Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, June 30
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»தாம்பரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பட்டா ஆவணங்கள் மாயம் – கடன் வாங்க, வீடு கட்ட முடியாமல் மக்கள் அவதி!
    மாநிலம்

    தாம்பரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பட்டா ஆவணங்கள் மாயம் – கடன் வாங்க, வீடு கட்ட முடியாமல் மக்கள் அவதி!

    adminBy adminJune 30, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    தாம்பரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பட்டா ஆவணங்கள் மாயம் – கடன் வாங்க, வீடு கட்ட முடியாமல் மக்கள் அவதி!
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    அரசு சார்​பில் வழங்​கப்​பட்ட இலவச பட்டா ஆவணங்​கள் தொடர்​பான கோப்பு தாம்​பரம் வட்​டாட்​சி​யர் அலு​வல​கத்​தில் மாய​மானதால் கணினி​யில் பதிவேற்​று​வ​தில் சிக்​கல் ஏற்​பட்​டுள்​ளது. மாவட்ட நிர்​வாகம் இதற்கு தீர்வு காண வேண்​டும் என, பொது​மக்கள் கோரிக்கை வைத்​துள்​ளனர் தாம்​பரம் அருகே மாடம்​பாக்​கம் கிராமம், அண்ணா நகர், சர்வே எண் 686/ஏ, 686/1சி என்ற சர்வே எண்​ணில் புஞ்சை தரிசு நில வகை கொண்ட நிலத்​தில் குடி​யிருந்த, 34 நபர்​களுக்கு கடந்த, 2008-ம் ஆண்டு இலவச வீட்டு மனை பட்டா வழங்​கப்​பட்​டது.

    இதனை தொடர்ந்​து, 2012-ம் ஆண்டு கூடு​தலாக, 4 பேருக்கு பட்டா வழங்​கப்​பட்​டது. இந்​நிலை​யில் இந்த இலவச பட்​டாக்​களை கணினி​யில் பதிவேற்​றம் செய்து கணினி பட்டா வழங்க வேண்​டும் என, பொது​மக்​கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வரு​கின்​றனர். இது தொடர்​பாக பலமுறை மாவட்ட நிர்​வாகம், அமைச்​சர், எம்​எல்​ஏ, வட்​டாட்​சி​யர், ஜமாபந்​தி, மக்​கள் குறைதீர் முகாம் என பல்​வேறு இடங்​களில் மனு அளித்​தும் தீர்வு கிடைக்​க​வில்​லை.

    இந்​நிலை​யில், 38 நபர்​களுக்கு வழங்​கப்​பட்ட பட்டா தொடர்​பான கோப்​பு​கள் அனைத்​தும் தாம்​பரம் வட்​டாட்​சி​யர் அலு​வல​கத்​தில்மாய​மாகி உள்​ளது. இதனால் இலவச மனை பட்டா பெற்ற பொது​மக்​களுக்கு பட்டா வழங்​கு​வ​தில் சிக்​கல் ஏற்​பட்​டுள்​ள​தாக அப்​பகுதி மக்​கள் கூறுகின்​றனர். தற்​போது புதி​தாக வீடு கட்ட வங்​கி​யில் கடன் பெற முடி​யாமல் மக்​கள் தவித்து வரு​கின்​றனர். வீடு​களை வாங்​க​வும், விற்​க​வும் முடி​யாத சூழல் ஏற்பட்டுள்ளது. மாவட்ட நிர்​வாகம் இதில் தலை​யிட வேண்​டுமென தொடர்ந்து அப்​பகுதி மக்​கள் கோரிக்கை வைத்து வரு​கின்​றனர். தமிழக அரசும் தலை​யிட வேண்​டும் என்ற கோரிக்கை எழுந்​துள்​ளது.

    இது குறித்து மாடம்​பாக்​கம் பகு​தியை சேர்ந்த முனி​நாதன் என்​பவர் கூறிய​தாவது: தற்​போது பத்​திரப்​ப​திவு அலு​வல​கத்​தி​லும், வங்​கி​யிலும் கணினி பட்டா இருந்​தால் மட்​டுமே பத்​திரப்​ப​திவு செய்​யப்​படு​கிறது. வங்​கி​யில் கடனும் வழங்​கப்​படு​கிறது. கடந்த, 2008-ம் ஆண்டு திமுக ஆட்​சி​யில், 34 பேருக்கு பட்டா வழங்​கப்​பட்​டது. அதனை தொடர்ந்​து, 2012-ம் ஆண்டு அதி​முக. ஆட்​சி​யில், 4 பேருக்கு பட்டா வழங்​கப்​பட்​டது. பட்டா வழங்​கும் போது காஞ்​சிபுரம் மாவட்​ட​மாக இருந்​தது. அதன் பிறகு செங்​கல்​பட்டு மாவட்​டம் என தனி​யாக பிரிந்​த​தால் ஆவணங்​கள் மாய​மாகி, வரு​வாய் ஆவணங்​களில் புறம்​போக்கு நில​மாகவே குறிப்​பிடப்​பட்​டுள்​ளது.

    வட்​டாட்​சி​யர் அலு​வல​கத்​தில் பட்டா தொடர்​பாக மனுக்​கள் அளித்​தும் பதில் அளிக்​கவே இல்​லை. அனைத்து தரப்​பினரும் இதுகுறித்து மனு அளித்து விட்​டோம். தீர்வு கிடைக்​க​வில்​லை. காரணம், வட்​டாட்​சி​யர் அலு​வல​கத்​தில் ஆவணங்​கள் மாய​மான​தால் கணினி​யில் பதிவேற்​றம் செய்ய முடி​யாத நிலை ஏற்​பட்​டுள்​ளது. அதி​காரி​களின் அலட்​சி​யப் போக்கு காரண​மாக ஆவணங்​கள் மாய​மாகி உள்​ளது.

    எனவே, அரசு இதில் தலை​யிட்டு பட்டா வழங்​கப்​பட்ட, 38 பேருக்கு முறை​யாக ஆய்வு செய்து அவர்​களுக்கு கணினி பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்​டும். தாம்​பரம் வட்​டத்​தில் கணினி பட்டா பதிவேற்​றம் செய்​வ​தில் பல்​வேறு முறை​கேடு​கள் நடைபெறுகிறது. பிரச்சினை குறித்து தகவல் அறி​யும் உரிமைச் சட்​டம் மூல​மாக​ விளக்​கம் கேட்​கப்​பட்​ட நிலையில், வட்​டாட்சி​யர் அலு​வல​கத்​தில் ஆவணங்​கள் மாய​மா​னால், சம்​பந்​தப்​பட்ட ஆவணங்​களை மீண்​டும் பெறு​வதற்​கான நடவடிக்​கைகள் எடுக்​கப்பட வேண்​டும்.

    ஆவணங்​கள் மாய​மானதற்​கான காரணத்தை அறிய விசா​ரணை நடத்​தி, சம்​பந்​தப்​பட்​ட​வர்​கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்​டும். தாம்​பரம் வட்​டாட்​சி​யர் அலு​வல​கத்​தில் ஆவணங்​கள் முறை​யாக பராமரிக்​கப்​படுவதில்​லை, ஆவணங்​கள்​ மாய​மாவது தொடர்​ கதை​யாக உள்​ளது என்​று கூறி​னார்​.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    சிறு வணிகர்களுக்கான மின் கட்டண சலுகைகள் என்னென்ன? – தமிழக அரசு அறிவிப்பு

    June 30, 2025
    மாநிலம்

    “தமிழகத்தில் திமுக, அதிமுகவுக்கு அடுத்து விசிக தான் வலுவான கட்சி!” – திருமாவளவன்

    June 30, 2025
    மாநிலம்

    காவலாளி அஜித்குமார் மரணம்: மடப்புரத்தில் குற்றவியல் நடுவர் விசாரணை – நடந்தது என்ன?

    June 30, 2025
    மாநிலம்

    ராமதாஸ் மீது திடீர் பாசமா? – அன்புமணிக்கு திருமாவளவன் விளக்கம்

    June 30, 2025
    மாநிலம்

    புதுச்சேரி: பாஜக முக்கிய நிர்வாகிகள் பயணித்த விமானம் ரத்து!

    June 30, 2025
    மாநிலம்

    “திராவிட மாடல் ஆட்சி என்பது வெறும் வார்த்தை ஜாலம் அல்ல” – உதயநிதி விவரிப்பு 

    June 30, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • பெண்களால் கட்டப்பட்ட இந்தியாவில் பிரபலமான நினைவுச்சின்னங்கள்; சில யுனெஸ்கோ பாரம்பரிய தளங்கள்
    • பாலா ஹீரோவாக அறிமுகமாகும் ‘காந்தி கண்ணாடி’  – ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
    • சிறு வணிகர்களுக்கான மின் கட்டண சலுகைகள் என்னென்ன? – தமிழக அரசு அறிவிப்பு
    • வைட்டமின் சி குறைபாட்டைப் புரிந்துகொள்வது: காரணங்கள், அறிகுறிகள் மற்றும் தடுப்பு | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • பயணிகள் ரயில் கட்டணம் உயர்வு: எத்தனை கி.மீ.-க்கு எவ்வளவு அதிகரிப்பு?

    Recent Comments

    No comments to show.

    Archives

    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.