Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, August 26
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»திமுக ஆட்சியின் அவலங்களை மக்களிடம் அதிமுகவினர் கொண்டு சேர்க்க வேண்டும்: இபிஎஸ் அறிவுறுத்தல்
    மாநிலம்

    திமுக ஆட்சியின் அவலங்களை மக்களிடம் அதிமுகவினர் கொண்டு சேர்க்க வேண்டும்: இபிஎஸ் அறிவுறுத்தல்

    adminBy adminJune 27, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    திமுக ஆட்சியின் அவலங்களை மக்களிடம் அதிமுகவினர் கொண்டு சேர்க்க வேண்டும்: இபிஎஸ் அறிவுறுத்தல்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: திமுக அரசின் அவலங்களை மக்களிடம் கொண்டுபோய் சேர்க்க வேண்டும் என்று அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பொதுச்செயலாளர் பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் நேற்றும் தொடர்ந்தது.

    இதன்படி காலையில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, சேலம், திருச்சி, நீலகிரி, கோவை, திருப்பூர் மாவட்ட நிர்வாகிகளும் பிற்பகலில் திருப்பத்தூர், வேலூர், திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை மாவட்ட நிர்வாகிகளும் பங்கேற்றனர்.

    இக்கூட்டத்தில் பூத் கிளை நிர்வாகிகள் நியமனத்தில் உள்ள முன்னேற்றம் குறித்து மாவட்டவாரியாக பழனிசாமி கேட்டறிந்தார். பின்னர் அவர் கூட்டத்தில் பேசியதாவது: திமுக அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகள், தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாதது குறித்து மாவட்ட செயலாளர்கள் அதிக அளவில் ஆர்ப்பாட்டங்கள், உண்ணாவிரதங்களை நடத்த வேண்டும். ஏராளமான திண்ணை பிரச்சாரங்களை நடத்தி, திமுக அரசின் அவலங்களை மக்களிடம் விளக்க வேண்டும். கட்சிக்குள் இளைஞர்களை அதிக அளவில் ஈர்க்க வேண்டும்.

    கட்சியில் உள்ள ஒவ்வொரு அணித் தலைவர்களும், அந்த அணியின் துறை சார்ந்த திமுக அரசின் மக்கள் விரோத செயல்பாடுகளை அச்சிட்டு, துண்டு பிரசுரங்களை மக்களிடம் விநியோகித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தி, இந்த ஆட்சியை அகற்ற தீவிர பணியாற்ற வேண்டும். உங்களுக்கு தான் துறை சார்ந்த தவறுகள் தெரியும். அதை தலைமைக்கும், மாவட்ட செயலாளர்களுக்கும் தெரிவித்து, திமுக அரசுக்கு எதிரான பிரச்சாரத்தில் அணித் தலைவர்கள் இணைந்து பணியாற்ற வேண்டும்.

    அனைத்து தொகுதிகளிலும் தேர்தல் பணிகளை இன்றே தொடங்கிவிட வேண்டும். பூத் கிளை நிர்வாகிகளை 100 சதவீதம் நியமித்து, அதுதொடர்பான பட்டியலை கட்சித் தலைமைக்கு ஜூலை 10-ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். இதை செய்யாத மாவட்ட செயலாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    விரைவில் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செல்ல இருக்கிறேன். அதற்கான ஏற்பாடுகளுடன் மாவட்ட செயலாளர்கள் தயாராக இருக்க வேண்டும். உள்ளூர் பிரச்சினைகள் குறித்த விவரங்களை விரல் நுணியில் வைத்திருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இக்கூட்டத்தில் துணை பொதுச்செயலாளர்கள் கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், தலைமை நிலைய செயலாளர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    ஸ்ரீவில்லி. ஆவின் கூட்டுறவு பெயர்களை சட்டவிரோதமாக பயன்படுத்திய பால்கோவா கடைகளுக்கு நோட்டீஸ்

    August 26, 2025
    மாநிலம்

    கொல்லம் – மதுரை ரயில்கள் சேவையில் நேர மாற்றம்: பயணிகள் மகிழ்ச்சி

    August 26, 2025
    மாநிலம்

    ‘கோவை மாஸ்டர் பிளான் 2041’ விஞ்ஞான ஊழலுக்கு வழிவகுக்கும்: இபிஎஸ் குற்றச்சாட்டு

    August 26, 2025
    மாநிலம்

    “ஆட்சியில் பங்கு என்பது எங்களின் பிரதான முடிவு” – கிருஷ்ணசாமி தகவல்

    August 26, 2025
    மாநிலம்

    போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை அபகரித்தார் போனி கபூர்: எதிர்மனுதாரர் குற்றச்சாட்டு

    August 26, 2025
    மாநிலம்

    கிருஷ்ணகிரி: மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி 100 வீடுகளுக்கு விநாயகர் சிலைகள் வழங்கிய இஸ்லாமியர்கள்

    August 26, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ஸ்ரீவில்லி. ஆவின் கூட்டுறவு பெயர்களை சட்டவிரோதமாக பயன்படுத்திய பால்கோவா கடைகளுக்கு நோட்டீஸ்
    • கேட் மிடில்டனின் புதிய பொன்னிற சகாப்தம் இங்கே உள்ளது, அது அழகாக இருக்கிறது – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • கொல்லம் – மதுரை ரயில்கள் சேவையில் நேர மாற்றம்: பயணிகள் மகிழ்ச்சி
    • ஆப்டிகல் மாயை ஆளுமை சோதனை: பூனை அல்லது தீவு? நீங்கள் முதலில் பார்ப்பது உங்கள் உள் பலங்கள் மற்றும் பலவீனங்கள் – இந்தியாவின் நேரங்கள் என்றால் வெளிப்படுத்துகிறது
    • ஜம்முவில் கனமழை: வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 9 பேர் உயிரிழப்பு

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.