Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Thursday, September 18
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»திண்டுக்கல், மதுரை, சிவகங்கை ஒரு போக பாசனத்துக்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
    மாநிலம்

    திண்டுக்கல், மதுரை, சிவகங்கை ஒரு போக பாசனத்துக்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு

    adminBy adminSeptember 18, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    திண்டுக்கல், மதுரை, சிவகங்கை ஒரு போக பாசனத்துக்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    ஆண்டிபட்டி: திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மாவட்ட ஒரு போக பாசனத்துக்காக வைகை அணையில் இருந்து இன்று (செப்.18) காலை தண்ணீர் திறக்கப்பட்டது. இதன் மூலம் ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 2 ஏக்கர் நிலங்கள் பலன்பெற உள்ளன.

    வைகை அணையில் இருந்து பெரியாறு பாசனப்பகுதியில் ஒரு போக பாசன பரப்பாகிய 85 ஆயிரத்து 563 ஏக்கர் நிலங்கள் மற்றும் திருமங்கலம் பிரதான கால்வாயின் கீழ் உள்ள ஒரு போக பாசனப்பரப்பாகிய 19 ஆயிரத்து 439 ஏக்கர் என்று மொத்தம் ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 2 ஏக்கர் நிலங்கள் பலன்பெற்று வருகின்றன. இப்பகுதி பாசனத்துக்க நீர் திறக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதனைத் தொடர்ந்து இன்று காலை வைகை அணையில் இருந்து நீர் திறக்கப்பட்டது.

    வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தலைமை வகித்து தண்ணீரை திறந்து வைத்தார். தேனி, மதுரை, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்கள் ரஞ்ஜீத்சிங், கேஜே.பிரவீன்குமார், செ.சரவணன், தேனி எம்பி.தங்கதமிழ்ச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விநாடிக்கு ஆயிரத்து 130 கனஅடி திறக்கப்பட்டது. இதே அளவு 45 நாட்களுக்கும், அடுத்த 75 நாட்களுக்கு முறை வைத்தும் மொத்தம் 120 நாட்களுக்கு 8 ஆயிரத்து 493 மில்லியன் கனஅடிநீர் திறக்கப்பட உள்ளது.

    இதன் மூலம் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை வட்டத்துக்கு உட்பட்ட 53 ஏக்கர் நிலங்களும், மதுரை மாவட்டம் வாடிப்பட்டி வட்டத்துக்கு உட்பட்ட 5ஆயிரத்து 697 ஏக்கர் நிலங்களும், மதுரை வடக்கு வட்டத்துக்கு உட்பட்ட 24 ஆயிரத்து 811 ஏக்கர் நிலங்களும், மேலூர் வட்டத்துக்கு உட்ட 48 ஆயிரத்து 963 ஏக்கர் நிலங்களும், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் வட்டத்துக்கு உட்பட்ட 478 ஏக்கர்நிலங்களும் சிவகங்கை வட்டத்துக்கு உட்ட 5 ஆயிரத்து 561 ஏக்கர் நிலங்களும், திருமங்கலம் பிரதானக் கால்வாயின் கீழ் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை வட்டத்துக்கு ட்பட்ட 146 ஏக்கர் நிலங்களும், மதுரை மாவட்டம் வாடிப்பட்டி வட்டத்துக்கு உட்பட்ட ஆயிரத்து 201 ஏக்கர் நிலங்களும், உசிலம்பட்டி வட்டத்துக்கு உட்பட்ட 13 ஆயிரத்து 723 ஏக்கர் நிலங்களும், திருமங்கலம் வட்டத்துக்கு உட்பட்ட 3 ஆயிரத்து 982 ஏக்கர் நிலங்களும், பேரையூர் வட்டத்துக்கு உட்பட்ட 387 ஏக்கர் நிலங்களும் என மொத்தம் ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 2 ஏக்கர் நிலங்கள் இதன் மூலம் பாசன வசதி பெற உள்ளன.

    ஆகவே திண்டுக்கல், மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் இந்த நீரை சிக்கனமாக பயன்படுத்தி உயர் மகசூல் பெறும்படி அமைச்சர் பி.மூர்த்தி கேட்டுக் கொண்டுள்ளார். நிகழ்ச்சியில் செயற்பொறியாளர் சிவபிரபாகரன், உதவி செயற்பொறியாளர்கள் சேகரன், முருகேசன், குபேந்திரன், வட்டாட்சியர் மருதுபாண்டி மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    அனைத்து கட்சிகளுக்கும் பொருந்தும் வகையில் பொதுக்கூட்ட விதிமுறைகள்: தவெக வழக்கில் உயர் நீதிமன்றம் உத்தரவு

    September 18, 2025
    மாநிலம்

    தினகரன், ஓபிஎஸ், சசிகலாவை எதிர்கொள்ள முடியாமல் பழனிசாமி திணறுகிறார்: கிருஷ்ணசாமி

    September 18, 2025
    மாநிலம்

    தமிழகத்தில் வழக்கறிஞர் பாதுகாப்பு சட்டம் நிறைவேற்ற கோரி வழக்கு: சட்டத்துறை செயலாளர் பதிலளிக்க உத்தரவு

    September 18, 2025
    மாநிலம்

    “தகுதி தேர்வால் பாதிக்கப்படும் ஒன்றரை லட்சம் ஆசிரியர்களின் எதிர்காலம் பாதுகாக்கப்பட வேண்டும்” – ராமதாஸ்

    September 18, 2025
    மாநிலம்

    ஆசிரியர்களுக்கான போட்டி தேர்வை ஒத்திவைக்கக் கோரி மனு: தேர்வு வாரியம் பரிசீலிக்க ஐகோர்ட் உத்தரவு

    September 18, 2025
    மாநிலம்

    காசா கொடூரத்தை தடுத்து நிறுத்த மொத்த உலகமும் ஒன்றிணைய வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்

    September 18, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • அனைத்து கட்சிகளுக்கும் பொருந்தும் வகையில் பொதுக்கூட்ட விதிமுறைகள்: தவெக வழக்கில் உயர் நீதிமன்றம் உத்தரவு
    • இந்த ஜப்பானிய ஐயாஷி டோம் அகச்சிவப்பு ச una னா 30 நிமிடங்களில் ஆடம்பர, போதைப்பொருள் மற்றும் முழு உடல் மீட்பை வழங்குகிறது | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • பூச்சிகள் மறைந்து கொண்டிருக்கின்றன! மக்கள் தொகை 72%குறைந்து, பல்லுயிர் நெருக்கடியைத் தூண்டுகிறது | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • பாக் – சவுதி பாதுகாப்பு ஒப்பந்தத்தின் தாக்கம் குறித்து ஆய்வு செய்து வருகிறோம்: வெளியுறவு அமைச்சகம்
    • தினகரன், ஓபிஎஸ், சசிகலாவை எதிர்கொள்ள முடியாமல் பழனிசாமி திணறுகிறார்: கிருஷ்ணசாமி

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.