Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Friday, July 4
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»தவெக தலைவர் விஜய்க்கு கூடும் கூட்டம் வாக்குகளாக மாறாது: தமிழக பாஜக
    மாநிலம்

    தவெக தலைவர் விஜய்க்கு கூடும் கூட்டம் வாக்குகளாக மாறாது: தமிழக பாஜக

    adminBy adminMay 3, 2025No Comments3 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    தவெக தலைவர் விஜய்க்கு கூடும் கூட்டம் வாக்குகளாக மாறாது: தமிழக பாஜக
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    மதுரை: “தவெக தலைவர் விஜய்க்கு கூடும் கூட்டம் வாக்குகளாக மாறாது. இது விஜய்க்கு புரியாது. அவருக்கு போதுமான அனுபவம் இல்லை. விஜய்யைப் பார்க்க வந்தவர்களில் பெரும்பாலானோர் 18 வயதுக்கு உட்பட்டவர்கள். அவர்களுக்கு வாக்களிக்கும் உரிமையில்லை,” என பாஜக பொதுச் செயலாளர் ராம சீனிவாசன் கூறியுள்ளார்.

    மதுரையில் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: “இந்தியாவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. சமீப காலங்களில் எதிர்கட்சிகள், குறிப்பாக ராகுல் காந்தி, தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் ஆகியோர் அரசியல் ஆயுதமாக பயன்படுத்தி வந்தனர். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால் அதன் பலன்கள் சமூகத்துக்கு எப்படி போகும் என்பது குறித்து ஒரு வரி கூட அவர்கள் பேசவில்லை. அதற்கு பதிலாக மோடி அரசு ஏமாற்றுகிறது என பிரச்சாரம் செய்து வந்தனர்.

    இந்தியாவில் 70 ஆண்டுகளாக ஆட்சி செய்தது காங்கிரஸ் கட்சி. அதில் தொடர்ந்து 15 ஆண்டுகளாக மத்திய அரசில் திமுக பங்கெடுத்துள்ளது. இந்திய மாநில கட்சிகளில் மத்திய அரசில் அதிக ஆண்டுகள் பங்கெடுத்தது திமுகதான். அப்போதெல்லாம் இரு கட்சிகளும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தவில்லை. இந்தியா சுதந்திரம் அடைந்ததில் இருந்து சாதிவாரி கணக்கெடுப்பு இல்லை. மொத்தத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்புதான் நடத்தப்பட்டு வந்தது.

    இடஒதுக்கீடு வழங்கப்படுவதால் பட்டியல் சமூகம், பழங்குடியினர் புள்ளி விவரம் சேகரிக்கப்பட்டது. மண்டல் கமிஷன் பரிந்துரையால் ஓபிசி இடஒதுக்கீடு வழங்கப்பட்ட பிறகும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. இதற்கெல்லாம் இப்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. அடுத்து நடைபெறும் மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது சாதிவாரியாகவும் கணக்கெடுப்பு நடத்தப்படும். மக்கள் தொகை கணக்கெடுப்பு மத்திய அரசால் மட்டுமே மேற்கொள்ள முடியும். மாநில அரசால் கணக்கெடுப்பு நடத்த முடியாது.

    2021-ல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டிருக்க வேண்டும். கரோனா பரவல் காரணமாக கணக்கெடுப்பு 3 ஆண்டுகள் தள்ளிப்போனது. இதனால் பல சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். பல சமுதாயங்களுக்கு நன்மைகள் ஏற்படும். இப்போது சாதி வாரியாக அறிவியல் பூர்வமான புள்ளிவிவரமும் இல்லை. அதிமுக ஆட்சியில் வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட 10.5 சதவீத இடஒதுக்கீட்டை சாதிவாரியான புள்ளி விவரம் இல்லாததால் நீதிமன்றம் ரத்து செய்தது.

    தேவேந்திர குல வேளாளர் சமூகம் அரசாணை பெற்ற பிறகு பட்டியல் அட்டவணையில் இருந்து வெளியேற்றம் கேட்கின்றனர். அந்த கோரிக்கைக்கு பொது வெளியிலும், சமூகத்துக்குள்ளாகவும் ஆதரவு உள்ளது. பட்டியலில் இருந்து வெளியேறினால் அந்த சமூகத்துக்கு எவ்வளவு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதில் இப்போது குழப்பம் உள்ளது. சாதிவாரி கணக்கெடுப்பு முழுமையடையும் போது தமிழகத்தில் பல்வேறு சமூகங்களுக்கு நீதி கிடைக்கும்.

    தென் மாவட்டங்களில் டிஎன்டி சமூகத்தினர் ஒற்றை சான்றிதழ் கேட்கின்றனர். நீதிக்கட்சி ஆட்சியில் தான் குற்றப்பரம்பரை சட்டம் கொண்டு வரப்பப்பட்டது. வட மாநிலங்களில் குறிப்பாக பாஜக ஆளும் மாநிலங்களில் டிஎன்டி ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த மாநிலங்களில் டிஎன்டி சமூகத்தினர் பலன் அடைந்து வருகின்றனர். தமிழகத்தில் டிஎன்டி சமூகத்துக்கு ஒற்றை சான்றிதழ் கூட கொடுப்பதில்லை. சாதிவாரி கணக்கெடுப்புக்கு பிறகு அவர்களுக்கு உரிய பலன் கிடைக்கும்.

    அடுத்த ஆண்டு கணக்கெடுப்பு தொடங்கப்பட்டு ஓர் ஆண்டில் முடியும். சமூக நீதி கிடைக்கவும், சமூகங்களுக்கு கிடைக்க வேண்டிய சலுகைகளை வழங்கவும் இந்த கணக்கெடுப்பு உதவும்.

    மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது ரூ.5 ஆயிரம் கோடி செலவில் சர்வே முறையில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் எட்டேகால் கோடி தவறுகள் இருப்பது பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அந்தக் கணக்கெடுப்பை வெளியிட முடியவில்லை.

    தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரது அழுத்ததால் மத்திய அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துகிறது என்பது சரியல்ல. இது கண்துடைப்புக்காகவும், பிஹார் தேர்தலுக்காகவும் நடத்தப்படவில்லை. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பது திருமாவளவனின் கோரிக்கை. அதை பிரதமர் மோடி செய்யும் போது திருமாவளவன் பாராட்டியிருக்க வேண்டும், அவர் விமர்சனம் செய்வது தவறு.

    அதிமுக எப்போதும் பாஜக கூட்டணியில்தான் உள்ளது. 2024 சட்டப்பேரவை தேர்தல் தவிர்த்து, பல்வேறு தேர்தல்களில் அதிமுக பாஜக கூட்டணியில்தான் இருந்துள்ளது. பாஜக – அதிமுக கூட்டணியை பார்த்து திமுக பயப்படுகிறது. திமுகவுக்கு நடுக்கம் வந்துள்ளது.

    தவெக தலைவர் விஜய் திமுக எதிர்ப்பில் உறுதியாக இருந்து எங்கள் கூட்டணிக்கு வந்தால் வரவேற்போம். திமுவுக்கு எதிரான ஒவ்வொரு ஓட்டும் எங்களுக்கு முக்கியம். திமுக எதிர்ப்பு ஓட்டுகள் எங்களுக்கு கிடைக்க வேண்டும் என்பதே எங்களின் நோக்கம். திமுவை வீழ்த்த நினைக்கும் அனைவரையும் வரவேற்போம். பொது எதிரியை வீழ்த்த ஒன்று சேர்வது தான் கூட்டணி. தேர்தல் நேரங்களில் கொள்கை அடிப்படையில் கூட்டணி அமைக்க முடியாது. நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு இண்டியா கூட்டணி தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருகிறது. தமிழகத்திலும், பிஹாரிலும் இண்டியா கூட்டணி வீழ்ச்சியடையும்.

    விஜய்க்கு கூடும் கூட்டம் வாக்குகளாக மாறாது. இது விஜய்க்கு புரியாது. அவருக்கு போதுமான அனுபவம் இல்லை. விஜய்யைப் பார்க்க வந்தவர்களில் பெரும்பாலானோர் 18 வயதுக்கு உட்பட்டவர்கள். அவர்களுக்கு வாக்களிக்கும் உரிமையில்லை. தமிழகத்தில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தலாம் என கனவு கண்டாலோ, போலீஸார் வழக்கு பதிவு செய்கின்றனர்” என்று அவர் கூறினார்.

    இந்த பேட்டியின்போது மதுரை மாநகர் மாவட்ட தலைவர் மாரி சக்கரவர்த்தி, மாவட்ட பார்வையாளர் கார்த்திக்பிரபு, முன்னாள் மாவட்ட தலைவர் ரவிபாலா, மாநில ஊடகப் பிரிவு செயலாளர் நாகராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    புதுச்சேரி வந்த சொகுசு கப்பலுக்கு எதிர்ப்பு: அதிமுக மறியல் போராட்டம்

    July 4, 2025
    மாநிலம்

    சிபிசிஐடி விசாரணைதான் வேண்டும்: அஜித்குமார் குடும்ப வழக்கறிஞர் கணேஷ்குமார்

    July 4, 2025
    மாநிலம்

    அஜித்குமார் கொலை: ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி கோரிய தவெக மனுவை அவசர வழக்காக விசாரிக்க ஐகோர்ட் மறுப்பு

    July 4, 2025
    மாநிலம்

    லாக்-அப் உயிரிழப்பு, வரதட்சணை கொடுமைக்கு முற்றுப்புள்ளி: குஷ்பு வலியுறுத்தல்

    July 4, 2025
    மாநிலம்

    முருக பக்தர்கள் மாநாடு நடத்திய இடத்தில் முஸ்லிம் முன்னேற்றக் கழக மாநாடு! – போட்டிக்காகவா, போட்டியிடுவதை அதிகரிப்பதற்காகவா?

    July 4, 2025
    மாநிலம்

    சென்​னை, புறநகரில் மிதமான மழை

    July 4, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • புதுச்சேரி வந்த சொகுசு கப்பலுக்கு எதிர்ப்பு: அதிமுக மறியல் போராட்டம்
    • ஒரு செல்லப்பிராணி பீகல் நாய்க்குட்டியைப் பெறுவதற்கு முன் தெரிந்து கொள்ள வேண்டிய 10 விஷயங்கள்
    • ஐ.எஸ்.எஸ்ஸில் வாழ்க்கையைப் பற்றிய மாணவர்களின் கேள்விகளுக்கு சுபன்ஷு சுக்லா பதிலளிக்கிறார்: சாப்பிடுவது முதல் விண்வெளியில் மிதப்பது வரை | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • தலாய் லாமாவால் மட்டுமே வாரிசை தேர்வு செய்ய முடியும்: சீனாவின் எதிர்ப்புக்கு இந்தியா பதிலடி
    • மகனுக்காக மன்னிப்புக் கேட்ட விஜய் சேதுபதி!

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.