Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Saturday, August 16
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»திட்டக்குடிக்கு திட்டங்களை தந்தது எங்கள் ஆட்சி தான்! – சொல்கிறது கடலூர் மேற்கு மாவட்ட அதிமுக
    மாநிலம்

    திட்டக்குடிக்கு திட்டங்களை தந்தது எங்கள் ஆட்சி தான்! – சொல்கிறது கடலூர் மேற்கு மாவட்ட அதிமுக

    adminBy adminAugust 16, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    திட்டக்குடிக்கு திட்டங்களை தந்தது எங்கள் ஆட்சி தான்! – சொல்கிறது கடலூர் மேற்கு மாவட்ட அதிமுக
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    அமைச்சர் கணேசன் திட்டக்குடி தொகுதியில் மீண்டும் களமிறங்குவதற்காக அந்தத் தொகுதியை சுற்றிச் சுற்றி வருவதாகவும் கடந்த முறை இந்தத் தொகுதியை பாஜக-வுக்கு விட்டுக் கொடுத்த அதிமுக, இம்முறையும் அதற்கு தயாராக இருப்பதாகவும் நேற்றைய ‘தெறிப்பது நிஜம்’ பகுதியில் ‘கரிசன கணேசன்… கண்டுகொள்ளாத அருண்மொழிதேவன்!’ என்ற தலைப்பில் செய்தி வெளியாகி இருந்தது.

    அந்தச் செய்தியில் கடலூர் தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரான அருண்மொழிதேவனின் கருத்தையும் நாம் பதிவு செய்திருந்த நிலையில், செய்தி வெளியான பிறகு நம்மை தொடர்பு கொண்ட கடலூர் மேற்கு மாவட்ட அதிமுக ஐடி விங்க் செயலாளரான பி.டி.முத்தமிழ்ச்செல்வன், “அமைச்சர் கணேசனும் கடலூர் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளரான அருண்மொழிதேவனும் பள்ளித் தோழர்கள் என்பதால் ஒருவரை ஒருவர் எதிர்த்து அரசியல் செய்வதில்லை என்று சொல்வது முற்றிலும் தவறு. இருவரும் ஒரே பள்ளியில்கூட படிக்கவில்லை என்பது தான் உண்மை.

    மேலும், திட்டக்குடி தொகுதிக்கு அதிமுக ஆட்சியில் எதுவும் செய்யாதது போலவும் அமைச்சர் கணேசன் தான் திட்டங்களை செயல்படுத்தி வருவது போலவும் செய்தியில் சொல்லப்பட்டுள்ளது. ஆனால், கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் தான் ரூ.22.50 கோடி மதிப்பில் வெள்ளாற்றில் தடுப்பணை கட்டப்பட்டது. மேலூரில் பெரிய ஓடையின் குறுக்கேயும், வாகையூர், கூடலூர், செம்பேரி உள்ளிட்ட இடங்களில் வெள்ளாற்றின் குறுக்கேயும் தடுப்பணைகளைக் கட்டியதும் அதிமுக ஆட்சி தான்.

    திட்டக்குடியில் அரசு கலைக்கல்லூரி, மின்வாரிய கோட்டப் பொறியாளர் அலுவலகம், சார்பு நீதிமன்றம், தொடக்கப்பள்ளிக்கு கூடுதல் கட்டிடம் ஆகியவையும் அதிமுக ஆட்சியில் தான் வந்தது. திட்டக்குடி – விருத்தாசலம் சாலையை தேசிய நெடுஞ்சாலையாக தரம் உயர்த்தியது, சிறுபாக்கம் பேருந்து நிலையம் அமைத்தது, புலிவலம் ஓடையின் குறுக்கே உயர்மட்ட பாலம், திட்டக்குடி வைத்தியநாத சுவாமி திருக்கோயில் உள்ளிட்ட கோயில்களுக்கு குடமுழுக்கு விழா நடத்தியது, ரூ.10 கோடி மதிப்பீட்டில் தொழுதூர் அணைக்கட்டை நவீனப்படுத்தியது உள்ளிட்டவையும் அதிமுக ஆட்சியின் சாதனைகள் தான்.


    கணேசன்

    அதிமுக அரசின் சாதனைகள் இப்படி இருக்க, திட்டக்குடி நகராட்சி, பெண்ணாடம் பேரூராட்சி, மற்றும் நல்லூர், மங்களூர் ஒன்றியங்களின் குடிநீர் தேவைக்காக நெய்வேலி சுரங்க நீரை ஆதாரமாகக் கொண்டு ரூ.479 கோடியில் அதிமுக அரசால் நிறைவேற்றப்பட்ட திட்டத்தை இன்னமும் மக்கள் பயன்பாட்டுக்கு திறந்துவிடாமல் முடக்கி வைத்திருக்கிறது திமுக அரசு.

    அதேபோல், கடலூர் – அரியலூர் மாவட்டங்களை இணைக்கும் வகையில் வெள்ளாற்றின் குறுக்கே சௌந்திரசோழபுரம் – கோட்டைக்காடு இடையே அதிமுக அரசில் கட்டப்பட்ட உயர்மட்ட பாலத்தையும் இன்னமும் திறக்க மனமில்லாமல் காட்சிப் பொருளாக வைத்திருக்கிறது திமுக அரசு. திட்டக்குடி தொகுதியானது அதிமுக-வின் கோட்டை என்பதற்கு திட்டக்குடியில் நடைபெற்ற இபிஎஸ்ஸின் எழுச்சிப் பயணமே சாட்சி” என்று கூடுதல் விளக்கமளித்தார்.





    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    ‘வாக்கு திருட்டு’ விவகாரத்தை திசை திருப்பவே ஐ.பெரியசாமி வீட்டில் அமலாக்கத் துறை சோதனை: திமுக

    August 16, 2025
    மாநிலம்

    அரவிந்த் கேஜ்ரிவால் பிறந்தநாள்: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

    August 16, 2025
    மாநிலம்

    ”அமெரிக்க வரி உயர்வால் தமிழகத்துக்கு பாதிப்பு” – மத்திய அரசு நடவடிக்கை எடுக்க முதல்வர் வலியுறுத்தல்

    August 16, 2025
    மாநிலம்

    நாடு சிறந்த தேசியவாதியை இழந்துவிட்டது: இல.கணேசன் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல்

    August 16, 2025
    மாநிலம்

    மேம்பாலம் கட்டும் பணிக்காக அண்ணா சாலையில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம்

    August 16, 2025
    மாநிலம்

    பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிராக கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் 

    August 16, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • 136 ஆண்டு சாதனை முறியடிப்பு: இங்கிலாந்தின் இளம் கேப்டன் ஆன ஜேக்கப் பெத்தேல்!
    • புதினை அடுத்து திங்களன்று ஜெலன்ஸ்கியை சந்திக்கிறார் ட்ரம்ப்!
    • தீபாவளி ரேஸில் இருந்து பின்வாங்கியது சூர்யாவின் ‘கருப்பு’
    • ‘வாக்கு திருட்டு’ விவகாரத்தை திசை திருப்பவே ஐ.பெரியசாமி வீட்டில் அமலாக்கத் துறை சோதனை: திமுக
    • 3 பொதுவான தவறுகள் கொழுப்பு கல்லீரல் தரம் 1 இன் போது தரம் 2 மற்றும் 3 க்கு வழிவகுக்கும், இல்லை, அது ஆல்கஹால் அல்ல | – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.