Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Saturday, August 2
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் விவகாரம்: மத்திய அரசிடம் பேசி தீர்வுகாண முயற்சிப்பேன் – இபிஎஸ் உறுதி
    மாநிலம்

    தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் விவகாரம்: மத்திய அரசிடம் பேசி தீர்வுகாண முயற்சிப்பேன் – இபிஎஸ் உறுதி

    adminBy adminAugust 1, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் விவகாரம்: மத்திய அரசிடம் பேசி தீர்வுகாண முயற்சிப்பேன் – இபிஎஸ் உறுதி
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    ராமநாதபுரம்: தமிழக மீனவர்​கள் கைது செய்​யப்​படும் விவ​காரம் தொடர்​பாக மத்​திய அரசிடம் பேசி, உரிய தீர்​வு​காண முயற்சிப்​பேன் என்று அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி கூறி​னார்.

    ‘மக்​களை காப்​போம், தமிழகத்தை மீட்​போம்’ என்ற பிரச்​சா​ரத்தை மேற்​கொண்டு வரும் பழனி​சாமி, ராம​நாத​புரத்​தில் மீனவர்​கள், விவ​சா​யிகள், நெச​வாளர்​களு​ட​னான கலந்​துரை​யாடல் கூட்​டத்​தில் நேற்று பேசி​ய​தாவது: இலங்கை கடற்​படை​யின​ரால் தமிழக மீனவர்​கள் கைது செய்​யப்​படு​வதை​யும், இலங்கை சிறை​களில் அடைக்​கப்​பட்​டுள்ள மீனவர்​கள் மற்​றும் பறி​முதல் செய்யப்பட்டுள்ள படகு​களை மீட்​க​வும் மத்​திய அரசிட​மும், சம்​பந்​தப்​பட்ட அமைச்​சர்​களிட​மும் பேசி, உரிய தீர்​வு​காண முயற்சிப்பேன்.

    கடந்த அதி​முக ஆட்​சி​யில் இரு​முறை பயிர் கடன்​கள் தள்​ளு​படி செய்​யப்​பட்​டுள்​ளன. ராம​நாத​புரம் மாவட்ட விவ​சா​யிகளுக்கு ரூ.540 கோடி காப்​பீட்​டுத் தொகை பெற்​றுத் தரப்​பட்​டுள்​ளது. கடந்த ஆட்​சி​யில் 24 மணி நேரம் மும்​முனை மின்​சா​ரம் வழங்கப்பட்டது. கண்​மாய்​கள் ஆழப்​படுத்​தப்​பட்​டன. ஏறத்​தாழ ரூ.14,400 கோடி​யில் காவேரி-குண்​டாறு திட்​டத்தை மேற்​கொண்டோம்.

    ஆனால், திமுக ஆட்​சிக்கு வந்​ததும் இந்த திட்​டத்தை கிடப்​பில் போட்​டு​விட்​டது. தற்​போது மேட்​டூர் அணை நிரம்பி 1.25 லட்​சம் கனஅடி நீர் கடலில் கலந்து வீணாகிறது. காவிரி-குண்​டாறு திட்​டம் இருந்​திருந்​தால், கடலில் உபரி​யாக கலக்​கும் தண்​ணீ​ரால் ராமநாத​புரம் மாவட்ட கண்​மாய்​கள் நிரம்​பி இருக்​கும். மீண்​டும் அதி​முக ஆட்​சிக்கு வந்​ததும் காவிரி-குண்​டாறு திட்​டம் முழுமையாக நிறைவேற்​றப்​படும்.

    அதே​போல, அதி​முக ஆட்​சி​யில் நெச​வாளர்​களுக்கு பல்​வேறு சலுகைகள் வழங்​கப்​பட்​டன. திமுக ஆட்​சி​யில் அவர்​களுக்கு எந்த சலுகை​யும் கிடைக்​க​வில்​லை. அதி​முக ஆட்​சி​யில் கைத்​தறி நெச​வாளர் கூட்​டுறவு சங்​கங்​கள் லாபத்​தில் இயங்​கின. திமுக ஆட்சியில் கைத்​தறி நெச​வாளர் கூட்​டுறவு சங்​கங்​கள் மூடும் நிலை​யில் உள்​ளன.

    நாட்​டுப்​படகு மீனவர்​கள் தங்​களது பிரச்​சினை​களைத் தெரி​வித்​துள்​ளனர். அதி​முக ஆட்​சி​யில் அவற்​றுக்​குத் தீர்​வு​காணப்​படும். 16 ஆண்​டு​கள் மத்​தி​யில் ஆட்சி அதி​காரத்​தில் இருந்த திமுக, கச்​சத்​தீவை மீட்க அழுத்​தம் கொடுக்​க​வில்​லை. கச்​சத்​தீவை மீட்க அதிமுக சார்​பில் மத்​திய அரசை தொடர்ந்து வலி​யுறுத்​து​வோம். இவ்​வாறு அவர் பேசி​னார்.

    முன்​ன​தாக, ராம​நாத​புரம் சேதுபதி மன்​னர்​களின் அரண்​மனையைப் பார்​வை​யிட்ட பழனி​சாமி, மன்​னர் குடும்​பத்​தைச் சேர்ந்த முத்​து​ராமலிங்க நாகேந்​திர சேதுபதி மற்​றும் அவரது தாயார் லட்​சுமி நாச்​சி​யாரை சந்​தித்​துப் பேசி​னார். தொடர்ந்​து, அங்​குள்ள வரலாற்​றுச் சிறப்​புமிக்க கலைப் பொருட்​கள், மூலிகை ஓவி​யங்​கள், தொல்​லியல் பொருட்​களைப் பார்​வை​யிட்​டார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    துவாக்குடி அரசு மாதிரி பள்ளியில் மாணவர் தற்கொலை – உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்

    August 2, 2025
    மாநிலம்

    கவினின் உடலை ஐந்து நாட்களுக்குப் பிறகு பெற்றுக் கொண்ட உறவினர்கள்

    August 2, 2025
    மாநிலம்

    அதிமுக பொதுச் செயலாளர் தேர்வு விவகாரம்: இபிஎஸ் மனு தள்ளுபடி

    August 2, 2025
    மாநிலம்

    தமிழக அரசின் திட்டங்களில் முதல்வர் ஸ்டாலின் பெயரை பயன்படுத்த உயர் நீதிமன்றம் தடை!

    August 2, 2025
    மாநிலம்

    “மக்களுக்காக குரல் கொடுக்கும் அதிமுகவுக்கு பாஜக துணை நிற்கிறது” – எடப்பாடி பழனிசாமி பேச்சு

    August 2, 2025
    மாநிலம்

    ஒரு கி.மீ. நடந்து வந்து குடிநீர் எடுக்கிறோம்: எடப்பாடியிடம் புகார் தெரிவித்த கிராம பெண்கள் 

    August 1, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • துவாக்குடி அரசு மாதிரி பள்ளியில் மாணவர் தற்கொலை – உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்
    • மருனால் தாக்கூர் தனது பிறந்தநாளில் 83 2.83 லட்சம் லூயிஸ் உய்ட்டன் மினி உடையில் மோதிரங்கள்
    • இந்தியாவுக்கான 25% வரிவிதிப்பு ஆக.7 அமல்: பாகிஸ்தானுக்கான வரியை 10% குறைத்து ட்ரம்ப் உத்தரவு
    • கவினின் உடலை ஐந்து நாட்களுக்குப் பிறகு பெற்றுக் கொண்ட உறவினர்கள்
    • டதுரா: இந்த 10 படிகளைப் பின்பற்றுவதன் மூலம் நீங்கள் வீட்டில் வளரக்கூடிய புனித இரவு பூக்கும் மலர் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.