Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, September 2
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»தமிழக சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வை திரும்பப்பெற வேண்டும்: அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தல்
    மாநிலம்

    தமிழக சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வை திரும்பப்பெற வேண்டும்: அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தல்

    adminBy adminSeptember 2, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    தமிழக சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வை திரும்பப்பெற வேண்டும்: அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தல்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: தமிழகத்​தில் உள்ள சுங்​கச்​சாவடிகளில் நேற்று முதல் அமலுக்கு வந்த சுங்​கக்​கட்டண உயர்வை மத்​திய அரசு திரும்பப் ​பெற வேண்​டும் என்று பல்​வேறு அரசி​யல் கட்​சித் தலை​வர்​கள் வலி​யுறுத்​தி​யுள்​ளனர். தமிழகத்​தில் விக்​கிர​வாண்​டி, சமயபுரம், ஓமலூர், கிருஷ்ணகிரி, தரு​மபுரி உள்​ளிட்ட 38 சுங்​கச்​சாவடிகளில் 5 முதல் 7 சதவீதம் வரையி​லான சுங்​கக் கட்டண உயர்வு நேற்று முதல் அமலுக்கு வந்​த நிலை​யில், அதற்கு கண்​டனம் தெரிவித்து பல்​வேறு அரசியல் கட்​சித் தலை​வர்​கள் கூறி​யிருப்​ப​தாவது:

    இந்​திய கம்​யூனிஸ்ட் மாநில செய​லா​ளர் இரா.​முத்​தரசன்: விலை​வாசி உயர்​வால் மக்​கள் கடுமை​யாக பாதிக்​கப்​பட்டு வருகின்றனர். அத்​தி​யா​வசிய பொருட்​கள் உட்பட அனைத்து பொருட்​களின் விலை​யும் உயர்ந்து கொண்டே இருக்​கின்​றன. இதற்கிடையே அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்​தி​ய பொருட்​களுக்கு 50 சதவீத வரி விதித்​திருக்​கிறார்.

    இதனால் திருப்​பூர் உட்பட தமிழகமே கடுமை​யாக பாதிக்​கப்​பட்​டிருக்​கிறது. இத்​தகைய நெருக்​கடி மிகுந்த சூழலில் சுங்க கட்டண உயர்வு என்​பது வெந்​த​புண்​ணில் வேல் பாய்ச்​சுவது போல் இருக்​கிறது. சுங்​கக் கட்டண உயர்வை மத்​திய அரசு திரும்​பப்​பெற வேண்​டும்.

    மார்க்​சிஸ்ட் மாநில செய​லா​ளர் பெ.சண்​முகம்: சுங்​கக்​கட்​ட​ணம் உயர்வு கடுமை​யான பாதிப்பை ஏற்​படுத்​தும். விலை​வாசி உயர்​வுக்கு அடிப்​படை​யாக விளங்​கும். கட்​ட​ணத்தை உயர்த்​து​வ​தாக அறி​விப்பு வந்​த​போதே கடும் கண்​டனத்​தை, எதிர்ப்பை தெரி​வித்​தோம். எனவே அமலுக்கு வந்​துள்ள அபரிமித​மான சுங்​கக்​கட்டண உயர்வை மத்​திய அரசு திரும்ப பெற வேண்​டும்.

    அமமுக பொதுச் ​செய​லா​ளர் டிடிவி தினகரன்: ஏற்​கெனவே அத்​தி​யா​வசி​யப் பொருட்​களின் விலை​யேற்​றம் உச்​சத்​தைத் தொட்​டுக் கொண்​டிருக்​கும் நிலை​யில், தற்​போது உயர்ந்​திருக்​கும் இந்த சுங்​கக் கட்​ட​ணம் ஏழை, எளியமக்​களின் மீதான பொருளா​தா​ரச்சுமையை மேலும் அதி​கரிக்​கும். ஆண்​டுக்கு 2 முறை உயர்த்​தப்​படும் சுங்​கக் கட்​ட​ணத்​தால் சரக்கு மற்​றும் வாடகை வாக​னங்​களின் கட்​ட​ணங்​கள் உயர்​வதோடு, பேருந்​துக் கட்​ட​ணங்​கள் உயர்​வதற்​கான அபாயகர​மான சூழலும் உள்​ளது. எனவே அமலுக்கு வந்​திருக்​கும் சுங்​கக் கட்டண உயர்வை உடனடி​யாக மத்​திய அரசு திரும்​பப்​பெற வேண்​டும்.

    வி.கே.சசிகலா: தமிழகத்​தில் சொத்​து​வரி உயர்​வு, ஆவின் பொருட்​களின் விலை​யேற்​றம், வரலாறு காணாத வகை​யில் மின்கட்டண உயர்​வு, கட்​டு​மான பொருட்​கள், விவ​சா​யம் சார்ந்த பொருட்​களின் விலை உயர்​வு​களால் மக்​கள் கடுமை​யாக பாதிப்​படைந்து தவிக்​கும் நிலை​யில், சுங்​கக்​கட்டண உயர்வு அனை​வருக்​கும் கூடு​தல் சுமையளிப்​ப​தாக அமை​யும். எனவே, தமிழக மக்​களின் நலனை கருத்​தில் கொண்டு சுங்​கக்​கட்​ட​ண உயர்​வை மத்​தி​ய அரசு கைவிட வேண்​டும்​.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    மீஞ்சூர் அருகே வட மாநில தொழிலாளர்கள் போராட்டத்தில் போலீஸ் மீது கல்வீச்சு: 50-க்கும் மேற்பட்டோர் கைது

    September 2, 2025
    மாநிலம்

    “இபிஎஸ் சுற்றுப்பயணத்தால் எழுச்சியும் இல்லை, பலனும் இல்லை” – அமைச்சர் சேகர்பாபு

    September 2, 2025
    மாநிலம்

    கச்சத்தீவு குறித்த இலங்கை அதிபரின் பேச்சு இருநாட்டு உறவுக்கு எதிரானது: முத்தரசன் கண்டனம்

    September 2, 2025
    மாநிலம்

    முதல்வரின் முதலீடு திரட்டும் பயணம் மோசடிப் பயணம் என்பது நிரூபணம்: அன்புமணி

    September 2, 2025
    மாநிலம்

    முற்றுகிறதா எடப்பாடியுடனான மோதல்? – செப்.5-ல் மனம் திறக்கப் போவதாக செங்கோட்டையன் தகவல்

    September 2, 2025
    மாநிலம்

    ஜெர்மனி முதலீட்டாளர்கள் மாநாட்டில் தமிழகத்துக்கு ரூ.3819 கோடி முதலீடு

    September 2, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • 10 நாட்களில் ‘வாடிவாசல்’ அப்டேட்: வெற்றிமாறன்
    • மீஞ்சூர் அருகே வட மாநில தொழிலாளர்கள் போராட்டத்தில் போலீஸ் மீது கல்வீச்சு: 50-க்கும் மேற்பட்டோர் கைது
    • TSA பயண உதவிக்குறிப்புகள்: விமான நிலைய பாதுகாப்பு மன அழுத்தத்தை இல்லாத 9 வழிகள் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ‘கட்டா குஸ்தி 2’ அறிமுக வீடியோ வெளியீடு
    • “இபிஎஸ் சுற்றுப்பயணத்தால் எழுச்சியும் இல்லை, பலனும் இல்லை” – அமைச்சர் சேகர்பாபு

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.