Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Friday, August 8
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»திருச்சி எஸ்ஆர்எம் ஓட்டல் வழக்கில் தனி நீதிபதி உத்தரவு ரத்து: உயர் நீதிமன்ற மதுரை அமர்வு தீர்ப்பு
    மாநிலம்

    திருச்சி எஸ்ஆர்எம் ஓட்டல் வழக்கில் தனி நீதிபதி உத்தரவு ரத்து: உயர் நீதிமன்ற மதுரை அமர்வு தீர்ப்பு

    adminBy adminAugust 8, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    திருச்சி எஸ்ஆர்எம் ஓட்டல் வழக்கில் தனி நீதிபதி உத்தரவு ரத்து: உயர் நீதிமன்ற மதுரை அமர்வு தீர்ப்பு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    மதுரை: திருச்சி எஸ்ஆர்எம் ஓட்டல் குத்தகை காலத்தை நீட்டிக்க மறுத்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை, உயர் நீதிமன்ற மதுரை அமர்வு ரத்து செய்துள்ளது. ​

    திருச்சி காஜா மலை பகு​தி​யில் உள்ள எஸ்ஆர்எம் ஓட்​டலின் குத்​தகை காலம் முடிவடைந்த நிலை​யில், அதை காலி செய்​யு​மாறு ஓட்​டல் நிர்​வாகத்​துக்கு சுற்​றுலா துறை உத்​தர​விட்​டது. இதை ரத்து செய்​யக் கோரி ஓட்​டல் நிர்​வாகம் சார்​பில், உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் மனு தாக்​கல் செய்யப்பட்டது.

    இந்த மனு தனி நீதிபதி முன்​னிலை​யில் விசா​ரணைக்கு வந்​த​போது, குத்​தகை காலத்தை நீட்​டிக்க மறுத்து அரசு பிறப்​பித்த உத்​தரவை ரத்து செய்து உத்​தர​விட்​டார். இந்த உத்​தரவை ரத்து செய்​யக் கோரி தமிழ்​நாடு சுற்​றுலாகழகம் சார்​பில் உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் மேல்​முறை​யீடு மனு தாக்​கல் செய்​யப்​பட்​டது.

    அதில், “அரசு குத்​தகை காலத்தை நீட்​டிக்க விரும்​ப​வில்​லை. அந்த ஓட்​டலை சுற்​றுலா கழகமே ஏற்று நடத்த வேண்​டும் என தெரிவிக்​கப்​பட்​டது. இந்த முடிவை கும்கி பட யானை​யுடன் ஒப்​பிட்டு தனி நீதிபதி கருத்து தெரி​வித்​துள்​ளார்.

    அதில், கோயில் யானையை கும்கி யானை​யாக பயன்​படுத்​து​வதை​யும், இறு​தி​யில் கும்கி யானை இறந்​து​போவதை​யும் சுட்​டிக்​காட்டி சுற்​றுலாத் துறை ஓட்​டல் நடத்த முன்​வந்​திருப்​பதை விமர்​சனம் செய்​துள்​ளார். இது சரியல்ல. இதனால் தனி நீதிபதி உத்​தர​வில் இடம் பெற்​றுள்ள அந்த கருத்​துகளை நீக்​க​வும், தனி நீதிப​தி​யின் உத்​தரவை ரத்து செய்​தும் உத்​தர​விட வேண்​டும்” எனக் கூறப்​பட்​டிருந்​தது.

    இந்த மனுவை நீதிப​தி​கள் ஏ.டி ஜெகதீஸ் சந்​தி​ரா, நீதிபதி ஆர்​.பூர்​ணிமா அமர்வு விசா​ரித்​தது. பின்​னர் நீதிப​தி​கள் பிறப்​பித்த உத்தர​வில் கூறி​யிருப்​ப​தாவது: குத்​தகை உரிமம் முடிந்த பிறகு அதை நீட்​டிப்​பதை உரிமை​யாக கருத முடி​யாது. அது முழுக்க முழுக்க அரசின் முடிவு.

    தமிழ்​நாடு சுற்​றுலா கழகம் 1971 முதல் பல்​வேறு இடங்​களில் ஓட்​டல்​களை நடத்தி வரு​கிறது. கடந்த 2023-24-ல் ரூ.32.33 கோடி வருமானம் ஈட்​டி​யுள்​ளது. இதனால் தமிழ்​நாடு சுற்​றுலாத் துறை ஓட்​டல் நடத்​தும் விவ​காரம் தொடர்​பாக தனி நீதிபதி தெரி​வித்த கருத்​துகள் அவரது தனிப்​பட்ட கருத்​தாக இருக்​கலாம்.

    எஸ்​ஆர்​எம் ஓட்​டல் குத்​தகை காலத்தை நீட்​டிக்க மறுத்து அரசு பிறப்​பித்த உத்​தரவை ரத்து செய்து தனி நீதிபதி பிறப்​பித்த உத்தரவு ரத்து செய்​யப்​படு​கிறது. தமிழக சுற்​றுலாத் துறை ஓட்​டல்​கள் நடத்​து​வது தொடர்​பாக தனி நீதிபதி தெரி​வித்த கருத்​துகள் நீக்​கப்​படு​கின்​றன. மேல்​முறை​யீடு மனு ஏற்​கப்​படு​கிறது. இவ்​வாறு நீதிப​தி​கள்​ உத்​தர​வில்​ கூறியுள்​ளனர்​.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    ஊபர் செயலியில் மெட்ரோ பயணச்சீட்டு பெறும் வசதி அறிமுகம்: 2-ம் கட்ட மெட்ரோ ரயில்கள் டிசம்பரில் இயக்கம்

    August 8, 2025
    மாநிலம்

    சென்னையில் இருந்து போத்தனூர், செங்கோட்டை, நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில்கள்

    August 8, 2025
    மாநிலம்

    துணைவேந்தர் நியமன விவகாரம்: தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு; விசாரணை தள்ளிவைப்பு

    August 8, 2025
    மாநிலம்

    அதிமுக கொள்கை வேறு, கூட்டணி வேறு: பழனிசாமி திட்டவட்டம்

    August 8, 2025
    மாநிலம்

    பாமகவை கைப்பற்றத் துடிக்கிறார் அன்புமணி: ராமதாஸ் பகிரங்க குற்றச்சாட்டு

    August 8, 2025
    மாநிலம்

    எய்ம்ஸ் கட்டுமானம் ஜனவரியில் நிறைவடையும்: உயர் நீதிமன்றத்தில் தகவல்

    August 8, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • “சிக்கல்கள் தீரும் வரை இந்தியாவுடன் வர்த்தகப் பேச்சு இல்லை” – ட்ரம்ப் திட்டவட்டம்
    • ஊபர் செயலியில் மெட்ரோ பயணச்சீட்டு பெறும் வசதி அறிமுகம்: 2-ம் கட்ட மெட்ரோ ரயில்கள் டிசம்பரில் இயக்கம்
    • தங்கம் விலை பவுன் ரூ.76,000-ஐ நெருங்கியது
    • ஆரம்பகால சிறுநீரக நோயின் அறிகுறிகள் கால்கள் மற்றும் கைகளில் காணப்படுகின்றன
    • உத்தராகண்ட் வெள்ளத்தில் சிக்கிய 274 பேர் மீட்பு: 59 பேரை தேடும் பணி தீவிரம்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.