Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, September 2
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»தமிழக பாஜக உட்கட்சி பூசல், வார் ரூம் மோதல்கள்: டெல்லியில் செப்.3-ல் உயர்மட்ட குழு ஆலோசனை
    மாநிலம்

    தமிழக பாஜக உட்கட்சி பூசல், வார் ரூம் மோதல்கள்: டெல்லியில் செப்.3-ல் உயர்மட்ட குழு ஆலோசனை

    adminBy adminSeptember 1, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    தமிழக பாஜக உட்கட்சி பூசல், வார் ரூம் மோதல்கள்: டெல்லியில் செப்.3-ல் உயர்மட்ட குழு ஆலோசனை
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: டெல்லியில் செப்.3-ம் தேதி பாஜக உயர்மட்ட குழு கூட்டம் நடக்கிறது. இக்கூட்டத்தில் தமிழக பாஜகவில் நடக்கும் உட்கட்சி பூசல்கள், வார் ரூம் மோதல்கள் குறித்து விவாதிக்கவும், 234 தொகுதிகளுக்கு தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிப்பது குறித்து ஆலோசிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

    தமிழக பாஜகவில் தற்போது உட்கட்சி பூசல் முற்றி வருவதாக பாஜக வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. குறிப்பாக, அண்ணாமலை, நிர்மலா சீதாராமன் இடையே மோதல் போக்கு நீடித்து வருவதாகவும், அண்மையில் சென்னையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் கூட, ”கடந்த மக்களவைத் தேர்தல் தோல்விக்கு அண்ணாமலை தான் காரணம்” என்று நிர்மலா சீதாராமன் மறைமுகமாக சாடியதாகவும் தகவல் வெளியானது. மேலும், அண்ணாமலை, நயினார் நாகேந்திரன் இடையேயான வார் ரூம் பிரச்சினையும் தீவிரமடைந்து வருவதாக கூறப்படுகிறது.

    இதன் காரணமாகவே பாஜக நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் அண்ணாமலை தவிர்த்து வருவதாக நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர். தேர்தல் நேரத்தில் பாஜக உட்கட்சி பிரச்சினைகள் மேலும் வெடித்து, தேர்தலில் பின்னடைவை சந்தித்துவிட கூடாது என்பதற்காக, டெல்லியில் அவசர அவசரமாக உயர்மட்ட குழு கூட்டத்தை தேசிய தலைமை கூட்டியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    அந்த வகையில், செப்.3-ம் தேதி டெல்லியில் பாஜக உயர்மட்ட குழு கூட்டம் நடைபெற உள்ளது. இதில் தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா, அமைப்பு பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷ், உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். தமிழகத்தில் இருந்து, மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், அண்ணாமலை, எல்.முருகன், தமிழிசை சவுந்தரராஜன், கேசவ விநாயகன் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது.

    அதிமுகவுடனான கூட்டணி ஒருங்கிணைப்பு மற்றும் அதற்கான பொறுப்பாளர்கள் தேர்வு, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளை கூட்டணிக்கு இழுப்பது, பாஜக தேர்தல் பணிக்குழு, தமிழகத்தில் வெற்றி பெறுவதற்கு சாதகமான சட்டப்பேரவை தொகுதிகள், மேலும் தேர்தல் திட்டங்கள் குறித்து கூட்டத்தில் விவாதிக்க இருக்கின்றனர். அதேபோல், சட்டப்பேரவை தேர்தலுக்கு தகுதியான வேட்பாளர்கள், 234 தொகுதிகளுக்கும் தேர்தல் பொறுப்பாளர்கள் அறிவிப்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களும் ஆராயப்படுகிறது.

    மிக முக்கியமாக, தமிழக பாஜகவில் நடைபெறும் உட்கட்சி பூசல்கள், நிர்மலா சீதாராமன், அண்ணாமலை இடையேயான மோதலுக்கும், அண்ணாமலை, நயினார் நாகேந்திரன் வார் ரூம் பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பது குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. குடியரசு துணைத் தலைவர் தேர்தல், பாஜக தேசிய தலைவர் தேர்தலில், பாஜகவின் தேசிய தலைமை முழு கவனம் செலுத்தி வந்த நிலையில், தற்போது திடீரென உயர்மட்ட குழு கூட்டத்தை கூட்டியிருப்பது பாஜக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    எத்தனை முறை வந்தாலும் எங்களுக்காக என்ன செய்தார் முதல்வர்? – தடாலடி கேள்வி எழுப்பும் தருமபுரி பாஜக!

    September 2, 2025
    மாநிலம்

    தமிழகம் முழுவதும் உள்ள 25 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது

    September 2, 2025
    மாநிலம்

    செப்.4-ல் மதுரையில் நடக்கவிருந்த மாநாடு தள்ளிவைப்பு: ஓபிஎஸ் தரப்பு அறிவிப்பு

    September 1, 2025
    மாநிலம்

    “தகுதி வாய்ந்த டிஜிபியை நியமிக்கச் சொல்லியும் கூட திமுக கேட்கவில்லை!” – மதுரையில் இபிஎஸ் சாடல்

    September 1, 2025
    மாநிலம்

    இபிஎஸ் கூட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநரை தாக்கிய வழக்கில் அதிமுகவினர் 4 பேருக்கு இடைக்கால முன்ஜாமீன்

    September 1, 2025
    மாநிலம்

    புதுச்சேரியில் காங்கிரஸ் அலுவலகத்தை முற்றுகையிட வந்த பாஜகவினர் – நகர் முழுவதும் கடும் நெரிசல்

    September 1, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • சீனாவில் நடைபெற்ற ஷாங்காய் உச்சி மாநாட்டில் பஹல்காம் தாக்குதலை கண்டித்து கூட்டறிக்கை: காரில் பிரதமர் மோடியுடன் ரஷ்ய அதிபர் புதின் ஆலோசனை
    • எத்தனை முறை வந்தாலும் எங்களுக்காக என்ன செய்தார் முதல்வர்? – தடாலடி கேள்வி எழுப்பும் தருமபுரி பாஜக!
    • ஃபர்ஹானா போடி துபாய் கவர்ச்சியை வெனிஸ் திரைப்பட விழாவிற்கு கொண்டு வருகிறார்
    • ஆசிரியர்களுக்கு டெட் தேர்வு கட்டாயம்: உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு
    • தமிழகம் முழுவதும் உள்ள 25 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.