Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Sunday, August 10
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»“திமுகவிடமிருந்து ஒரு பொதுத் தொகுதியை கேட்டுப்பெற திருமாவளவன் பாடுபடுகிறார்” – சீமான்
    மாநிலம்

    “திமுகவிடமிருந்து ஒரு பொதுத் தொகுதியை கேட்டுப்பெற திருமாவளவன் பாடுபடுகிறார்” – சீமான்

    adminBy adminAugust 9, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    “திமுகவிடமிருந்து ஒரு பொதுத் தொகுதியை கேட்டுப்பெற திருமாவளவன் பாடுபடுகிறார்” – சீமான்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    மதுரை: திமுகவிடமிருந்து ஒரு பொதுத்தொகுதியை கேட்டுப்பெற திருமாவளவன் என்ன பாடுபடுகிறார் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று மதுரை விமான நிலையத்தில் தெரிவித்தார்.

    மதுரை விமான நிலையத்திற்கு இன்று வருகை தந்த நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது: தமிழ்நாட்டில் தமிழர்களால் வாக்கு செலுத்தி தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு உள்ளது. இதில் எங்கிருந்து திராவிட மாடல் ஆட்சி வருகிறது. தமிழர் அறம் சார்ந்த ஆட்சி என திமுகவால் சொல்ல முடியவில்லை. திராவிடம் என்பது தமிழ்ச்சொல் அல்ல. அது சமஸ்கிருதத்திலிருந்து வந்தது.

    பிராமண எதிர்ப்பை காட்டி திராவிட இருப்பை காட்டியவர்கள் திமுக. பெரியார், அண்ணா வழியில் வந்தவர்கள் செய்யாதததை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா செய்தார். திமுகவில் ஆ.ராசா வெற்றி பெற்ற பெரம்பலூர் தொகுதி பொதுத்தொகுதியானபோது அங்கு ஆ.ராசாவை நிறுத்தாமல் நீலகிரி தனித்தொகுதியில் போட்டியிடுமாறு கருணாநிதி செய்தார். ஆனால் ஜெயலலிதா, திருச்சி பொதுத்தொகுதியில் தலித் எழில்மலையை நிறுத்தி வெற்றி பெறச் செய்தார். தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த தனபாலனை சபாநாயகராக்கினார், உணவுத்துறை அமைச்சராக்கினார். இதுதானே மாறுதல். இதைக்கூட திமுக செய்யவில்லை. இந்த தேர்தலிலாவது திமுக பொதுத்தொகுதியில் ஆதித்தமிழர்களை நிறுத்துவார்களா?

    திமுகவிடமிருந்து ஒரு பொதுத்தொகுதியை கேட்டுப்பெற திருமாவளவன் என்ன பாடுபடுகிறார். பொதுக்குளத்தில் நீங்கள் எல்லாம் குளிக்கக்கூடாது என்பதுபோல் பொதுத்தொகுதிக்கு நீங்கள் எல்லாம் ஆசைப்படக்கூடாது என்று திமுக சொன்னது பதிவாகியுள்ளது. ஆரியம், திராவிடம் ஒன்றுதான். ஆரியம், திராவிடம் இரண்டும் ஒன்றுதான் வேறல்ல. தேசிய கல்விக் கொள்கையும், மாநிலக் கல்விக்கொள்கையும் ஒன்றுதான். வேறு வேறு பெயரில் உள்ளது. எட்டாம் வகுப்பு வரை தேர்வு இல்லாத தேர்ச்சி கொடுக்க வேண்டும் நமது கல்வி அறிஞர்களின் கொள்கை.

    தேசியக் கல்விக்கொள்கையை மொழி பெயர்த்துள்ளது திமுக. அறிவு வளர்க்கும் கல்வியும், உயிரை காக்கும் மருத்துவமும் இருகண்கள்தான். ஆனால் லட்சக்கணக்கில் பணம் கொட்டிதான் படிக்க வேண்டியுள்ளது. திமுக ஆட்சியில் கல்வியும், மருத்துவமும் கொடிய புண்ணாக இருக்கிறது. அறம் சார்ந்து வாழ்ந்த தமிழர்கள் கூட்டத்தை அரக்கர்கள் என கிங்டம் திரைப்படத்தில் கொச்சைப்படுத்தியுள்ளனர். அதனை தமிழக திரையரங்குகளில் ஓடவிடமாட்டோம்” இவ்வாறு அவர் கூறினார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    கோவையில் பைக் டாக்ஸி, வாடகைக்கு பயன்படுத்தப்பட்ட சொந்த கார்கள் பறிமுதல்: ரூ.1.8 லட்சம் அபராதம் விதிப்பு

    August 10, 2025
    மாநிலம்

    வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் 15-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு

    August 10, 2025
    மாநிலம்

    சிறப்பு எஸ்ஐ கொலை வழக்கில் குற்றவாளியை என்கவுன்டர் செய்தது மாபெரும் தவறு: கார்த்தி சிதம்பரம் குற்றச்சாட்டு

    August 10, 2025
    மாநிலம்

    தமிழகத்தின் வளர்ச்சியை பார்த்து விரைவில் இந்த தேசமே வியப்படையும்: முதல்வர் ஸ்டாலின்

    August 9, 2025
    மாநிலம்

    “நான் சொல்வதற்கு ஏதுமில்லை” – அன்புமணியின் பொதுக்குழு குறித்து ராமதாஸ் விரக்தி

    August 9, 2025
    மாநிலம்

    ராமேசுவரம் மீனவர்கள் ஏழு பேர் கைது: தங்கச்சிமடத்தில் சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு

    August 9, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • கோவையில் பைக் டாக்ஸி, வாடகைக்கு பயன்படுத்தப்பட்ட சொந்த கார்கள் பறிமுதல்: ரூ.1.8 லட்சம் அபராதம் விதிப்பு
    • உக்ரைன் போர் நிறுத்தம் குறித்து பேச ட்ரம்ப் – புதின் ஆக.15-ம் தேதி சந்திப்பு
    • வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் 15-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு
    • சிறப்பு எஸ்ஐ கொலை வழக்கில் குற்றவாளியை என்கவுன்டர் செய்தது மாபெரும் தவறு: கார்த்தி சிதம்பரம் குற்றச்சாட்டு
    • தமிழகத்தின் வளர்ச்சியை பார்த்து விரைவில் இந்த தேசமே வியப்படையும்: முதல்வர் ஸ்டாலின்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.