Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Sunday, July 27
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»திமுக, பாஜகவினர் இடையே தள்ளுமுள்ளு, நாற்காலி வீச்சு – பிரதமர் மோடி நிகழ்வில் பரபரப்பு
    மாநிலம்

    திமுக, பாஜகவினர் இடையே தள்ளுமுள்ளு, நாற்காலி வீச்சு – பிரதமர் மோடி நிகழ்வில் பரபரப்பு

    adminBy adminJuly 27, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    திமுக, பாஜகவினர் இடையே தள்ளுமுள்ளு, நாற்காலி வீச்சு – பிரதமர் மோடி நிகழ்வில் பரபரப்பு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    தூத்துக்குடியில் விரிவாக்கம் செய்யப்பட்ட விமான முனையத்தை திறந்து வைத்து பிரதமர் பேசிக் கொண்டிருந்த போது, திமுக, பாஜகவினர் தங்களது தலைவர்களை வாழ்த்தி போட்டி போட்டு தொடர்ச்சியாக கோஷமிட்டனர். இரு கட்சியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு நடந்ததுடன் நாற்காலிகளை தூக்கி வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.

    தூத்துக்குடியில் விரிவாக்கம் செய்யப்பட்ட புதிய விமான நிலைய முனைய திறப்பு விழா மற்றும் பல்வேறு திட்டங்கள் தொடக்க விழாவில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி விமானம் மூலம் தூத்துக்குடி விமான நிலையத்துக்கு நேற்று இரவு 7.30 மணிக்கு வந்தார். விழா பந்தலில் திமுக, பாஜக கட்சி தொண்டர்கள் அமருவதற்கு ஏதுவாக தலா 6 ஆயிரம் இருக்கைகள் அமைக்கப்பட்டிருந்தன. மாலை 4 மணி முதல் கட்சியினர், பொதுமக்கள் விழா பந்தலுக்கு வந்தனர். அப்போது முதலே திமுகவினர் முதல்வர் மு.க.ஸ்டாலினை வாழ்த்தியும், பாஜகவினர் பிரதமர் மோடியை வாழ்த்தியும் கோஷமிட்டவாறு இருந்தனர்.

    பிரதமர் 7.50 மணிக்கு விழா மேடைக்கு வந்தார். 8.15 மணிக்கு அவர் பேசத் தொடங்கினார். அப்போதும் இரு கட்சியினரும் கூச்சலிட்டவாறு இருந்தனர். நேரம் செல்லச் செல்ல கூச்சல் அதிகமானது. மேலும், இரு கட்சியினரும் தங்களது கட்சி வண்ணத்துடன் கூடிய துண்டுகளை தலைக்கு மேல் தூக்கி கைகளால் சுழற்றியவாறு கோஷமிட்டபடி இருந்தனர். இதனால் பிரதமர் மோடி பேசுவதை யாராலும் சரியாக கேட்க முடியவில்லை.

    திடீரென இரு கட்சி தொண்டர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. நாற்காலிகள் தூக்கி வீசப்பட்டன. சுமார் அரை மணி நேரத்துக்கு மேலாக இந்த களேபரம் நடந்தது. போலீஸார் இரு கட்சியினரையும் சமாதானப்படுத்த முயன்றும் பயனளிக்கவில்லை. இதனால் விழாவில் பரபரப்பு ஏற்பட்டது.

    பிரதமரை கண்டித்து காங்கிரஸார் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம்: தமிழ்நாட்டுக்கு தரவேண்டிய கல்வி நிதியை மத்திய அரசு தர மறுத்து வருகிறது. இந்நிலையில், தூத்துக்குடியில் விரிவாக்கம் செய்யப்பட்ட விமான நிலையத்தை திறந்து வைக்க வந்த பிரதமர் மோடியை கண்டித்து தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமி்ட்டி சார்பில் மாநகர் மாவட்ட தலைவர் சி.எஸ்.முரளிதரன் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் பழைய பேருந்து நிலையம் முன்பு திரண்டனர்.

    பின்னர் கருப்புக் கொடிகளை கையில் ஏந்தி கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார் போராட்டத்தில் ஈடுபட்ட 33 பேரை கைது செய்தனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    இளையராஜாவின் இசை நிகழ்ச்சியை மெய்மறந்து ரசித்த பிரதமர் மோடி | கங்கைகொண்ட சோழபுரம் முப்பெரும் விழா

    July 27, 2025
    மாநிலம்

    மின்சார துறையைப் பற்றி அமைச்சர் சிவங்கருக்கு எதுவும் தெரியாது: அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி விமர்சனம்

    July 27, 2025
    மாநிலம்

    தண்டவாளம் குறைபாடு, உபகரணம் செயலிழப்புடன் மனித தவறுகளே ரயில் விபத்துக்கு காரணம்: ரயில்வே அமைச்சர்

    July 27, 2025
    மாநிலம்

    ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்துக்கு ஆள் சேர்த்த வழக்கு: முக்கிய குற்றவாளி மீது என்ஐஏ குற்றப்பத்திரிக்கை

    July 27, 2025
    மாநிலம்

    உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிகார அத்துமீறலில் ஈடுபடுகிறார்: முத்தரசன் கண்டனம்

    July 27, 2025
    மாநிலம்

    வழக்கறிஞர் வாஞ்சிநாதன் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை – ஓய்வு நீதிபதிகள் எதிர்ப்பது ஏன்?

    July 27, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • இளையராஜாவின் இசை நிகழ்ச்சியை மெய்மறந்து ரசித்த பிரதமர் மோடி | கங்கைகொண்ட சோழபுரம் முப்பெரும் விழா
    • ஆஸ்ட்ரோவின் சா யூன் வூ தனது ஜூலை 28 இராணுவப் பட்டியலுக்கு முன்னதாக ஆர்டன் சோவுடன் KPOP அரக்கன் ஹண்டர்ஸ் பாடல் இலவச கவர்
    • மின்சார துறையைப் பற்றி அமைச்சர் சிவங்கருக்கு எதுவும் தெரியாது: அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி விமர்சனம்
    • குளியல் முன் உலர்ந்த ஸ்க்ரப்பிங்: இதைச் செய்வது வாரத்திற்கு 3 முறை எப்படி நிணநீர் அமைப்பை செயல்படுத்தலாம் மற்றும் கடுமையான நோய்களின் அபாயத்தைக் குறைக்கலாம் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • பெங்களூரு நகைக்கடையில் துப்பாக்கி முனையில் கொள்ளை: சிசிடிவி காட்சிகளை வைத்து போலீஸார் விசாரணை

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.