Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Thursday, August 7
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»தமிழக வளர்ச்சிக்கு மத்திய அரசு இடையூறு செய்கிறது: சபாநாயகர் அப்பாவு குற்றச்சாட்டு
    மாநிலம்

    தமிழக வளர்ச்சிக்கு மத்திய அரசு இடையூறு செய்கிறது: சபாநாயகர் அப்பாவு குற்றச்சாட்டு

    adminBy adminAugust 7, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    தமிழக வளர்ச்சிக்கு மத்திய அரசு இடையூறு செய்கிறது: சபாநாயகர் அப்பாவு குற்றச்சாட்டு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    நாகர்கோவில்: “மத்திய அரசு தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு எவ்வளவு இடையூறு செய்ய முடியுமோ அதனை செய்து வருகிறது என சட்டப்பேரவை தலைவர் அப்பாவு குற்றஞ் சாட்டினார்.

    கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நாகர்கோவிலுக்கு இன்று வந்த தமிழக சட்டபேரவைத் தலைவர் அப்பாவு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

    அப்போது பேசிய அவர், “தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை எங்கும் கிடையாது. சட்டம் ஒழுங்கை சீர்குலைப்பது யார் என்பது உங்களுக்கு தெரியும். மாநில அரசுக்கு ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் அமைப்பதற்கு முழு உரிமை உள்ளது, பணியாளர் நியமிக்கவும் மாநில அரசுக்கு உரிமை உள்ளது. மறைந்த தலைவர் கலைஞர் பெயரில் கும்பகோணத்தில் புதிதாக ஆரம்பிக்க உள்ள ஒரு பல்கலைக்கழகத்திற்கு சட்ட முன்வடிவு சட்டமன்றத்தில் கொண்டுவரப்பட்டு அனுமதிக்காக ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    ஆளுநர் இவ்வளவு நாள் கழித்து குடியரசுத் தலைவருக்கு அதனை அனுப்பியுள்ளார். அதில் என்ன காரணம் கூறுகிறார்கள் என்றால் பணியாளர் நியமனம் ஒன்றிய அரசின் விதிமுறைகளின்படி இல்லை என்று கூறுகிறார்.

    கலைஞர் பெயரில் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கும்போதுதான் அதில் குறை இருக்கிறது என்று கண்டுபிடித்தார்களா? என்பது தெரியவில்லை.

    துணை வேந்தர் நியமனத்திற்கு மாநில அரசு மூன்று பேரை நியமனம் செய்கிறார்கள், அரசு தரப்பில் ஒருவர், சிண்டிகேட் மெம்பர் ஒருவர், கல்வியாளர் ஒருவர். இதில் யுஜிசி நான்காவதாக ஒருவரை நியமிக்க வேண்டும் என்று கூறுகிறார்கள், தமிழ்நாட்டில் அப்படி சட்டம் இல்லை, தமிழ்நாடு சட்டமன்றம் கொண்டுவந்துள்ள சட்டத்திருத்தின்படி அப்படி கிடையாது.

    எந்த காரணமும், குறையும் கண்டுபிடிக்காத காரணத்தினால் கலைஞர் பெயரில் பல்கலைக்கழகம் வருவதற்கு தனிப்பட வெறுப்பு இருக்கிறதோ என்று தெரியவில்லை. அவர் சமூக நீதிக்காக எல்லோருக்காகவும் வாழ்ந்து மறைந்தவர். சனாதன தர்மம் அதற்கு தடையாக இருந்தால் அதற்கு நாம் என்ன செய்ய முடியும்.

    மசோதாவுக்கு மூன்று மாதங்களுக்குள் பதில் சொல்ல வேண்டும். மாநில அரசுதான் பல்கலைக்கழகம் ஆரம்பித்து ஆளுநர்தான் எல்லா பல்கலைக்கழகத்திற்கும் அனுமதி தந்துள்ளார். இந்த ஒரு பல்கலைக்கழகத்திற்குதான் ஆளுநர் மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பியுள்ளார். அதில் இருந்து திட்டமிட்டு என்ன நோக்கத்திற்கு செய்கிறார்கள் என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.

    சட்டப்படி யார் தவறு செய்தாலும் இந்த அரசு நடவடிக்கை எடுக்கும். எந்த குற்றத்தையும் மூடி மறைப்பதும் கிடையாது, துணை போவதும் கிடையாது. பள்ளியில் படிக்கும்போது, சமூகத்தில் என்று வரும்போது தனிப்பட்ட சிலரது விருப்பு வெறுப்பில் சம்பவங்கள் நடக்கின்றன. இதில் அரசால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். வரும் 14-ம் தேதி அமைச்சரவை கூட இருக்கிறது. அப்போது, ஆணவக் கொலைக்கு எதிராக சட்டம் கொண்டுவருவது தொடர்பாக நல்ல முடிவு வரும்.

    ஒன்றிய அரசு தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு எவ்வளவு இடையூறு செய்ய முடியுமோ அதனை செய்கின்றனர், அதனையும் தாண்டி முதல்வர் முழு முயற்சி செய்து எல்லா துறைகளிலும் வளர்ச்சி அடைந்துள்ளது. இந்தியாவிலேயே முதலிடத்தில் தமிழ்நாடு இந்த அளவுக்கு பொருளாதார வளர்ச்சி அடைந்துள்ளது என்றால் எல்லோருக்கும் பாடமாக இருப்பது தமிழ்நாடு என்பதை தெரிந்துகொள்ள வேண்டுமே தவிர அதனை தாங்க முடியாமல் சிலர் வார்த்தைகள் கூறுகிறார்கள். எதிர்க்கட்சித் தலைவர் தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் செய்வதால் ஏதாவது மாற்றம் வந்துள்ளதா என்பதை அவரிடம்தான் கேட்க வேண்டும்.” என்றார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    8 மாவட்​டங்​களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

    August 7, 2025
    மாநிலம்

    விரைவில் 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை எட்டி தமிழகம் சாதனை படைக்கும்: தங்கம் தென்னரசு

    August 7, 2025
    மாநிலம்

    பாஜக குறித்து யாரும் தவறாகப் பேசினால் முதல் ஆளாக எதிர்ப்பேன்: நயினார் நாகேந்திரன்

    August 7, 2025
    மாநிலம்

    “கம்யூனிஸ்ட் கட்சிகளை விழுங்கி வருகிறது திமுக” – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

    August 6, 2025
    மாநிலம்

    21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் எஸ்எஸ்ஐ சண்முகவேல் உடல் தகனம்

    August 6, 2025
    மாநிலம்

    45+ வயது பெண் போலீஸாருக்கு இரவு பணியில் இருந்து விலக்கு – சென்னை காவல் ஆணையர் உத்தரவு

    August 6, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • டெல்லியில் நடை பயிற்சி சென்றபோது தமிழக எம்.பி. சுதாவிடம் நகை பறித்தவர் கைது: 4 பவுன் தங்க சங்கிலி மீட்பு 
    • 8 மாவட்​டங்​களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
    • தொலைந்து போன உணர்விலிருந்து பீஸ்மேக்கர் விளையாடுவது வரை: 5 விஷயங்கள் மட்டுமே நடுத்தர குழந்தை கடந்து செல்கின்றன | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • விரைவில் 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை எட்டி தமிழகம் சாதனை படைக்கும்: தங்கம் தென்னரசு
    • பைன் கொட்டைகளின் 6 ஆரோக்கிய நன்மைகள்: அதன் ஊட்டச்சத்து கலவைகள் மற்றும் பாதுகாப்பு உதவிக்குறிப்புகள் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.