Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Friday, September 26
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»தாய்மொழிக்கு முக்கியத்துவம் தரும் தேசிய கல்விக் கொள்கை: குஜராத்தின் அம்பேத்கர் திறந்தநிலை பல்கலை. துணைவேந்தர் பேச்சு
    மாநிலம்

    தாய்மொழிக்கு முக்கியத்துவம் தரும் தேசிய கல்விக் கொள்கை: குஜராத்தின் அம்பேத்கர் திறந்தநிலை பல்கலை. துணைவேந்தர் பேச்சு

    adminBy adminSeptember 26, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    தாய்மொழிக்கு முக்கியத்துவம் தரும் தேசிய கல்விக் கொள்கை: குஜராத்தின் அம்பேத்கர் திறந்தநிலை பல்கலை. துணைவேந்தர் பேச்சு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: தமிழ்​நாடு திறந்​தநிலை பல்​கலைக்​கழகத்​தின் பட்​டமளிப்பு விழா​வில் பல்​வேறு படிப்​பு​களில் சிறந்து விளங்​கிய 304 மாணவ, மாணவி​களுக்கு ஆளுநர் ஆர்​.என்​. ர​வி,பதக்​கங்​கள், சான்​றிதழ்​கள் வழங்​கி​னார். தாய்​மொழிக்​கு தேசிய கல்விக் கொள்கை முக்​கி​யத்​து​வம் அளிக்​கிறது என்று குஜராத்தின் அம்பேத்கர் திறந்தநிலை பல்கலை. துணைவேந்தர் பேசி​னார்.

    தமிழ்​நாடு திறந்​தநிலை பல்​கலைக்​கழகத்​தின் 16-வது பட்​டமளிப்பு விழா சென்​னை​யில் உள்ள அதன் வளாகத்​தில் நேற்று நடை​பெற்​றது. இதற்கு தமிழக ஆளுநர் ஆர்​.என்​.ரவி தலைமை தாங்​கி​னார். இந்த விழா​வில் 3,007 இளநிலை, 3,098 முது​நிலை உட்பட 7,972 மாணவ, மாணவி​கள் பட்​டம் பெற்​றனர். இதில் பதக்​கங்​களை வென்ற 304 மாணவர்​களுக்கு ஆளுநர் ரவி பட்​டங்​களை வழங்​கி​னார். மேலும், ஆசி​யா​வுக்​கான காமன்​வெல்த் கல்வி ஊடக மையம் விருதை மாணவி திவ்யா பெற்​றார்.

    நிகழ்ச்​சி​யில் சிறப்பு விருந்​தின​ராக பங்​கேற்ற குஜ​ராத் டாக்​டர் பாபா சாகேப் அம்​பேத்​கர் திறந்​தநிலை பல்​கலைக்​கழக துணைவேந்​தர் உபாத்​யாயா பேசி​ய​தாவது: மாணவர்​கள் பட்​டம் பெறு​வது மகிழ்ச்​சி​யாக உள்​ளது. இவர்​கள் நம்​நாட்​டின் வளர்ச்​சிக்​காக தங்​கள் பங்​களிப்பை வழங்​கு​வார்​கள் என்ற நம்​பிக்கை இருக்​கிறது. தேசிய கல்விக் கொள்கை பட்​டப்​படிப்​பில் பல்​வேறு நுழைவு​கள், வெளி​யேற்​றத்தை வலி​யுறுத்​துகிறது. நான் இலக்​கி​யம் படிக்​கும்​போது, பிஎச்டி தேர்வு செய்ய வேண்​டும் என்று விரும்​பினேன். மேலும், பாரம்​பரிய நடன கலைஞ​ராக​வும் இருக்​க​வும் எண்​ணினேன். எனது யோசனையை அனை​வரும் பாராட்​டினர். ஆனால், அப்​போது அது சாத்​தி​யமில்​லாமல் போனது.

    தற்​போது தேசிய கல்விக் கொள்கை அனைத்​தி​லும் மாற்​றத்தை கொண்டு வந்​துள்​ளது. உலகில் 7 பழமை​யான மொழிகளில் சமஸ்​கிருதம், தமிழ் இருப்​பது மகிழ்ச்​சி​யாக இருக்​கிறது. தேசிய கல்விக் கொள்கை தாய் மொழி, பிராந்​திய மொழிகளுக்கு முக்​கி​யத்​து​வம் வழங்​கு​கிறது. 2047-ல் வளர்ச்சி அடைந்த பாரதம் உங்​கள் கையில் உள்​ளது. நீங்​கள்​தான் நாட்டை வடிவ​மைக்க வேண்​டும். தற்​போது, உலகள​வில் ஏஐ எனும் செயற்கை நுண்​ணறிவு தாக்​கம் அதி​க​முள்​ளது. செயற்கை நுண்​ணறிவு மனித அறிவை மீற முடி​யாது. நமது வாழ்க்கை பயணத்​தில், ஆன்​மீக உண்​மையை நம்​முள் உணர்​வதே இறுதி நிலை​யாகும். இவ்​வாறு அவர் பேசி​னார்.

    அமைச்​சர் புறக்​கணிப்பு: பல்​கலைக்​கழக துணைவேந்​தர் நியமன விவ​காரத்​தில் தமிழக அரசுக்​கும், ஆளுநர் ரவிக்​கும் இடையே முரண்​கள் நில​வு​கின்​றன. இதன்​காரண​மாக கடந்த சில ஆண்​டு​களாகவே மாநில பல்​கலைக்​கழக பட்​டமளிப்பு விழாக்​களை, இணைவேந்​த​ரான உயர்​கல்​வித்​துறை அமைச்​சர்​கள் புறக்​கணித்​து​ வரு​கின்​றனர். அந்​தவகை​யில் நேற்​றும் திறந்​தநிலை பல்​கலைக்​கழக பட்​டமளிப்பு விழாவை தற்​போது உயர்​கல்​வித் துறை அமைச்​ச​ராக உள்ள கோவி.செழியன் புறக்​கணித்​தார். தொடரும் இந்த மோதல் போக்கு எப்​போதும் முடி​யும் என கல்​வி​யாளர்​கள் கவலை தெரி​வித்​தனர். இதற்​கிடையே நேற்​றைய பட்​டமளிப்பு விழா​வில் கோவையைச் சேர்ந்த கேபிஆர் மில் லிமிடெட் நிறு​வனத்​தின் சார்​பில் 610 தொழிலா​ளர்​கள் பட்​டம் பெற்​றனர். இதில்​ 17 பேர்​ பதக்​கங்​களை பெற்​றனர்​ என்​பது குறிப்​பிடத்​தக்​கது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    அமைச்சரவையில் பங்கு கேட்பது எங்களது உரிமை: தமிழக காங். முன்னாள் தலைவர் கே.எஸ்.அழகிரி கருத்து

    September 26, 2025
    மாநிலம்

    சிறுநீரக திருட்டு வழக்கில் முன்னேற்றம் இல்லை: உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தகவல்

    September 26, 2025
    மாநிலம்

    உடுமலை கறிக்கோழி நிறுவனத்தில் 3-வது நாளாக வருமான வரி சோதனை

    September 26, 2025
    மாநிலம்

    திமுக அரசின் மோசமான செயல்பாடுகளால் ஆசிரியர்கள் கடும் மன உளைச்சலில் உள்ளனர்: இபிஎஸ் விமர்சனம்

    September 26, 2025
    மாநிலம்

    தமிழகத்தின் கல்வி எழுச்சியை இந்தியாவே திரும்பி பார்க்கிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

    September 26, 2025
    மாநிலம்

    அடித்து ஆடும் அன்புமணி… அடுத்து என்ன செய்யப் போகிறார் ராமதாஸ்?

    September 25, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • அமைச்சரவையில் பங்கு கேட்பது எங்களது உரிமை: தமிழக காங். முன்னாள் தலைவர் கே.எஸ்.அழகிரி கருத்து
    • AIIMS நரம்பியல் நிபுணர் 10 உதவிக்குறிப்புகளை வெளிப்படுத்துகிறார் (சரியாக) வீட்டில் இரத்த அழுத்தத்தை அளவிடுகிறார் – இந்தியாவின் டைம்ஸ்
    • பிற மாநிலங்களிலும் பரவும் ‘ஐ லவ் முகம்மது’ சர்ச்சை: இந்துக்கள் சார்பில் ‘ஐ லவ் மகாதேவ்’ பிரச்சாரம்
    • சிறுநீரக திருட்டு வழக்கில் முன்னேற்றம் இல்லை: உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தகவல்
    • சிறந்த செரிமானம் முதல் எடை மேலாண்மை வரை, 5 காரணங்கள் காலையில் மெதி தண்ணீரை உட்கொள்ள வேண்டும் – இந்தியாவின் டைம்ஸ்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.