Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Sunday, July 6
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»தவெக ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் தற்காலிகமாக விலகல்!
    மாநிலம்

    தவெக ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் தற்காலிகமாக விலகல்!

    adminBy adminJuly 6, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    தவெக ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் தற்காலிகமாக விலகல்!
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    திமுக, அதிமுக, பாஜக தேர்தல் வியூகங்களை வகுக்க குழு வைத்திருப்பதை போல, தமிழக வெற்றிக் கழகமும் வியூக வகுப்பாளர்களை வைத்துள்ளது. ஏற்கனவே, விஜய்க்கு ஜான் ஆரோக்கிய சாமி, ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் பல்வேறு ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர். மேலும், பிரபல தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரும் விஜய் கட்சிக்கு தேர்தல் உத்திகளை வகுக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார்.

    கடந்த பிப்ரவரியில் நடந்த தவெக 2-ம் ஆண்டு தொடக்க விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பிரசாந்த் கிஷோர், “விஜய் ஒரு அரசியல் தலைவர் அல்ல. தமிழகத்தின் புதிய நம்பிக்கை. புதிய அரசியலை விரும்பும் கோடிக்கணக்கானோருக்கான இயக்கம் தவெக. மாற்றத்தை கொண்டு வரும் இலக்கை நிர்ணயிக்க நானும் சிறிதளவு உதவ இருக்கிறேன்” என்றார். அதன்படி, பிரசாந்த் கிஷோரின் சிம்ப்பிள் சென்ஸ் அனல்ட்டிக்ஸ் என்ற நிறுவனத்தின் பணியாளர்கள், தவெக உடன் இணைந்து 234 தொகுதிகளிலும் தேர்தல் உத்திகளை உருவாக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

    இந்நிலையில், பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி போட்டியிடுவதால், அவர் தேர்தல் பணிகளில் மும்முரமாக செயல்பட்டு வருகிறார். இதனால், விஜய் கட்சிக்கு ஆலோசனை வழங்குவதில் இருந்து தற்காலிகமாக பிரசாந்த் கிஷோர் விலகியுள்ளார். பிஹார் தேர்தல் முடிவடைந்து, நவம்பர் மாதத்துக்கு பிறகே மீண்டும் தவெக ஆலோசகராக செயல்படுவது குறித்து முடிவெடுப்பேன் என பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    ஜூலை 9ம் தேதி அகில இந்திய வேலை நிறுத்தம்: தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகம் பங்கேற்பு

    July 6, 2025
    மாநிலம்

    கொலையான அஜித்குமாரின் சகோதரர் நவீன்குமார் மதுரை அரசு மருத்துவமனையில் திடீர் அனுமதி

    July 6, 2025
    மாநிலம்

    ”எல்இடி திரைகள் அமைக்கும் திட்டத்தில் பல கோடி கொள்ளையடிக்க முயற்சி” – திமுக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்

    July 6, 2025
    மாநிலம்

    குழந்தை பிறந்த பிறகு அளித்த தவறான சிகிச்சையால் தாய் உயிரிழப்பு – தேமுதிக கண்டனம்

    July 6, 2025
    மாநிலம்

    சர்வதேச கூட்டுறவு நாள் கொண்டாட்டம் – மினி மாரத்தான் போட்டியை துவக்கிவைத்த பெரியகருப்பன்

    July 6, 2025
    மாநிலம்

    நம்மை காக்கும் 48 திட்டத்தின் 4 லட்சமாவது பயனாளி – நேரில் நலம் விசாரித்த மா. சுப்பிரமணியன்

    July 6, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • 6 அறிகுறிகள் ஒரு பக்கவாதத்திற்கு 1 மாதத்திற்கு முன்பு நம் உடல் நமக்கு அளிக்கிறது
    • ‘வாரிசு குறித்து தலாய் லாமா முடிவெடுக்க முடியாது’ – மீண்டும் சீனா திட்டவட்டம்
    • ஜூலை 9ம் தேதி அகில இந்திய வேலை நிறுத்தம்: தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகம் பங்கேற்பு
    • கொலையான அஜித்குமாரின் சகோதரர் நவீன்குமார் மதுரை அரசு மருத்துவமனையில் திடீர் அனுமதி
    • ராமாயணத்தின் தடயங்களை வைத்திருப்பதாக நம்பப்படும் இலங்கையில் 7 இடங்கள்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.