Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Thursday, September 4
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»தமிழகம் மற்ற மாநிலங்களை போல எதையும் உடனே நம்பிவிடாது: துணை முதல்வர் உதயநிதி கருத்து
    மாநிலம்

    தமிழகம் மற்ற மாநிலங்களை போல எதையும் உடனே நம்பிவிடாது: துணை முதல்வர் உதயநிதி கருத்து

    adminBy adminSeptember 4, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    தமிழகம் மற்ற மாநிலங்களை போல எதையும் உடனே நம்பிவிடாது: துணை முதல்வர் உதயநிதி கருத்து
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: மக்​களிடையே குழப்​பத்தை ஏற்​படுத்த ஒரு கும்​பல் பொய்யை மட்​டுமே பரப்பி வரு​வ​தாக​வும், ஆனால் தமிழகம் மற்ற மாநிலங்​களை போல எதை​யும் உடனே நம்​பாது என்​றும் துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின் தெரி​வித்​துள்​ளார்.

    ஊடக சவால்​களை எதிர்​கொள்​வது குறித்து நாட்டு நலப்​பணித்​திட்ட மாணவர்​களுக்கு மாநில அளவி​லான 3 நாள் பயிற்சி பட்டறை சென்னையில் நடை​பெற்​றது. இதன் நிறைவு நாள் நிகழ்ச்சி சென்னை கலை​வாணர் அரங்​கில் நேற்று நடந்​தது.

    அதில் கலந்து கொண்ட துணை முதல்​வர் உதயநிதி ஸ்டாலின் பேசி​ய​தாவது: சமூக ஊடகங்​கள் பெரு​கி​யுள்ள இந்த காலகட்டத்தில், மிகப்​பெரிய அளவில் பொய்​யான செய்​தி​களும், வதந்​தி​களும் பரப்​பப்​பட்டு வரு​கின்​றன. வதந்​தி​களைப் பொறுத்தவரை இரண்டு வகைகள் உண்​டு. ஒன்று எந்த உள்​நோக்​க​மும் இல்​லாமல் பரவு​கிற பொய் செய்​தி​கள். மற்​றொன்று திட்ட​மிட்​டு, உள்​நோக்​கத்​ தோடு பரப்​பப்​படு​கிற செய்​தி​கள்.

    இதில் இரண்​டாம் வகை மிக, மிக ஆபத்​தானது. போலி செய்​தி​கள் மட்​டுமல்ல, வெறுப்​பு பேச்சும் பெரிய அளவில் நம் நாட்டை பாதித்து வரு​கின்​றன.குறிப்​பாக, சிறு​பான்​மை​யின மக்​கள், ஒடுக்​கப்​பட்ட மக்​கள், வெறுப்​புப் பேச்​சால் மிக​வும் பாதிக்​கப்​படு​கிற சூழல் நிலவி வரு​கிறது.

    மக்​களிடையே குழப்​பத்தை ஏற்​படுத்​த​வும், அறிவை மழுங்க செய்​யும் நோக்​கத்​துட​னும் பொய்​யான கதைகளை அவிழ்த்து விட்டு​க் கொண்டே இருக்​கின்​றனர். 2 ஆண்​டு​களுக்கு முன்பு நிகழ்ச்சி ஒன்​றில் நான் பேசும்​போது, ‘பிறப்​பால் ஏற்​றத்​தாழ்வு சொல்கின்ற எந்த விஷ​யத்​தை​யும் அழிக்​கணும்’ என்று சொன்​னேன்.

    அதை திரித்​து, நான் சொல்​லாத விஷ​யங்​களை​யும் சொன்​ன​தாக நாடு முழு​வதும் பரப்​பி​விட்​டனர். அதற்​காக, என் தலையை சீவினால் ரூ.10 லட்​சம் தரு​கிறேன் என ஒரு சாமி​யார் சொன்​னார். மற்ற மாநிலங்​களைப்​போல் தமிழகம் எதை​யும் உடனே நம்பாது.

    இது பெரி​யா​ரால் பண்​படுத்​தப்​பட்ட மண். இதையொட்​டியே தமிழக அரசின் சார்​பில் பிரத்​யேக உண்மை சோதனை பிரிவு தொடங்​கப்​பட்​டது. இன்​றைக்கு இந்த பிரி​வின் வேகத்தை பார்த்து தவறான தகவல்​கள் பரப்​பு​கின்ற கும்​பல் கதறி கொண்டிருக்கின்​றனர். இதனால் சமீப கால​மாக தவறான தகவல்​கள் பரப்​பப்​படு​வது தமிழகத்​தில் மிக​வும் குறைந்​துள்​ளது. இவ்​வாறு அவர் பேசி​னார்.

    இந்​நிகழ்​வில், விளை​யாட்​டுத் துறை செயலர் அதுல்ய மிஸ்​ரா, சிறப்​புத்​திட்ட செய​லாக்​கத் துறை செயலர் பிரதீப் யாதவ், கல்லூரிக் கல்வி இயக்​குநரக ஆணை​யர் சுந்​தர​வல்​லி, விளை​யாட்டு மேம்​பாட்டு ஆணைய உறுப்​பினர் செயலர் ஜெ.மேக​நாத ரெட்​டி, தகவல் சரி​பார்​ப்​பகம் இலக்கு இயக்​குநர் ஐயன் கார்​த்​தி​கேயன், நாட்டு நலப்​பணித் திட்ட மாநில ஒருங்​கிணைப்​​பாளர் குணாநிதி உள்​ளிட்​டோர் பங்​கேற்​றனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    செட்டிநாடு விமான நிலையம் சாத்தியமில்லை என கைவிட்ட தமிழக அரசு – காரைக்குடி மக்கள் அதிருப்தி

    September 4, 2025
    மாநிலம்

    கட்டுமான தொழிலாளர் நலவாரியம் மூலம் 4 ஆண்டுகளில் 20 லட்சம் பேருக்கு ரூ.1,752 கோடி உதவித்தொகை

    September 4, 2025
    மாநிலம்

    மீலாது நபி தினத்தில் மதுபானக் கடைகளை மூட உத்தரவு

    September 4, 2025
    மாநிலம்

    அதிமுக பொதுச் செயலாளர் தேர்வை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கு: உயர் நீதிமன்றம் தள்ளுபடி

    September 4, 2025
    மாநிலம்

    குரோம்பேட்டை, பல்லாவரம் பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி வழக்கு: ஆட்சியர் பதிலளிக்க உத்தரவு

    September 4, 2025
    மாநிலம்

    அதிக தொழில் முதலீடுகளை ஈர்த்து நாட்டுக்கு நல்லதுதானே செய்துள்ளார் முதல்வர்: கமல்ஹாசன்

    September 4, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • செட்டிநாடு விமான நிலையம் சாத்தியமில்லை என கைவிட்ட தமிழக அரசு – காரைக்குடி மக்கள் அதிருப்தி
    • இந்திய சமையலறைகளுக்கு சிறந்த சமையல் எண்ணெய்: ஆலிவ், சூரியகாந்தி, கடுகு, தேங்காய் எண்ணெய் அல்லது நெய் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • திண்டிவனம் நகராட்சியில் பட்டியலின பணியாளரை திமுகவினர் காலில் விழவைத்த நிகழ்வு: அன்புமணி கண்டனம்
    • காரில் பிரதமர் மோடியுடன் பேசியது என்ன? – ரஷ்ய அதிபர் புதின் விளக்கம்
    • கட்டுமான தொழிலாளர் நலவாரியம் மூலம் 4 ஆண்டுகளில் 20 லட்சம் பேருக்கு ரூ.1,752 கோடி உதவித்தொகை

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.