Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, June 30
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»தாம்பரம் சானடோரியம் ரயில் நிலையத்தில் ஆர்பிஎஃப் காவலரை தாக்கிய 3 இளைஞர்கள் கைது
    மாநிலம்

    தாம்பரம் சானடோரியம் ரயில் நிலையத்தில் ஆர்பிஎஃப் காவலரை தாக்கிய 3 இளைஞர்கள் கைது

    adminBy adminMay 3, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    தாம்பரம் சானடோரியம் ரயில் நிலையத்தில் ஆர்பிஎஃப் காவலரை தாக்கிய 3 இளைஞர்கள் கைது
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: தாம்பரம் சானடோரியம் ரயில் நிலையத்தில் ஆர்பிஎஃப் காவலரை தாக்கிய 3 இளைஞர்களை எழும்பூர் ரயில்வே பாதுகாப்பு படை போலீஸார் கைது செய்தனர்.

    தாம்பரம் சானடோரியம் ரயில் நிலையத்தில் வெள்ளிக்கிழமை காலை பொதுமக்களிடம் 3 இளைஞர்கள் குடிபோதையில் தகராறு செய்து கொண்டிருந்தனர். இதைக் கண்ட ஆர்பிஎஃப் காவலர், அங்கு சென்று அவர்களை விலக்கி விட்டார். இதனால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர்கள், ஆர்பிஎஃப் காவலரை தாக்கினர். பிறகு, அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இது குறித்து, ஆர்பிஎஃப் அலுவலகத்துக்கு அவர் தகவல் தெரிவித்தார்.

    இதைடுத்து அவர்களை பிடிக்க சென்னை கடற்கரை – தாம்பரம் இடையில் உள்ள ரயில்வே காவல் நிலையத்தில் தகவல் கொடுக்கப்பட்டது. இதற்கிடையில், 3 இளைஞர்கள் எழும்பூர் ரயில் நிலையத்தில் சுற்றித்திரிவது பற்றி எழும்பூர் ரயில்வே பாதுகாப்பு படைக்கு தகவல் கிடைத்தது.

    இந்தத் தகவலின் பேரில், எழும்பூர் ஆர்பிஎஃப் ஆய்வாளர் கே.பி.செபாஸ்டின், மாம்பலம் காவல் ஆய்வாளர் சிவநேசன் தலைமையில் ஆர்பிஎப் உதவி ஆய்வாளர் பரமேஸ்வரன், தலைமை காவலர்கள் ஜி.கண்ணன், முத்துக்குமார், முருகலிங்கம், இம்மானுவேல் உள்ளிட்டோர் கொண்ட தனிப்படை போலீஸார் தீவிரமாக தேடி வந்த நிலையில், எழும்பூர் மெட்ரோ ரயில் நிலையம் அருகே சந்தேகப்படும்படியான விதமாக 3 பேர் நின்று கொண்டிருந்தனர்.

    அவர்களை விசாரிக்க முயன்றபோது, தப்பி ஓடினர், இதையடுத்து, அவர்களை ஆர்பிஎஃப் போலீஸார் துரத்தி பிடித்து கைது செய்தனர். அவர்களை பிடித்து விசாரித்தபோது, அவர்கள் பூந்தமல்லியைச் சேர்ந்த கார்த்திக் (25), ராமநாதபுரத்தைச் சேர்ந்த கலந்தர் முஸ்தபா (20), சேலத்தைச் சேர்ந்த பார்த்திபன் ஆகியோர் என்பதும், ஆர்பிஎஃப் போலீஸாரை தாக்கி தப்பி வந்த நபர்களும் என்பது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து, அவர்கள் ரயில்வே போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். ஆர்.பி.எஃப் காவலரை தாக்கியது, பொதுமக்களுக்கு இடையூறு செய்தது உள்பட பல பிரிவுகளில் வழக்குப்பதிந்து கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைக்கப்பட்டனர். துரிதமாக செயல்பட்டு 3 பேரை கைது செய்த ஆர்.பி.எஃப் தனிப்படை போலீஸாரை உயரதிகாரிகள் பாராட்டினர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    கோயில்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் தினக்கூலி பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய கோரிக்கை

    June 30, 2025
    மாநிலம்

    ஜூலை 1-ம் தேதி மருத்துவர்கள் தினத்தில் அரசு மருத்துவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுகோள்

    June 30, 2025
    மாநிலம்

    பெண் கல்வி, வாழ்வாதார மேம்பாட்டுக்கு உதவ வேண்டும்: நீதிபதி டி.வி.தமிழ்ச்செல்வி வேண்டுகோள்

    June 30, 2025
    மாநிலம்

    வியாசர்பாடி கணேசபுரம் மேம்பால பணி 40 சதவீதம் நிறைவு: மாநகராட்சி நிர்வாகம் பதில்

    June 30, 2025
    மாநிலம்

    மகளிர் உரிமை தொகை பெறுவதற்கான விதிகளில் 3 தளர்வுகள் அறிவிப்பு: தமிழக அரசு அரசாணை வெளியீடு

    June 30, 2025
    மாநிலம்

    திமுக கூட்டணி மறுபரிசீலனைக்கு அவசியமில்லை: நிர்வாக குழு கூட்டத்துக்கு பிறகு வைகோ திட்டவட்டம்

    June 30, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ​விம்​பிள்​டன் டென்​னிஸ் போட்டி இன்று தொடக்​கம்!
    • கோயில்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் தினக்கூலி பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய கோரிக்கை
    • க்ளோசெட் டிடாக்ஸ்: நாம் ஒருபோதும் அணியாத ஆடைகளை ஏன் பதுக்கி வைக்கிறோம் என்பதற்குப் பின்னால் உள்ள உளவியல்
    • வெளவால்கள் ஏன் தொற்றுநோய்களுக்கு உலகளாவிய அக்கறை: கடந்த கால மற்றும் வளர்ந்து வரும் வைரஸ்களில் அவற்றின் பங்கைப் பாருங்கள் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • திண்டுக்கல்லில் கால்பந்து வீரர்கள் தேர்வு!

    Recent Comments

    No comments to show.

    Archives

    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.