனிசாமியே எடுத்துக் கொள்ளலாம்: அமைச்சர் கே.என்.நேரு விளக்கம்
    மாநிலம்

    திருச்சி பஞ்சப்பூர் அருகே எனக்கு நிலம் இருந்தால் பழனிசாமியே எடுத்துக் கொள்ளலாம்: அமைச்சர் கே.என்.நேரு விளக்கம்

    adminBy adminAugust 27, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    திருச்சி பஞ்சப்பூர் அருகே எனக்கு நிலம் இருந்தால் பழனிசாமியே எடுத்துக் கொள்ளலாம்: அமைச்சர் கே.என்.நேரு விளக்கம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    திருச்சி: பஞ்​சப்​பூரில் அமைச்​சர் கே.என்​. நேரு​வுக்கு 300 ஏக்​கர் நிலம் இருப்​ப​தால்​தான், அங்கு பேருந்து முனை​யம் அமைக்கப்பட்டுள்​ள​தாக அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி கூறி​யிருந்த நிலை​யில்,‘எனக்கு அங்கு 300 ஏக்​கர் நிலம் இருந்தால், அதை பழனி​சாமியே எடுத்​துக் கொள்​ளலாம்’ என்று அமைச்​சர் கே.என்​.நேரு கூறினார்.

    திருச்சி மேலப்​புதூர் புனித பிலோமி​னாள் பெண்​கள் மேல்​நிலைப் பள்​ளி​யில் நேற்று முதல்​வரின் காலை உணவுத் திட்​டத்தை தொடங்கி வைத்த பின்​னர் அமைச்​சர் கே.என்​.நேரு செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: துறையூரில் ஆக.24-ம் தேதி நடை​பெற்ற அதி​முக கூட்​டத்​தில் 108 ஆம்​புலன்ஸ் வந்​தது, நோயாளியை காப்​பாற்​று​வதற்​காகவே தவிர, வேறு எந்த நோக்​கத்​துக்​காக​வும் அல்ல. துறையூரில் ஆம்​புலன்ஸ் ஓட்​டுநர் தாக்​கப்​பட்​டதற்கு அதி​முக​வினரே காரணம். அவர்​களே 108 ஆம்​புலன்​ஸுக்கு போன் செய்து வரவழைத்து தாக்​கிய​தாக காவல் துறை தரப்​பில் எனக்கு தகவல் தெரிவிக்​கப்​பட்​டது.

    பஞ்​சப்​பூர் பகு​தி​யில் எனக்கு 300 ஏக்​கர் நிலம் இருப்​ப​தால்​தான், அங்கு பேருந்து முனை​யம் அமைக்​கப்​பட்​டுள்​ள​தாக அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி கூறி​யிருக்​கிறார். அவர் கூறியிருப் ​ப​தைப்​போல, அங்கு எனது பெயரிலோ, என்​னைச் சார்ந்தவர்கள் பெயரிலோ நிலங்​கள் இருந்​தால், அதை அரசே கையகப்​படுத்​திக் கொள்​ளலாம். நானே கையெழுத்​திட்டு தரு​கிறேன். வேண்​டுமென்​றால் பழனி​சாமியே அந்த நிலத்தை எடுத்​துக் கொள்​ளலாம்.

    அதிமுகவுக்குள்தான் பிரச்சினை: எங்​களு​டைய கட்​சித் தலை​வர் முதல்​வர் மு.க.ஸ்​டா​லினுடன் நான் இணக்​க​மாகத்​தான் உள்ளேன். எங்​களுக்​குள் எந்​தப் பிரச்​சினை​யும் இல்​லை. ஆனால் பழனி​சாமிக்​கும், தங்​கமணிக்​கும் இடையே​தான் பிரச்​சினை நிலவுவ​தாக அதி​முக நிர்​வாகி​களே வெளிப்​படை​யாக கூறி வரு​கின்​றனர். தமிழகத்​தில் மழைக்​காலம் தொடங்​கு​வதற்கு முன்பாகவே, அனைத்து இடங்​களி​லும் மழைநீர் வடி​கால் உள்​ளிட்ட அனைத்து கட்​டமைப்பு பணி​களும் சரி​யான முறை​யில் முடிக்​கப்​பட்​டுள்​ளன. இவ்​வாறு அவர் கூறி​னார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    கால்நடை மருத்துவக் கல்லூரியில் ரூ.5 கோடி முறைகேடு புகார்: டீன் பொறுப்பில் இருந்து சவுந்தரராஜன் நீக்கம்

    August 27, 2025
    மாநிலம்

    ஜெகதீப் தன்கர் விவகாரம்: ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்படும் – செல்வப்பெருந்தகை தகவல்

    August 27, 2025
    மாநிலம்

    திருவானைக்காவல் கோயிலில் நயினார் நாகேந்திரன் தியானம்

    August 27, 2025
    மாநிலம்

    28, 29-ல் பத்திரப்பதிவுக்கு கூடுதல் டோக்கன்

    August 27, 2025
    மாநிலம்

    தமிழகத்தில் 66,000 தொழில்முனைவோருக்கு ரூ.5,490 கோடி கடன்:  அமைச்சர் தகவல்

    August 27, 2025
    மாநிலம்

    காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டம்: செப்டம்பர் மாதத்துக்கான 37 டிஎம்சி நீரை கோரியது தமிழக அரசு

    August 27, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • கால்நடை மருத்துவக் கல்லூரியில் ரூ.5 கோடி முறைகேடு புகார்: டீன் பொறுப்பில் இருந்து சவுந்தரராஜன் நீக்கம்
    • இந்தியாவில் பிரபலமான தேசிய பூங்காக்கள் செப்டம்பர் பயணங்களுக்கு சரியானவை
    • இந்தியா மீது அமெரிக்கா 50% வரி விதிப்பு: எவ்வளவு நெருக்கடி வந்தாலும் கவலையில்லை –  விவசாயிகளை காப்பேன் என பிரதமர் மோடி உறுதி
    • வார் 2 தோல்வியால் ஜூனியர் என்.டி.ஆரின் ‘ஏஜென்ட் விக்ரம்’ நிறுத்தம்!
    • தயாரிப்பு நிறுவனம் தொடங்கினார் ரவி மோகன்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.