Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Friday, August 8
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»திமுக ஆட்சியை விமர்சிக்க திருமாவளவன் தயக்கம்: தமிழிசை கருத்து
    மாநிலம்

    திமுக ஆட்சியை விமர்சிக்க திருமாவளவன் தயக்கம்: தமிழிசை கருத்து

    adminBy adminAugust 7, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    திமுக ஆட்சியை விமர்சிக்க திருமாவளவன் தயக்கம்: தமிழிசை கருத்து
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுச்சேரி: திமுக ஆட்சியின் மீது விமர்சனம் வைக்க திருமாவளவன் தயக்கம் காட்டுவதாக தமிழிசை குற்றம்சாட்டினார்.

    புதுவை முன்னாள் துணைநிலை ஆளுநர் தமிழிசை, கடலூர் நிகழ்வுக்கு சென்று விட்டு புதுவைக்கு இன்று வந்தார். தனியார் விடுதிக்கு வந்த அவரை முதல்வர் ரங்கசாமி சந்தித்து சால்வை அணிவித்தார். அப்போது முதல்வர் ரங்கசாமிக்கு தமிழிசை வாழ்த்து தெரிவித்தார். அப்போது முதல்வர் ரங்கசாமியிடம், “உங்களது ஆசி எனக்கு எப்போதும் வேண்டும். அரசியலிலும் உங்களது ஆசி எனக்கு தேவை” என்று தமிழிசை கூறினார். இதற்கு முதல்வர் ரங்கசாமி கையை உயர்த்தி ஆசி வழங்குவது போல் வாழ்த்துகளை தெரிவித்தார்.

    இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் தமிழிசை கூறியது: “புதுவை முதல்வர் மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்திக் கொண்டிருக்கிறார். ஆதலால் மீண்டும் புதுவையில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி தான் அமையும். தமிழகமும்,புதுவையும் வரும் 2026-ல் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில்தான் பயணிக்கும்.

    புதுவையில் இந்த ஆட்சி தொடரும். தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வரும்.புதுவைக்கு மாநில அந்தஸ்து பெறுவதற்கு சில வழிமுறைகள் இருக்கிறது. நானும் கோப்பை அப்போது அனுப்பினேன். நடைமுறை என்னவோ அதையொட்டி மத்திய அரசு செயலாற்றும்.

    பட்டியலின மக்களுக்காக பாடுபடுவேன் என்று கூறும் திருமாவளவன் போன்றவர்கள் காதல் விவகார கொலைக்கு கண்டனம் சொல்கிறார்கள் தவிர, ஆட்சியின் மீது கடுமையான விமர்சனத்தை வைக்க தயங்குகிறார்கள். அறிவாலயத்துக்குச் சென்று எப்படி இருந்தாலும் கூட்டணியில் இருப்போம் எனக் கூறுகிறார்கள்.

    இக்கொலைகள் தடுக்கப்பட வேண்டும். வேங்கை வயல் போன்ற நிகழ்வு நடக்கக் கூடாது என உறுதியாக கூறும் தன்மை அவரிடம் இல்லை. எதிர்ப்பை வலிமையாக சொல்வதில்லை. பாய்ந்து வரும் விடுதலைச் சிறுத்தைகள் இங்கு பதுங்குகிறார்கள்.

    தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. ரவிக்குமார் எம்.பி புதுவையில் பாதுகாப்புடன் இருக்கிறார். காவல் துறை அதிகாரிகள் கொலை செய்யப்படுகிறார்கள். காவல் நிலையத்துக்குள் தற்கொலை நடந்துள்ளது மிகுந்த வேதனை தருகிறது. வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற மத்திய அரசின் திட்டத்தின் காப்பி தான் உங்களுடன் ஸ்டாலின். நான்கரை ஆண்டுகளாக என்ன செய்தார்கள் என மக்கள் கேள்வி கேட்கிறார்கள்” என்று தெரிவித்தார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    சென்னை: போலீஸ் பெயரில் போலி அடையாள அட்டையுடன் வலம் வந்த நகைக்கடை உரிமையாளர் கைது

    August 8, 2025
    மாநிலம்

    “தேவை எனும்போது என்கவுன்ட்டரை தவிர்க்க முடியாது” – அமைச்சர் ரகுபதி

    August 7, 2025
    மாநிலம்

    “ஒரே கொள்கை எனில் திமுகவிலேயே அதன் கூட்டணி கட்சிகள் இணைந்து விடலாமே!” – பழனிசாமி பேச்சு

    August 7, 2025
    மாநிலம்

    மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு ரேஷன் பொருட்கள் ‘டோர் டெலிவரி’ – ஆக.12-ல் தொடக்கம்

    August 7, 2025
    மாநிலம்

    திமுக மாநகர போக்குவரத்து கழக ஊழியர் முன்னேற்ற சங்க தேர்தலுக்கு இடைக்காலத் தடை

    August 7, 2025
    மாநிலம்

    இரட்டை இலக்க வளர்ச்சி பெற்ற ஒரே மாநிலம் தமிழகம் என்பது மாயை: இபிஸ் அடுக்கும் காரணங்கள்

    August 7, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ஜன்னல் இல்லாத அறைகள் மற்றும் இருண்ட மூலைகளுக்கு 9 சிறந்த உட்புற தாவரங்கள் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • “தென்னிந்திய நடன இயக்குநரால் அவமதிக்கப்பட்டேன்” – இஷா கோபிகர் பகிர்வு
    • சென்னை: போலீஸ் பெயரில் போலி அடையாள அட்டையுடன் வலம் வந்த நகைக்கடை உரிமையாளர் கைது
    • 60% பெண்கள் பிரசவத்தைப் பற்றி பயப்படுகிறார்கள்: இங்கே சிலர் இல்லை | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • அமெரிக்காவின் எந்த சட்டத்தையும் இந்தியா மீறவில்லை: முன்னாள் மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.