Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Thursday, January 15
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»தாராபுரம் வழக்கறிஞர் கொலை வழக்கு: 3 மாதங்களில் விசாரணை அறிக்கை அளிக்க ஐகோர்ட் உத்தரவு
    மாநிலம்

    தாராபுரம் வழக்கறிஞர் கொலை வழக்கு: 3 மாதங்களில் விசாரணை அறிக்கை அளிக்க ஐகோர்ட் உத்தரவு

    adminBy adminAugust 5, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    தாராபுரம் வழக்கறிஞர் கொலை வழக்கு: 3 மாதங்களில் விசாரணை அறிக்கை அளிக்க ஐகோர்ட் உத்தரவு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    குடும்ப முன்பகையால் தாராபுரம் வழக்கறிஞர் முருகானந்தம் கொலை செய்யப்பட்ட வழக்கை மேற்கு மண்டல ஐஜி மேற்பார்வையில் விசாரித்து 3 மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்ய போலீஸாருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    திருப்பூர் மாவட்டம் தாராபுரத் தைச் சேர்ந்த சுமித்ரா தேவி (67) சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், எனது கணவர் லிங்கசாமி ஓய்வு பெற்ற ராணுவ வீரர். சொத்துதகரா றில் எனது கணவர் கடந்த 1999-ம் ஆண்டு ஜூலை 28 அன்று தலை துண்டித்து கொலை செய்யப்பட் டார். இந்த கொலைவழக்கில் எனது கணவரின் தம்பி தண்டபாணி கைது செய்யப்பட்டார். ஆனால் சந்தேக அடிப்படையில் விடுவிக்கப்பட் டார். ஜூலை 28 அன்று மாற்றுத் திறனாளியான வழக்கறிஞராக தொழில் செய்துவரும் எனது மகன் முருகானந்தத்தையும் தண்டபாணி கூலிப்படை மூலமாக எனது கணவர் இறந்த அதே தேதியில் கொலை செய்துள்ளார்.

    எனது மகன் மாற்றுத்திறனாளிகளுக்கு ஆதரவாக பல்வேறு உத்தரவு களைப் பெற்று கொடுத்துள்ளார். போலீஸாருக்கு எதிராகவும் பல வழக்குகளில் ஆஜராகியுள்ளார். தண்டபாணி நடத்தி வரும் பள்ளி நிலம் தொடர்பாக உயர் நீதிமன்றத் தில் வழக்கு தொடர்ந்தான் என்ற காரணத்துக்காக எனது மகனையும்

    அவர் அதிகாரிகளின் துணையுடன் கொலை செய்துள்ளார். கடந்த 2020-ம் ஆண்டு போலீஸார் எனது மகனை பொய் வழக்கு ஒன்றில் கைது செய்தனர். எனது மகன் தொடர்ந்த வழக்கை விசாரித்த மனித உரிமை ஆணையம் ரூ.5 லட்சத்தை இழப்பீடாக எனது மகனுக்கு வழங்க வேண்டு மென சம்பந்தப்பட்ட போலீஸாருக்கு உத்தரவிட்டது. அந்த உத் தரவை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தது.

    இந்த சூழலில் எனது மகனை கூலிப்படையினர் வெட்டி கொலை செய்துள்ளனர். தடுக்க வந்த மற்றொரு வழக்கறிஞரையும் வெட்டியுள்ளனர் எனவே எனது மகன் கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும், எனக்கோரியிருந்தார்.

    அதையடுத்து நீதிபதி, வழக்கறிஞர் முருகானந்தம் கொலை வழக்கை மேற்கு மண்டல ஐஜி தனது மேற்பார்வையில் விசாரிக்க வேண்டும் என்றும், 3 மாதங்களுக்குள் இந்த வழக்கின் குற்றப்பத்திரிகையை தாராபுரம் போலீஸார் தாக்கல் செய்து அதன் அறிக்கையை உயர் நீதிமன்றத்திலும் தாக்கல் செய்ய வேண்டும். என உத்தரவிட்டுள்ளார்.

    மேலும் 6 பேர் கைது: இந்த வழக்கில் திருச்செங் கோட்டைச் சேர்ந்த பாலமுருகன் (44), அதே பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார் (44), சசிகுமார் (33), சுந்தரேசன் (30), அண்ணாதுரை (36), முருகானந்தம் (56) ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இதுவரை 12 பேர் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இவர் களை காவலில் எடுத்து முறைப்படி விசாரிக்கும் போது மேலும் பல தகவல்கள் வெளி வரும் என போலீஸார் தெரிவித்தனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    வானிலை முன்னறிவிப்பு: சென்னை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு

    December 3, 2025
    மாநிலம்

    மகிளா வங்கியை மூடிய பாஜக அரசு: ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

    December 3, 2025
    மாநிலம்

    “விருதுநகர் தொகுதியில் அதிமுகதான் போட்டி” – ராஜேந்திர பாலாஜி திட்டவட்டம்

    December 3, 2025
    மாநிலம்

    “பிஹார் தேர்தல் முடிவை விமர்சன கண்ணோட்டத்தோடு பார்க்க வேண்டும்” – கமல்ஹாசன் எம்.பி

    December 3, 2025
    மாநிலம்

    ‘புலி வருது, புலி வருது’ என்பது போல – ஆந்திராவுக்கு மடைமாறிய முதலீடு: நயினார் நாகேந்திரன் கிண்டல்!

    December 3, 2025
    மாநிலம்

    மேயர் இல்லாததால் மதுரை மாநகராட்சியில் திமுக – மார்க்சிஸ்ட் இடையே அதிகார மோதல்!

    December 3, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • நாசா முதன்முதலில் மருத்துவ வெளியேற்றத்தை துவக்கியது: நான்கு விண்வெளி வீரர்கள் ISS இலிருந்து சீக்கிரம் திரும்பினர்; பணி ஒரு மாதத்திற்கும் மேலாக குறைக்கப்பட்டது – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • இளவரசி லியோனோர்: 150 ஆண்டுகளில் ஸ்பெயினின் முதல் ராணியாக ஆவதற்கு தயாராக உள்ள 20 வயது ஜெனரல் இசட் அரச குடும்பத்தைச் சந்திக்கவும்! | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • காண்க: மினியாபோலிஸ் எதிர்ப்பு மோதலில் ICE முகவர்கள் ஜன்னலை உடைத்து, ‘ஊனமுற்ற’ பெண்ணை காரில் இருந்து இழுத்துச் சென்றது – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ‘விசாவை தடை செய்யும் நம்பர் ஒன் நாடு…’: 75 நாடுகளுக்கான விசாக்களை அமெரிக்கா முடக்கியதை அடுத்து சீனா முதல் கட்டுப்பாடுகளுக்கு நிக்கி ஹேலி அழைப்பு | உலகச் செய்திகள் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • 2,000 ஆண்டுகள் பழமையான ரோமன் ஒயின் விஞ்ஞானிகளால் மீண்டும் உருவாக்கப்பட்டு அதன் சுவை அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது | – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • January 2026
    • December 2025
    • November 2025
    • October 2025
    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2026 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.