Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Thursday, August 28
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»திமுக ஆட்சியில் பாதுகாப்பின்றி தமிழக மக்கள் தவிப்பு: தலைவர்கள் கண்டனம்; தேமுதிக, தவெக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு
    மாநிலம்

    திமுக ஆட்சியில் பாதுகாப்பின்றி தமிழக மக்கள் தவிப்பு: தலைவர்கள் கண்டனம்; தேமுதிக, தவெக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

    adminBy adminJuly 3, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    திமுக ஆட்சியில் பாதுகாப்பின்றி தமிழக மக்கள் தவிப்பு: தலைவர்கள் கண்டனம்; தேமுதிக, தவெக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: ​வி​சா​ரணை​யின்​போது கோ​யில் காவலர் உயி​ரிழந்த சம்​பவத்​துக்கு அரசி​யல் கட்​சித் தலை​வர்​கள் கடும் கண்​டனம் தெரி​வித்​துள்​ளனர். காவலர் அஜித்​கு​மார் மரணத்​துக்கு நீதி கேட்டு தேமு​திக, தவெக உள்​ளிட்ட கட்​சிகள் ஆர்ப்​பாட்​டம் அறி​வித்​துள்​ளன.

    அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி: இது முழுக்க முழுக்க மு.க.ஸ்​டா​லின் தலை​மையி​லான திமுக அரசின் காவல்​துறை அராஜகத்​தால் நடந்த கொலை. அவரது ஆட்​சி​யில் நடந்த 25 காவல் மரணங்​களும் அப்​பட்​ட​மான மனிதஉரிமை மீறல். இதை தேசிய மனித உரிமை​கள் ஆணை​யம் விசா​ரிக்க வேண்​டும். பதில் சொல்ல வேண்​டிய முதல்​வர் எங்கே ஒளிந்து கொண்​டிருக்​கிறார். சிபிசிஐடி விசா​ரணை மீது துளி கூட நம்​பிக்​கை​யில்​லை. அவரது தறிகெட்ட ஆட்​சி​யில் பாது​காப்​பின்றி தமிழக மக்​கள் தவிக்​கின்​றனர்.

    தமிழக பாஜக தலை​வர் நயி​னார் நாகேந்​திரன்: அஜித்​கு​மார் மரணம் குறித்து தேசிய மனித உரிமை ஆணைய கண்​காணிப்​பில் உயர்​நிலைக் குழு அமைத்​து, சுதந்​திர​மான முறை​யில் விசா​ரணை நடத்​தப்பட வேண்​டும். கடந்த 5 ஆண்​டு​களில் காவல்​நிலைய விசா​ரணை​யின்​போது நிகழ்ந்த மரணம் குறித்து தமிழக அரசிடம் ஆணை​யம் அறிக்கை கேட்க வேண்​டும். இதில் பாதிக்​கப்​பட்ட குடும்​பத்​தினருக்கு இழப்​பீடு கிடைப்​பதை உறுதி செய்ய வலி​யுறுத்தி தேசிய மனித உரிமை​கள் ஆணை​யத்​துக்கு கடிதம் அனுப்​பப்​பட்​டுள்​ளது.

    பாமக தலை​வர் அன்​புமணி: அஜித்​கு​மார் கொலை வழக்​கில் நியா​யம் வழங்​கப்​படும் என்று ஒரு​புறம் முதல்​வர் மு.க.ஸ்​டா​லின்

    கூறி வரும் நிலை​யில், இன்​னொரு​புறம் அவரது கட்​டுப்​பாட்​டில் உள்ள காவல்​துறை இந்த படு​கொலையை இயற்கை மரண​மாக மாற்ற துடித்​துக் கொண்​டிருக்​கிறது. தொடர்​புடைய உயர​தி​காரி​களும் கைது செய்​யப்​பட்​டு, வழக்​கில் தீர்ப்பு வழங்​கப்​படும் வரை பிணை வழங்​கப்​ப​டா​மல் இருப்​பது உறுதி செய்​யப்பட வேண்​டும்.

    முன்​னாள் முதல்​வர் ஓ.பன்​னீர்​செல்​வம்: காவல் துறை​யின் கட்​டுப்​பாட்​டில் இருக்​கும்​போது இனி மரணங்​கள் ஏற்​ப​டாது என்று 2022-ம் ஆண்டு தமிழக சட்​டப் பேர​வை​யில் முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் உறுதி அளித்​தார். அதற்​குப் பிறகு கிட்​டத்​தட்ட 25 மரணங்​கள் ஏற்​படு​வதை பார்க்​கும்​போது, காவல் துறை முதல்​வரின் கட்​டுப்​பாட்​டில் இருக்​கிறதா என்ற சந்​தேகம் எழுந்​துள்​ளது. காவல் நிலை​யத்​துக்கு உள்​ளே​யும், வெளி​யே​யும் பாது​காப்பு இல்லை என்ற அவல நிலை தமிழகத்​தில் ஏற்​பட்டு இருக்​கிறது.

    விசிக பொதுச்​செய​லா​ளர் சிந்​தனைச் செல்​வன்: விசா​ரணை​யின்​போது மரணங்​களே இல்​லாத தமிழக​மாக நம்​மாநிலம் தலைநிமிர வேண்​டும் என முதல்​வர் தொடர்ந்து வலி​யுறுத்​தி​யும் அறி​வுறுத்​தி​யும் கூட லாக்​கப் படு​கொலைகள் தொடர்​வது வேதனைக்​குரிய​தாக இருக்​கிறது. திரு​புவனம் அஜித்​கு​மார் காவல் விசா​ரணை என்ற பெயரில் கொல்​லப்​பட்​டிருப்​பது பெரும் கண்​டனத்​துக்​குரியது. முதல் முறை​யாக இத்​தகைய நேர்​வில் கொலை வழக்கு பதிவு செய்​யப்​பட்​டிருப்​பதும், காவலர்​கள் கைது செய்​யப்​பட்​டிருப்​பதும் நம்​பிக்​கையை ஊட்​டு​வ​தாக அமைந்​திருக்​கிறது.

    தவெக தலை​வர் விஜய்: எந்த அளவுக்​குக் கொடூர​மாக, மனி​தாபி​மானம் அறவே அற்​று, சாமானியருக்கு அநீதி இழைக்​கும் அறமற்ற துறை​யாக மு.க.ஸ்​டா​லினின் நேரடிக் கண்​காணிப்​பில் இயங்​கும் காவல் துறை நடந்​து​ கொள்​கிறது. காவல்​நிலைய மரணம் தொடர்​பான வெள்ளை அறிக்​கையை முதல்​வர் உடனடி​யாக வெளி​யிட வேண்​டும். இத்​தகைய கொடூர சம்​பவம் இனி ஒரு​போதும் நடை​பெறாது என மக்​களுக்கு உடனடி​யாக உறு​தி​யும் உத்​தர​வாத​மும் முதல்​வர் அளிக்க வேண்​டும்.

    ஆர்ப்​பாட்​டம்: இதனிடையே இச்​சம்​பவத்தை கண்​டித்து வரும் 5-ம் தேதி சிவகங்கை மாவட்​டம், திருப்​புவனம் வெள்​ளிச் சந்தை திடலில் மாலை 4 மணி​யள​வில் தேமு​திக பொதுச்​செய​லா​ளர் பிரேமலதா தலை​மை​யில் கண்டன ஆர்ப்​பாட்​டம் நடை​பெறும் என தேமு​திக தலை​மையகம் வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறப்​பட்​டுள்​ளது.

    இதபோல் தவெக பொதுச்​செய​லா​ளர் என்​.ஆனந்த் வெளி​யிட்ட அறிக்​கை​யில், “மரணத்​துக்கு நீதி கேட்​டும் உயர் நீதி​மன்​றத்​தின் நேரடிக் கண்​காணிப்​பில் சிறப்​புப் புல​னாய்​வுக் குழு அமைத்து நீதி வி​சா​ரணை நடத்த வேண்​டும் என வலி​யுறுத்​தி​யும் சென்​னை​யில்​ நாளை (ஜூலை 3) கண்​டன ஆர்ப்​பாட்​டம்​ நடை​பெறும்” என தெரிவித்​துள்​ளார்​.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    “2006 தேர்தலில் விஜயகாந்த் போல 2026-ல் விஜய் தாக்கம் ஏற்படுத்துவார்” – தினகரன் கணிப்பு

    August 28, 2025
    மாநிலம்

    “திமுக ஆட்சிக்கு எதிரான அவதூறுகளில் சத்தும் இல்லை; சாரமும் இல்லை” – முதல்வர் ஸ்டாலின்

    August 28, 2025
    மாநிலம்

    செந்தில் பாலாஜி சகோதரர் அமெரிக்கா செல்வதற்கான நிபந்தனைகளை மாற்றி ஐகோர்ட் உத்தரவு

    August 28, 2025
    மாநிலம்

    குடியரசுத் தலைவர் வருகையை முன்னிட்டு சென்னையில் செப்.2, 3 தேதிகளில் ‘ட்ரோன்’ பறக்க தடை

    August 28, 2025
    மாநிலம்

    கண்ணப்பர் திடலில் நாய் கருத்தடை மையம் அமைக்க தடை கோரிய வழக்கு: சென்னை மாநகராட்சி பதிலளிக்க உத்தரவு

    August 28, 2025
    மாநிலம்

    “மதுரை மேயர் இந்திராணி உடனடியாக பதவி விலக வேண்டும்” – செல்லூர் ராஜூ

    August 28, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • HDL VS LDL Vs ட்ரைகிளிசரைடுகள்: கொழுப்பின் ஒவ்வொரு வடிவத்தையும் உகந்ததாக நிர்வகிப்பது எப்படி | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • எவரெஸ்ட் மலையை விட உயரமானவர்: விஞ்ஞானிகள் பூமியின் மிகப்பெரிய மலைகளை கண்டுபிடிப்பார்கள், ஆனால் அவற்றை யாரும் பார்க்க முடியாது | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • “2006 தேர்தலில் விஜயகாந்த் போல 2026-ல் விஜய் தாக்கம் ஏற்படுத்துவார்” – தினகரன் கணிப்பு
    • உங்கள் தோலில் இறுக்கமான ஆடைகளை அணிவதன் ஆபத்தான விளைவுகள், இரத்த ஓட்டம் மற்றும் செரிமானம் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • “திமுக ஆட்சிக்கு எதிரான அவதூறுகளில் சத்தும் இல்லை; சாரமும் இல்லை” – முதல்வர் ஸ்டாலின்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.