Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, July 22
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»திருச்சி அருகே பொக்லைன் மீது கார் மோதி விபத்து: முசிறி ஆர்டிஓ உயிரிழப்பு!
    மாநிலம்

    திருச்சி அருகே பொக்லைன் மீது கார் மோதி விபத்து: முசிறி ஆர்டிஓ உயிரிழப்பு!

    adminBy adminJune 19, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    திருச்சி அருகே பொக்லைன் மீது கார் மோதி விபத்து: முசிறி ஆர்டிஓ உயிரிழப்பு!
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    திருச்சி அருகே நடந்த விபத்தில் முசிறி வருவாய் கோட்டாட்சியர் ஆரமுத தேவசேனா சம்பவ இடத்திலேயே பலியானார்.

    திருச்சி மாவட்டம் முசிறி வருவாய் கோட்டாட்சியராக பணியாற்றி வந்தவர் ஆரமுத தேவசேனா (54). இன்று அவர் அலுவல் நிமித்தமாக முசிறியில் இருந்து தனது காரில், திருச்சி- கரூர் தேசிய நெடுஞ்சாலையில் திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்தார். அவரின் காரை, திருச்சி மாவட்டம் துறையூரைச் சேர்ந்த பிரபாகரன் ஓட்டினார்.

    ஜீயபுரம் அருகே கடியாக்குறிச்சி பகுதியில் கார் சென்றபோது எதிரே வந்த தனியார் பேருந்துக்கு ஓட்டுநர் பிரபாகரன் வழிவிட்டார். அப்போது, பக்கவாட்டில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலைப் பணியில் ஈடுபட்டிருந்த பொக்லைன் இயந்திரத்தின் மீது கார் பயங்கரமாக மோதியது. இவ்விபத்தில் இடதுபுறம் அமர்ந்திருந்த ஆரமுத தேவசேனா சம்பவ இடத்திலேயே பலியானார். பிரபாகரன் படுகாயமடைந்தார்.

    தகவலறிந்த ஜீயபுரம் போலீஸார் தேவசேனா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரபாகரனை சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இவ்விபத்து குறித்து ஜீயபுரம் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    “பிளாக் ஸ்பாட்” – கரூர் தேசிய நெடுஞ்சாலையில் ஜீயபுரம் துவங்கி பெட்டவாய்த்தலை வரை அதிக விபத்துகள் நடக்கும் பகுதியாக ‘பிளாக் ஸ்பாட்’ என்று அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறது. அதிவேகம் மற்றும் அஜாக்கிரதை காரணமாக விபத்துகளும், உயிரிழப்புகளும் இச்சாலையில் தொடர்கதையாக உள்ளன. தற்போதைய விபத்தை பொறுத்தவரை சாலையோரம் பணிகள் செய்யும்போது மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் கடைபிடிக்காத காரணத்தினால் பெண் அரசு உயரதிகாரியின் உயிர் பறிபோனதாக குற்றம்சாட்டப்படுகிறது.

    நற்பெயர் பெற்ற அரசு அதிகாரி: மதுரையை பூர்வீகமாக கொண்ட ஆரமுத தேவசேனாவிற்கு திருமணமாகி இரண்டு மகன்கள் உள்ளனர். இவரின் கணவர், புதுக்கோட்டையில் அரசுத்துறை அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவரின் பணிக்காலம் பெரும்பாலும் புதுக்கோட்டை மாவட்டத்தையே சார்ந்து இருந்தது. திருச்சி மாவட்டத்தை பொறுத்தவரை நிலமெடுப்பு பிரிவில் ஏற்கனவே பணியாற்றியவர். தற்போது முசிறி ஆர்டிஓவாக பொறுப்பேற்று ஓராண்டுகள் மட்டுமே ஆகின்றன. எவ்வித பிரச்சினைகளிலும் சிக்காத இவர், அனைத்து தரப்பினர் இடையே நற்பெயரை சம்பாதித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளில் சுய உதவி குழுவினர் 2.50 கோடி பேருக்கு ரூ.1.21 லட்சம் கோடி வங்கி கடனுதவி

    July 22, 2025
    மாநிலம்

    5 ஆண்டுகள் நன்றாக பணிபுரிந்த கேட் கீப்பர்களை இன்டர்லாக் செய்யப்படாத கேட்களில் பணியமர்த்த ரயில்வே அறிவுறுத்தல்

    July 22, 2025
    மாநிலம்

    கும்மிடிப்பூண்டி – கவரைப்பேட்டை இடையே பொறியியல் பணி: 17 மின்சார ரயில்களின் சேவையில் இன்று மாற்றம்

    July 22, 2025
    மாநிலம்

    தமிழகத்துக்கு கல்வி நிதி தர மத்திய அரசு மறுப்பு தெரிவிக்கிறது: உயர்கல்வி அமைச்சர் குற்றச்சாட்டு

    July 22, 2025
    மாநிலம்

    24-வது ஆண்டு நினைவு தினம்: நடிகர் சிவாஜி கணேசனுக்கு அரசியல் தலைவர்கள் மரியாதை

    July 22, 2025
    மாநிலம்

    சட்டவிரோத சிறுநீரக விற்பனையை தடுக்க வேண்டும்: முதல்வர் ஸ்டாலினுக்கு ஓபிஎஸ் கோரிக்கை

    July 22, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • உண்மை சம்பவ பின்னணியில் ‘போகி’
    • தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளில் சுய உதவி குழுவினர் 2.50 கோடி பேருக்கு ரூ.1.21 லட்சம் கோடி வங்கி கடனுதவி
    • டயட்டீஷியன்களின் கூற்றுப்படி, உயர் கொழுப்பைக் குறைக்க சியா விதைகள் ஏன் சிறந்த உணவாக இருக்கின்றன | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • நீதிபதியை பதவி நீக்க தீர்மானம்: 209 எம்.பி.க்கள் கையெழுத்து
    • மான்செஸ்டரில் இந்திய அணி எப்படி? – ENG vs IND 4வது டெஸ்ட்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.