Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, September 22
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»தரத்தை உயர்த்தாமல் காலை உணவு திட்டத்தை விரிவுபடுத்துவது பலனளிக்காது: நயினார் நாகேந்திரன் விமர்சனம்
    மாநிலம்

    தரத்தை உயர்த்தாமல் காலை உணவு திட்டத்தை விரிவுபடுத்துவது பலனளிக்காது: நயினார் நாகேந்திரன் விமர்சனம்

    adminBy adminAugust 28, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    தரத்தை உயர்த்தாமல் காலை உணவு திட்டத்தை விரிவுபடுத்துவது பலனளிக்காது: நயினார் நாகேந்திரன் விமர்சனம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: பள்​ளி​களில் காலை உணவின் தரத்தை உயர்த்​தாமல் அத்​திட்​டத்தை விரிவுபடுத்​து​வது பெரிய அளவில் பலன் அளிக்காது என்று பாஜக தமிழக தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் விமர்​சித்​துள்​ளார்.

    தமிழக முதல்​வரின் காலை உணவு திட்​டம் நகர்ப்​பகு​தி​களில் உள்ள அரசு உதவி​பெறும் பள்​ளி​களுக்​கும் நேற்று விரி​வாக்​கம் செய்​யப்​பட்​டது. இத்​திட்​டத்தை சென்​னை​யில் நேற்று நடை​பெற்ற விழா​வில் முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் தொடங்​கி​வைத்​தார். இந்​நிலை​யில், காலை உணவு திட்​டம் விரி​வாக்​கம் செய்​யப்​படு​வது குறித்து தமிழக பாஜக தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் சமூக வலை​தளத்​தில் நேற்று வெளி​யிட்ட பதி​வில் கூறி​யிருப்​ப​தாவது:

    தேசிய கல்விக் கொள்​கை​யின் ஓர் அங்​க​மான காலை உணவுத் திட்​டத்தை நகர்ப்​புறங்​களி​லுள்ள அரசு உதவி​பெறும் பள்​ளி​களுக்​கும் விரி​வாக்​கம் செய்​திருக்​கும் தமிழக முதல்​வர் மு.க.ஸ்​டா​லினுக்கு வாழ்த்​துகளைத் தெரி​வித்​துக் கொள்​கிறேன். அதோடு தங்​கள் மனதுக்கு நிறை​வான இந்​நன்​னாளில், சமீபத்​தில் தாராபுரம் அரசுப் பள்​ளி​யிலும் திரு​வாரூர் பூனா​யிருப்பு அரசுத் தொடக்​கப் பள்​ளி​யிலும் வழங்​கப்​பட்ட காலை உணவில் பல்லி விழுந்து கிடந்​ததை நினை​வூட்ட விரும்​பு​கிறேன்.

    இவை வெறும் எடுத்​துக்​காட்​டுச் சம்​பவங்​களே. காலை உணவில் நடக்​கும் அனைத்து குளறு​படிகளை​யும் வரிசைப்​படுத்த வேண்​டுமென்​றால் சீனப் பெருஞ்​சுவர் போதாது என்​பதே உண்​மை.

    பிஞ்​சுக் குழந்​தைகளின் பசி​யாற்ற வேண்​டிய காலை உணவில் புழு முதல் பல்லி வரை கிடக்​கிறதே, அது திமுக அரசின் விழிகளுக்குப் புல​னாக​வில்​லை​யா? ஊட்​டச்​சத்து மிக்​க​தாக இருக்க வேண்​டிய உணவை நெடுந்​தூரத்​தில் இருந்து சமைத்​துக் கொண்டு வந்து ஊசிப்​போன உணவாக மாற​விடு​வது தான் திமுக அரசின் சாதனை​யா, உணவு எனும் பெயரில் எதை வேண்டுமானாலும் கொடுக்​கலாம், அரசு பள்​ளி​களில் படிப்​பது ஏழை எளிய குழந்​தைகள் தானே என்ற அலட்​சி​யமா அல்​லது போலி விளம்​பரங்​களின் மூலம் காலை உணவில் நடக்​கும் குளறு​படிகளை மறைத்​து​விடலாம் என்ற எண்​ண​மா? இவ்​வாறு அவர் கூறி​யுள்​ளார்​.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    சென்னை ஆட்சியர் அலுவலகம் கிண்டிக்கு மாறுகிறது: இடம் ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியீடு

    September 22, 2025
    மாநிலம்

    நடிகர் எஸ்.வி.சேகர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

    September 22, 2025
    மாநிலம்

    ஆளுநர் ரவி, அண்ணாமலை வரிசையில் விஜய்யும் அவதூறு அரசியல் செய்கிறார்: ஆளூர் ஷாநவாஸ் விமர்சனம்

    September 22, 2025
    மாநிலம்

    அதிமுக பிரச்சாரத்துக்கு வரும் கூட்டம் வாக்குகளாக மாறும்: நயினார் நாகேந்திரன் நம்பிக்கை

    September 22, 2025
    மாநிலம்

    காவிரி டெல்டா பகுதியில் மீண்டும் ஷேல் காஸ் ஆய்வு கிணறுகள்: தடுத்து நிறுத்த தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வலியுறுத்தல்

    September 22, 2025
    மாநிலம்

    போக்சோ வழக்கில் புகார் அளிக்க காலவரம்பு இல்லை: உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு

    September 22, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ரைட் படத்தில் சமூக அக்கறை விஷயம்! – நட்டி தகவல்
    • சென்னை ஆட்சியர் அலுவலகம் கிண்டிக்கு மாறுகிறது: இடம் ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியீடு
    • உங்கள் கண்கள் தலைவலியை ஏற்படுத்துகின்றனவா: நிவாரணம் கண்டுபிடிப்பதற்கான இணைப்பு, காரணங்கள் மற்றும் வழிகளைப் புரிந்துகொள்வது | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ’15 நிமிடங்கள் ஒரு நேரத்தில் ‘: எரிகா உஷா வான்ஸின் ஆறுதலின் வார்த்தைகளை நினைவு கூர்ந்தார்; அவளை ‘விலைமதிப்பற்ற பெண்’ என்று அழைக்கிறார் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • அருணாச்சல், திரிபுராவுக்கு பிரதமர் மோடி இன்று பயணம்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.