Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, August 19
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»“திமுக கூட்டணியில் இருந்து கட்சிகள் விலகும் என்பது பகல் கனவு” – அமைச்சர் ஐ.பெரியசாமி
    மாநிலம்

    “திமுக கூட்டணியில் இருந்து கட்சிகள் விலகும் என்பது பகல் கனவு” – அமைச்சர் ஐ.பெரியசாமி

    adminBy adminJune 12, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    “திமுக கூட்டணியில் இருந்து கட்சிகள் விலகும் என்பது பகல் கனவு” – அமைச்சர் ஐ.பெரியசாமி
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    திண்டுக்கல்: “திமுக கூட்டணியில் இருந்து கட்சிகள் விலகும் என்பது பகல் கனவு,” என்று அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியுள்ளார்.

    திண்டுக்கல் அருகே ஆத்தூர் தொகுதிக்குட்பட்ட சீவல்சரகு கிராமத்தில் ‘கலைஞரின் கனவு இல்ல’ திட்ட பயனாளிகளுக்கு பணி ஆணை வழங்கும் நிகழ்ச்சி இன்று (ஜூன் 12) நடைபெற்றது. பயனாளிகள் 431 பேருக்கு வீடுகள் கட்டுவதற்கான பணி உத்தரவை வழங்கி அமைச்சர் ஐ.பெரியசாமி பேசினார். நிகழ்ச்சியின் முடிவில் செய்தியாளர்களிடம் அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியது: “திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் அதிக இடங்கள் வேண்டும் என கேட்பது அவர்களது உரிமை. கம்யூனிஸ்ட் கட்சியினர் போர்க்கொடி தூக்கவில்லை, மிரட்டவில்லை அவர்களின் உரிமையை கேட்கின்றனர்.

    தமிழ்நாட்டில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் கூட்டணி மிக சிறப்பாக உள்ளது. மக்களுக்கான கூட்டணி இது. இதில் எந்த பிரச்சினையும் இல்லை. திமுக கூட்டணியில் இருந்து கட்சிகள் விலகும் என்பது பகல் கனவு. யாரும் போக மாட்டார்கள். தண்ணீர் இல்லா பாறை கிணற்றில் எப்படி விழுவார்கள்? தண்ணீர் இருந்தால் குதிக்கலாம் தண்ணீர் இல்லாமல் எப்படி குதிக்க முடியும்? எல்லாவற்றிலும் முதன்மையான அரசாக தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. அனைத்து துறைகளும் உயர்ந்துள்ளது. ஆட்சியில் யாரும் இதுவரை பங்கு கேட்டது இல்லை.

    கடந்த ஆறுமுறை ஆட்சிக்கு வந்துள்ளோம். ஏழாவது முறையாகவும் திமுக ஆட்சிதான். இதுவரை ஆட்சியில் யாரும் பங்கு கேட்டது இல்லை. அதற்கான சூழ்நிலையும் இல்லை. தற்போது, சூழ்நிலை நன்றாக உள்ளது. தமிழகத்தில் 234 தொகுதிகளில் 200 தொகுதிகளில் திமுக கூட்டணிதான் வெற்றி பெறப் போகிறது. கூட்டணிகள் அதிகப்படியான இடங்கள் கேட்பது குறித்து முதல்வர் ஸ்டாலின் முடிவு எடுப்பர். எந்தக் கட்சியும் திமுவை விட்டு விலகிச் செல்லாது,” என்று அவர் கூறினார். இந்நிகழ்வில், திண்டுக்கல் ஆட்சியர் செ.சரவணன் தலைமை வகித்தார். திண்டுக்கல் எம்.பி., ஆர்.சச்சிதானந்தம், உதவி ஆட்சியர்(பயிற்சி) வினோதினி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

    August 18, 2025
    மாநிலம்

    “நெற்றியில் திருநீறும் நெஞ்சத்தில் தேசப்பற்றும்” – ரஜினியை நேரில் சந்தித்து வாழ்த்திய நயினார் நாகேந்திரன்!

    August 18, 2025
    மாநிலம்

    கமல்ஹாசனுக்கு கொலை மிரட்டல்: துணை நடிகரின் முன்ஜாமீன் மனுவுக்கு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

    August 18, 2025
    மாநிலம்

    தமிழகம் முழுவதும் பரவும் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்!

    August 18, 2025
    மாநிலம்

    புனரமைப்பு முடிந்து அக்டோபரில் காந்தி நினைவு அருங்காட்சியகம் திறக்கப்படும்: அமைச்சர் சாமிநாதன்

    August 18, 2025
    மாநிலம்

    இலங்கையில் உள்ள தமிழக மீனவர்களை மீட்கக் கோரி ராமேசுவரத்தில் நாளை ரயில் மறியல் போராட்டம்

    August 18, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • முடி வளர்ச்சி: இந்த யோகா போஸில் உட்கார்ந்திருக்கும்போது முடியை சீப்புவது முடி வளர்ச்சியைத் தூண்டும் என்று நம்பப்படுகிறது | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ரூ.6 கோடி பட்ஜெட்டில் உருவாகி ரூ.100+ கோடி வசூலித்த ‘சு ஃப்ரம் சோ’
    • பெண் சுகாதார தயாரிப்புகள்: பெண்பால் கழுவுதல் உண்மையில் வேலை செய்யுமா? யோனி பராமரிப்பு போக்குகள் பற்றிய அதிர்ச்சியூட்டும் உண்மை மற்றும் அவை ஏன் ஆபத்தானவை | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
    • லேசிக் நீங்கள் நினைப்பது போல் பாதுகாப்பானது அல்ல: கொலம்பியா மருத்துவர் எச்சரிக்கிறார், இது நீண்டகால பார்வை இழப்பை ஏற்படுத்தும் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.