Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, August 11
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»“திமுகவினரின் மனங்களில் இருந்து ‘காலனி’ எப்போது அகலும்?” – எல்.முருகன் கேள்வி
    மாநிலம்

    “திமுகவினரின் மனங்களில் இருந்து ‘காலனி’ எப்போது அகலும்?” – எல்.முருகன் கேள்வி

    adminBy adminApril 29, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    “திமுகவினரின் மனங்களில் இருந்து ‘காலனி’ எப்போது அகலும்?” – எல்.முருகன் கேள்வி
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: “ஆவணங்களில் இருந்து காலனியை நீக்கினால் போதுமா? திமுகவினரின் மனங்களில் இருந்து ‘காலனி’ எப்போது அகலும்?” என்று மத்திய இணை அமைச்சரும், தமிழக பாஜக மூத்த தலைவருமான எல்.முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆவணங்களில் இருந்து காலனியை நீக்கினால் போதுமா? திமுகவினரின் மனங்களில் இருந்து ‘காலனி’ எப்போது அகலும்? ஆதிக்கத்தின் அடையாளமாகவும், தீண்டாமையின் குறியீடாகவும், வசை சொல்லாகவும் இருப்பதால் ‘காலனி’ என்ற சொல் இனிமேல் அரசு ஆவணங்களில் இருந்து நீக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் அறிவித்து இருக்கிறார். வாய் ஜாலங்களில் வித்தகர்களான திமுகவினர் அறிவித்து வரும் வெற்று விளம்பர அறிவிப்புகளின் வரிசையில் இதுவும் ஒன்று.

    ‘காலனி’ பெயர் நீக்கம் என்பது புரட்சி என்று தம்பட்டம் அடிக்கும் திமுகவினரை பார்த்து நான் எழுப்பும் கேள்வி இதுதான். கட்சியிலும் ஆட்சியிலும் காலனிகளை உருவாக்கி வைத்திருக்கிறாரே முதல்வர் மு.க.ஸ்டாலின், அதனை நீக்க என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறார்? சட்டப்பேரவையில் இந்த அறிவிப்பை முதல்வர் வெளியிடும் அதே நாளில், திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அருகே ஏர்ணாமங்கலம் ஊராட்சியில் உள்ள பாணம்பட்டு கிராமத்தில் குடிநீர் தொட்டியின் மீது மர்ம நபர்கள் மனிதக் கழிவை பூசிவிட்டுச் சென்றுள்ளனர். காலையில் தண்ணீர் பிடிக்கச் சென்ற பொது மக்கள் அதிர்ச்சி அடைந்து காவல் துறையிடம் புகார் அளித்துள்ளனர்.

    தமிழகத்தில் நடைபெறும் இதுபோன்ற கொடூரச் செயல்கள், முதல்வரின் கவனத்திற்கு வருகிறதா? இந்த திருட்டு, ஏமாற்று, மோசடி திராவிட மாடல் ஆட்சியில் பட்டியலின மக்கள் படும் துன்பங்கள் ஒன்றா, இரண்டா? எதற்கு தான் இதுவரை தீர்வு கிடைத்துள்ளது. கடந்த 2022-ம் ஆண்டு, டிசம்பர் 16-ம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயலில் குடிநீர் தேக்கத் தொட்டியில் சமூக விரோதிகள் மலம் கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஆனால், இந்த வழக்கில் 2 ஆண்டுகளுக்குப் பிறகு புகார் கொடுத்தவர்களையே குற்றவாளிகளாக்கி குற்றப் பத்திரிகை தாக்கல் செய்த கொடூரம் அரங்கேறியது.

    தமிழ்நாடு முழுவதும் 445 கிராமங்களில் தீண்டாமைக் கொடுமை நிலவுவதாகவும் அடையாளம் காணப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் குடிநீர் தொட்டிகளில் மலம், மாட்டுச்சாணம் போன்றவற்றை கலக்கும் நிகழ்வுகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. தமிழகத்தின் பல பகுதிகளில் தீண்டாமை, இரட்டைக்குவளை, இரட்டைச் சுடுகாடு, கோயில்களுக்குள் பட்டியலின மக்கள் செல்ல முடியாத சூழல் நிலவுகிறது.

    உலகின் எந்தப் பகுதியிலும் இல்லாத அளவுக்கு பட்டியலின மக்களுக்கு மாபெரும் சமூக அநீதி இழைக்கப்படுவது இந்த திராவிட மாடல் ஆட்சியில் தான். தமிழகத்தில் பட்டியலின மக்கள் மீது நடக்கும் கொடூர செயல்களுக்கு தீர்வு காண, ஆதிக்க எண்ணம் கொண்ட திமுகவினருக்கு எப்படி மனம் வரும்? சாதனை ஆட்சி நடத்துவதாக சட்டசபையில் பெருமை பேசும் முதல்வரும், திமுகவினரும் தமிழகத்தில் நடக்கும் இதுபோன்ற அவலங்களுக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்.

    இந்தக் கொடூர, அவல ஆட்சியின் 2.0-வை மக்கள் பார்க்க வேண்டும் என மு.க. ஸ்டாலின் விருப்பப்படுகிறார். ஆனால் இந்த கையாலாகாத, திராணியற்ற திமுக அரசை வீட்டுக்கு அனுப்பவே மக்கள் விரும்புகிறார்கள்” என்று எல்.முருகன் கூறியுள்ளார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    திமுக அரசின் செயல்பாடுகள்தான் ஆக்கப்பூர்வ அஞ்சலி: வசந்தி தேவி நினைவேந்தல் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் கருத்து

    August 11, 2025
    மாநிலம்

    ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின்போது முப்படைகளுக்கு முழு சுதந்திரம் அளித்த மத்திய அரசு: ராணுவ தளபதி நெகிழ்ச்சி

    August 11, 2025
    மாநிலம்

    அனைத்து கிராம ஊராட்சிகளிலும் ஆக.15-ல் கிராமசபைக் கூட்டம் நடத்த ஏற்பாடு தீவிரம்

    August 11, 2025
    மாநிலம்

    2026 சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி கூட்டணி அமைப்பேன்: மகளிர் பெருவிழா மாநாட்டில் ராமதாஸ் உறுதி

    August 11, 2025
    மாநிலம்

    கவின் படுகொலையை கண்டிக்காத திமுக, அதிமுக, பாஜகவை ஒரே தட்டில் வைத்து தான் பார்க்க வேண்டும்: கிருஷ்ணசாமி

    August 10, 2025
    மாநிலம்

    களைகட்டிய பாம்பன் ‘கடல் ஓசை’ சமுதாய வானொலி 10-ம் ஆண்டு தொடக்க விழா!

    August 10, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • பொறியியல் கலந்தாய்வு 3-வது சுற்றில் 64,629 பேருக்கு இடங்கள் ஒதுக்கீடு
    • புருவம் த்ரெட்டிங் உங்கள் கல்லீரலை அபாயப்படுத்துமா? பார்லர் வருகைகளிலிருந்து ஹெபடைடிஸ் பயம் குறித்து டாக்டரின் ரீல் எச்சரிக்கிறது | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • திமுக அரசின் செயல்பாடுகள்தான் ஆக்கப்பூர்வ அஞ்சலி: வசந்தி தேவி நினைவேந்தல் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் கருத்து
    • 30 மற்றும் 40 களில் உள்ளவர்கள் உடற்பயிற்சிகளின் போது ஏன் சரிந்து கொண்டிருக்கிறார்கள்: ஒரு இருதயநோய் நிபுணர் மறைக்கப்பட்ட அபாயங்களை விளக்குகிறார் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • எண்ணெய் இல்லாத உணவு ஏன் பிரபலமாக உள்ளது: 6 உங்கள் உடல் மற்றும் தோலுக்கு ஆச்சரியமான நன்மைகள் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.