Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, August 26
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»தரமணியில் ரூ.5.10 கோடியில் குளிரூட்டப்பட்ட படப்பிடிப்புத் தளம் திறப்பு
    மாநிலம்

    தரமணியில் ரூ.5.10 கோடியில் குளிரூட்டப்பட்ட படப்பிடிப்புத் தளம் திறப்பு

    adminBy adminAugust 26, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    தரமணியில் ரூ.5.10 கோடியில் குளிரூட்டப்பட்ட படப்பிடிப்புத் தளம் திறப்பு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன வளாகத்தில் ரூ.5.10 கோடி செலவில் புனரமைக்கப்பட்ட குளிரூட்டப்பட்ட படப்பிடிப்புத் தளத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

    இது குறித்து அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், சென்னை, தரமணியில் உள்ள தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன வளாகத்தில் 5.10 கோடி ரூபாய் செலவில் முழு அளவில் புனரமைக்கப்பட்ட குளிர்சாதன வசதியுடன் கூடிய படப்பிடிப்புத்தளத்தை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

    தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வந்த தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனம் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.

    இந்நிறுவனமானது திரைப்படத் தயாரிப்பு, தொழில்நுட்ப கல்வி நுணுக்கங்களையும் கலை உணர்வுகளையும் பயிற்றுவிக்கும் முன்னோடி நிறுவனம் ஆகும். இந்நிறுவனத்தின் முக்கியக் குறிக்கோள் பல்வேறு விதமான திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தயாரிப்பதற்குத் தேவையான தொழில்நுட்பங்களையும் பிற திரைப்படத் துணைப் பாடங்களையும் மாணவர்களுக்குக் கற்றுத்தருவதாகும்.

    இவ்வரசு பொறுப்பேற்றது முதல் தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தின் மேம்பாட்டிற்காக ரூ.1.58 கோடி செலவில் இப்பயிற்சி நிறுவனத்தின் கூட்ட அரங்கம், பழுதடைந்த கட்டடங்கள் மற்றும் மின்கலன்கள் போன்றவை சீரமைக்கப்பட்டுள்ளதோடு, மாணவ, மாணவியர் மற்றும் பணியாளர்கள் அமர்ந்து உணவு அருந்துவதற்காக ரூ.25 லட்சம் செலவில் உணவு அருந்தும் அறையும் அமைக்கப்பட்டது.

    மேலும், இந்நிறுவனத்தின் கல்வித் தரத்தினை உயர்த்திட வல்லுநர் குழு அமைக்கப்பட்டு, அக்குழுவின் பரிந்துரையின் பேரில் மாணவர் கல்வி நலன் கருதி பாடத்திட்டங்கள் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்நிறுவனத்தில் நான்காம் ஆண்டு பயிலும் மாணவர்களின் நலன் கருதி இறுதித் திட்ட குறும்படப் படப்பிடிப்பு தயாரிப்புச் செலவினம் ஒவ்வொரு குழுவுக்கும் ரூ. 1 லட்சம் உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது.

    இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்நிறுவனத்தை மேலும் மேம்படுத்தும் வகையிலும், மாணவர்களின் கல்வி நலன்கருதியும், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் 2022-2023 ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில், தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தில் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

    அந்த அறிவிப்பின்படி, தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன வளாகத்தில் ஒப்பனை அறைகள், அலங்கார உடை அறை, உணவு அருந்தும் அறை ஆகியவை இணைந்த சுமார் 17,517 சதுர அடி குளிபடப்பிடிப்புத்தளம், பழைய மாணவர் விடுதி, நீதிமன்றம், சிறைச்சாலை, படப்பிடிப்புத் தளத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய குளிரூட்டக் கருவிகள், இரண்டு புதிய மின்மாற்றிகள் (11 kv HT 500 KVA- Transformers) மற்றும் இதர மின் சீரமைப்புப் பணிகள் உள்ளிட்டவை 5.10 கோடி ரூபாய் செலவில் முழு அளவில் புனரமைக்கப்பட்டு, முதலமைச்சர் அவர்களால் இன்றையதினம் திறந்து வைக்கப்பட்டது.

    இந்த புனரமைக்கப்பட்ட குளிரூட்ட வசதியுடன் கூடிய படப்பிடித்துத் தளம் திரைப்படத் துறையினருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    வெளிநாடு செல்லும் புதுச்சேரி விளையாட்டு வீரர்கள் பயணப்படியை அரசே ஏற்கும்: அமைச்சர்

    August 26, 2025
    மாநிலம்

    உயர் கல்வித் துறையில் ரூ.51.04 கோடியில் கட்டப்பட்ட கல்விசார் கட்டடங்கள் திறப்பு

    August 26, 2025
    மாநிலம்

    தமிழகம் முழுவதும் ரூ.174 கோடியில் 19 புதிய ஐடிஐக்கள்: முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

    August 26, 2025
    மாநிலம்

    மக்களிடம் கனிவாக பேசி கோரிக்கைகளை பெற வேண்டும்: அதிகாரிகளுக்கு முதல்வர் அறிவுறுத்தல்

    August 26, 2025
    மாநிலம்

    நாய் இனப்பெருக்க நிறுவனங்கள் பதிவு செய்வது கட்டாயம்: விலங்குகள் நல வாரியம் அறிவுறுத்தல்

    August 26, 2025
    மாநிலம்

    அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வான 89 பேருக்கு பணி ஆணைகள் வழங்கல்

    August 26, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • வெளிநாடு செல்லும் புதுச்சேரி விளையாட்டு வீரர்கள் பயணப்படியை அரசே ஏற்கும்: அமைச்சர்
    • உயர் கல்வித் துறையில் ரூ.51.04 கோடியில் கட்டப்பட்ட கல்விசார் கட்டடங்கள் திறப்பு
    • உங்கள் பழைய சேலை-ப்ளூஸை புத்தம் புதியதாக மாற்ற 5 அழகான வழிகள்
    • பாலியல் புகாரில் சிக்கிய கேரள எம்எல்ஏ: காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கம்
    • தரமணியில் ரூ.5.10 கோடியில் குளிரூட்டப்பட்ட படப்பிடிப்புத் தளம் திறப்பு

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.