Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Wednesday, August 27
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»தமிழகம் முழு​வதும் இன்று விநாயகர் சதுர்த்தி கோலாகலம்: பாது​காப்பு பணி​யில் 1 லட்​சம் போலீ​ஸார்
    மாநிலம்

    தமிழகம் முழு​வதும் இன்று விநாயகர் சதுர்த்தி கோலாகலம்: பாது​காப்பு பணி​யில் 1 லட்​சம் போலீ​ஸார்

    adminBy adminAugust 27, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    தமிழகம் முழு​வதும் இன்று விநாயகர் சதுர்த்தி கோலாகலம்: பாது​காப்பு பணி​யில் 1 லட்​சம் போலீ​ஸார்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: விநாயகர் சதுர்த்​தியை முன்​னிட்டு தமிழகம் முழு​வதும் 1 லட்​சம் போலீ​ஸார் பாது​காப்பு பணி​யில் ஈடு​பட்​டுள்​ளனர். மேலும் 35,000 விநாயகர் சிலைகள் வைக்​கப்​பட்டு பூஜைகள் நடை​பெறுகின்​றன. விநாயகர் சதுர்த்தி விழா இன்று நாடு முழுவதும் கோலாகல​மாக கொண்​டாடப்​படு​கிறது. இதையொட்டி பாஜக, இந்து முன்​னணி உள்பட 65-க்​கும் மேற்​பட்ட இந்து அமைப்​பு​கள் மற்​றும் குடி​யிருப்​பு​வாசிகள், இளைஞர் அமைப்​பினர் என பல்​வேறு தரப்​பினர் பிரம்​மாண்ட விநாயகர் சிலைகளை நிறுவி வழிபட போலீ​ஸாரிடம் அனு​மதி கோரி​யிருந்​தனர்.

    அதைத்​தொடர்ந்​து, தமிழகம் முழு​வதும் சுமார் 35,000 சிலைகளை வைத்து வழிபட போலீ​ஸார் அனு​மதி வழங்​கினர். சென்​னையைப் பொறுத்​தவரை 1,500 சிலைகளுக்கு அனு​மதி வழங்​கப்​பட்​டுள்​ளது. மேலும், பல்​வேறு கட்​டுப்​பாடு​கள் விதிக்​கப்​பட்​டன. அதன்​படி, விநாயகர் சிலைகள் நிறு​வுமிடத்​தின் நில உரிமை​யாளர்​கள், சம்​பந்​தப்​பட்ட உள்​ளாட்சி அமைப்​பு​கள், நெடுஞ்​சாலைத்​துறை அல்​லது அரசுத் துறை​யிட​மிருந்து அனு​மதி பெற்​றிருக்க வேண்​டும். தீயணைப்​புத்​துறை, மின்​வாரி​யம், ஆகிய​வற்​றிட​மிருந்து தடை​யில்லா சான்​றுகள் பெற்​றிருக்க வேண்​டும்.

    நிறு​வப்​படும் சிலை​யின் உயர​மானது 10 அடிக்கு மேல் இருக்​கக்​கூ​டாது, பிற வழி​பாட்​டுத் தலங்​கள், மருத்​து​வ​மனை​கள், கல்வி நிறு​வனங்​கள் ஆகிய​வற்​றின் அரு​கில் சிலைகள் நிறு​வப்​படு​வதை தவிர்க்க வேண்​டும், மதவாத வெறுப்​புணர்​வைத் தூண்​டும் வகை​யிலோ, பிற மதத்​தினரின் உணர்​வு​களைப் புண்​படுத்​தும் வகை​யிலோ முழக்​கமிடு​வதற்​கும், கோஷமிடு​வதற்​கும் எவ்​விதத்​தி​லும் இடம் தரக்​கூ​டாது என கூறப்​பட்​டிருந்​தது.

    இதையடுத்​து, நேற்று இரவில் 35,000 சிலைகளும் நிறு​வப்​பட்​டன. அனைத்து சிலைகளுக்​கும் தலா ஒரு போலீ​ஸார் வீதம் பாது​காப்பு வழங்​கப்​பட்​டது. இந்த சிலைகளுக்கு தின​மும் பூஜைகள் செய்​யப்​பட்டு வரும் 30, 31-ம் தேதி​களில் (சனி, ஞாயிறு) ஊர்​வல​மாக எடுத்​துச் செல்​லப்​பட்டு கடல் மற்​றும் நீர் நிலைகளில் கரைக்​கப்பட உள்​ளது.

    சென்​னை​யில், பட்​டினப்​பாக்​கம் சீனி​வாச நகர், பால​வாக்​கம் பல்​கலை நகர், காசிமேடு மீன்​பிடி துறை​முகம், திரு​வொற்​றியூர் பாப்​புலர் எடைமேடை பின்​புறம் என 4 இடங்​களில் சிலைகளை கரைக்க அனு​மதி வழங்​கப்​பட்​டுள்​ளது. இதற்​கிடையே, விநாயகர் சதுர்த்தி பாது​காப்பு பணி​யில் சென்​னை​யில் 16 ஆயிரம் போலீ​ஸார் உட்​பட, தமிழகம் முழு​வதும் 1 லட்​சம் போலீ​ஸார் பாது​காப்பு பணி​யில் ஈடு​பட்​டுள்​ளனர். முன்​னெச்​சரிக்கை நடவடிக்​கை​யாக உளவுப் பிரிவு போலீ​ஸார் ரகசிய கண்​காணிப்​பில் ஈடு​பட்​டுள்​ளனர். சிலைகளுக்​கு இன்​று​ முதல்​ பூஜைகள்​ நடை​பெற உள்​ளன.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    28, 29-ல் பத்திரப்பதிவுக்கு கூடுதல் டோக்கன்

    August 27, 2025
    மாநிலம்

    தமிழகத்தில் 66,000 தொழில்முனைவோருக்கு ரூ.5,490 கோடி கடன்:  அமைச்சர் தகவல்

    August 27, 2025
    மாநிலம்

    காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டம்: செப்டம்பர் மாதத்துக்கான 37 டிஎம்சி நீரை கோரியது தமிழக அரசு

    August 27, 2025
    மாநிலம்

    திருச்சி பஞ்சப்பூர் அருகே எனக்கு நிலம் இருந்தால் பழனிசாமியே எடுத்துக் கொள்ளலாம்: அமைச்சர் கே.என்.நேரு விளக்கம்

    August 27, 2025
    மாநிலம்

    கல்வி உரிமைச் சட்டத்தில் விண்ணப்பிக்கும் இணையதளத்தை முடக்கி வைத்திருப்பது ஏன்? – அரசுக்கு ஐகோர்ட் கேள்வி

    August 27, 2025
    மாநிலம்

    மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார் – முழு விவரம்

    August 27, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • 28, 29-ல் பத்திரப்பதிவுக்கு கூடுதல் டோக்கன்
    • டெய்லர் ஸ்விஃப்ட்டின் நிச்சயதார்த்தம்: எல்லோரும் பேசும் 38 4.38 கோடி மோதிரம்
    • ஸ்பேஸ்எக்ஸ் பத்தாவது ஸ்டார்ஷிப் ராக்கெட் டெஸ்ட் விமானத்தை வெற்றிகரமாக அறிமுகப்படுத்துகிறது, செவ்வாய் கிரக மிஷன் திட்டங்களை முன்னேற்றுகிறது | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • புச்சி பாபு கிரிக்கெட் தொடர்: டிஎன்சஏ அணிகள் தடுமாற்றம்!
    • தமிழகத்தில் 66,000 தொழில்முனைவோருக்கு ரூ.5,490 கோடி கடன்:  அமைச்சர் தகவல்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.