Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Sunday, August 17
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»தருமபுரி மாவட்டத்தை திமுக புறக்கணிக்கவில்லை – அன்புமணி குற்றச்சாட்டுக்கு அமைச்சர் பதில்
    மாநிலம்

    தருமபுரி மாவட்டத்தை திமுக புறக்கணிக்கவில்லை – அன்புமணி குற்றச்சாட்டுக்கு அமைச்சர் பதில்

    adminBy adminAugust 17, 2025No Comments3 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    தருமபுரி மாவட்டத்தை திமுக புறக்கணிக்கவில்லை – அன்புமணி குற்றச்சாட்டுக்கு அமைச்சர் பதில்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: தருமபுரி மாவட்டத்தை திமுக புறக்கவில்லை என்றும், புறக்கணித்திருந்தால் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் 100க்கு 100 சதவீத வெற்றி சாத்தியமாகி இருக்குமா என்றும் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

    கடலூர் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும் வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சருமான எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கை: “2021 சட்டப்பேரவைத் தேர்தலில் தருமபுரியில் மொத்தமுள்ள 5 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வீழ்த்தப்பட்டதற்குப் பழிவாங்கும் வகையில்தான் தருமபுரி மாவட்டத்தை முதல்வர் புறக்கணித்து வருகிறார் என்று அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். மேலும், தருமபுரி மாவட்டம் மீதான வன்மத்தைக் கைவிடுங்கள்; காவிரி உபரிநீர் திட்டம் உள்ளிட்ட திட்டங்களைச் செயல்படுத்துங்கள் என்றும் அன்புமணி ராமதாஸ் சொல்லியிருக்கிறார்.

    சொந்தக் கட்சியிலேயே தனக்கு ஒரு இடமில்லாமல் வன்மத்தை வைத்துக் கொண்டு தந்தையுடன் மல்லுக்கட்டிக் கொண்டிருக்கும் அன்புமணியின் அறிக்கை விரக்தியின் உச்சம். தன் இயலாமையை மறைக்க இருப்பை தக்க வைத்துக் கொள்ள, தருமபுரியைப் பகடைக்காயாய் பயன்படுத்துகிறார். எந்தப் பாகுபாடும் காட்டாமல் தருமபுரியைச் சமதருமபுரியாகத்தான் திராவிட மாடல் அரசு நடத்துகிறது. அதனை வரும் சட்டமன்றத் தேர்தல் முடிவு காட்டும்.

    தருமபுரி – மொரப்பூர் ரயில் பாதை திட்டத்துக்காக ஒரு கைப்பிடி மண் கூட கையகப்படுத்தப்படவில்லை என்று அன்புமணி சொல்லியிருக்கிறார். மொரப்பூர்‌ – தருமபுரி புதிய அகல ரயில்‌ பாதை திட்டத்துக்கான நிர்வாக அனுமதி 17.04.2023 அன்று வழங்கப்பட்டு, கடந்த வருடம் மட்டும் 78.54 ஹெக்டேரில் 54.14. ஹெக்டேர் நில எடுப்புக்காக அறிவிக்கை செய்யப்பட்டது. 60 விழுக்காடு நில எடுப்பு பணிகள் முடிவடைந்துள்ளன. புறம்போக்கு நிலங்கள் 13.72 ஹெக்டேர் கையகப்படுத்தப்பட்டுள்ளன. இதில், 2000 பட்டாதாரர்களுக்கு இதுவரை ரூ. 29 கோடி இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 24.40.02 ஹெக்டர், ரயில் நிலையம் மூக்கனூரில் அமைவது குறித்துத் திருத்திய நில அட்டவணை தயாரிக்கும் பணியில் உள்ளது. நில எடுப்புப் பணிகள் விரைவில் முடிக்கப்படும்.

    ஒன்றிய அரசின் ரயில்வே திட்டங்களில் கூட தமிழ்நாடு அரசைக் குறை சொல்லும் அன்புமணி என்றைக்காவது மோடி அரசைப் பற்றி விமர்சனமாவது வைத்திருக்கிறாரா? ஒன்றிய பட்ஜெட்டில் தமிழ்நாடு என்ற வார்த்தைகூட இடம்பெறவில்லை. அதையாவது கண்டித்திருக்கிறாரா? “ஒன்றிய பட்ஜெட்டில் தமிழ்நாடு என்ற பெயர் வந்திருக்க வேண்டும் என்றால் தமிழ்நாட்டில் 25 எம்.பி.க்களை ஜெயித்து கொடுத்திருக்க வேண்டும்” என்று இறுமாப்புடன் சொன்னவர்தான் அன்புமணி ராமதாஸ்.

    அப்படிச் சொன்னவர் நாடாளுமன்றத்திற்குப் போய் என்ன சாதித்தார்? அவருடைய பார்லிமெண்ட் ப்ராகிரஸ் ரிப்போர்ட் லட்சணம் என்ன தெரியுமா? அன்புமணி மாநிலங்களவையில் பணியாற்றிய ஆறு ஆண்டுகளில் மொத்தம் 304 நாட்கள் அவை நடைபெற்றன. அதில் வெறும் 92 நாட்கள் மட்டுமே அன்புமணி கலந்து கொண்டிருக்கிறார். அதாவது அவரது வருகைப்பதிவு சதவிகிதம் வெறும் 30-தான். நாடாளுமன்றத்தில் தருமபுரி மக்களுக்கு என்ன பெற்றுத் தந்தார்?

    தருமபுரி காவிரி உபரி நீர்த் திட்டத்தைப் பொறுத்தவரையில் காவிரி வடிநிலப் பகுதியிலிருந்து ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட பாசனப் பரப்பைத் தவிரப் புதியதாகப் பாசனப்பரப்பைக் காவிரி வடிநிலத்தில் உருவாக்க இயலாது எனக் காவிரி நதிநீர் பங்கீட்டுத் தீர்ப்பாயம் கூறியுள்ளது. காவிரி வடிநிலத்தின் உபரிநீரைப் பிற வடிநிலத்திற்கு வழங்குவது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்குகளின் தீர்ப்பு கிடைத்த பின்னரே காவிரியில் நீரேற்று திட்டங்களைக் குறித்து ஆய்வுப் பணிகள் மேற்கொள்ள இயலும். இவையெல்லாம் தெரிந்தும் தருமபுரி மக்களை ஏமாற்றுவதற்காக வெற்று நாடகம் போட்டிருக்கிறார் அன்புமணி.

    சிப்காட் தொழிற் பூங்கா திட்டம் முறையாகச் செயல்படுத்தப்படவில்லை என்றும் அன்புமணி சொல்லி இருக்கிறார். தருமபுரி தொழிற் பூங்காவிற்கு ஆரம்பக்கட்டப் பணிகளான அணுகு சாலை மற்றும் நுழைவாயில் தகவல் பலகை, தெரு விளக்குகள் மற்றும் இதர பணிகள் அமைக்கும் பணி ரூ. 12.39 கோடி திட்ட மதிப்பீட்டில் முடிக்கப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக 200 ஏக்கர் பரப்பளவில் உட்கட்டமைப்பு பணிகள் ரூ. 93 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தப் புள்ளி கோரப்பட்டு, பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இணையதளம் மூலமாக 200 ஏக்கர் நிலத்தில் தொழில் முனைவோர்களுக்காக நிலம் ஒதுக்கிடும் பணி நடைபெற்று வருகிறது. இதில் ஏழு தொழில் நிறுவனங்களுக்கு இடஒதுக்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளது.

    எனவே, தன் கட்சியிலும் தமிழ்நாட்டு அரசியலிலும் இடமில்லாமல் திண்டாடிக் கொண்டிருக்கும் அன்புமணி, இனியாவது விவரங்களை அறிந்து பேச வேண்டும். அல்லது அவரது சொந்தக் கட்சி பதற்றம் தீரும் வரை இப்படி அரைவேக்காட்டு அறிக்கை விடுவதை நிறுத்தி கொள்ள வேண்டும்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    பாமக தலைவரானார் நிறுவனர் ராமதாஸ் – சிறப்பு பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றம்

    August 17, 2025
    மாநிலம்

    தமிழகத்தில் நாளை முதல் 38 ரயில்களுக்கு கூடுதல் நிறுத்தங்கள்: எல். முருகன் பேட்டி

    August 17, 2025
    மாநிலம்

    தீபாவளி டிக்கெட் முன்பதிவு: முக்கிய ரயில்களில் 2ம் வகுப்பு பெட்டிகளில் டிக்கெட் நிறைவு

    August 17, 2025
    மாநிலம்

    ”இல்லாதது பொல்லாததைச் சொல்லி பீதியை கிளப்புகிறார் ஆளுநர்” – முதல்வர் ஸ்டாலின் பேச்சு

    August 17, 2025
    மாநிலம்

    பணி நிரந்தரம் கோரிக்கை: தருமபுரியில் முதல்வரிடம் பகுதி நேர ஆசிரியர்கள் மனு

    August 17, 2025
    மாநிலம்

    கனமழை காரணமாக தற்காலிகமாக மூடப்பட்ட கோவை குற்றாலம்

    August 17, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • சிறிய விவரங்களை நினைவுபடுத்த முடியவில்லையா? நினைவகத்தைப் பயிற்றுவிக்க 5 வழிகள் இங்கே
    • டி.கே.சிவகுமார்தான் அடுத்த முதல்வர் என்று கூறிய எம்எல்ஏவுக்கு காங்கிரஸ் தலைமை நோட்டீஸ்!
    • பாமக தலைவரானார் நிறுவனர் ராமதாஸ் – சிறப்பு பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றம்
    • உங்கள் 9-5 வேலைக்கு ஒரு மேசையுடன் பிணைக்கப்பட்டுள்ளதா? இருதயநோய் நிபுணர் அங்கீகரிக்கப்பட்ட பழக்கவழக்கங்கள் உங்கள் மேசை வேலையை ஆரோக்கியமாக மாற்றும்
    • தருமபுரி மாவட்டத்தை திமுக புறக்கணிக்கவில்லை – அன்புமணி குற்றச்சாட்டுக்கு அமைச்சர் பதில்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.