Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Thursday, July 3
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»தமிழகத்தில் 12 இடங்களில் வெயில் சதம்: 2 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு
    மாநிலம்

    தமிழகத்தில் 12 இடங்களில் வெயில் சதம்: 2 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு

    adminBy adminMay 15, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    தமிழகத்தில் 12 இடங்களில் வெயில் சதம்: 2 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    தமிழகத்தில் சென்னை, மதுரை, திருச்சி உட்பட 12 இடங்களில் நேற்று வெப்பநிலை 100 டிகிரியை தாண்டியது. ஒருசில மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

    தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய தமிழக கடலோர பகுதிகள் மீதும், அந்தமான் கடல் பகுதிகளிலும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் நிலவுகின்றன. இதன் காரணமாக தமிழகத்தில் ஒருசில இடங்களில் இன்று (மே 15) முதல் 20-ம் தேதி வரை இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இன்று (மே 15) கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களிலும், நாளை (மே 16) தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். வெப்பநிலை 84 டிகிரி முதல் 99 டிகிரி ஃபாரன்ஹீட் வரை இருக்கக்கூடும். தமிழகத்தில் 16 முதல் 18-ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தைவிட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை உயரக்கூடும்.

    18-ம் தேதி வரை தென் தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா, அதை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 45-50 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் சூறாவளி காற்று வீசக்கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.

    நேற்று காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருச்சி மாவட்டம் மருங்காபுரி, நீலகிரி மாவட்டம் கோத்தகிரி, கேத்தி, தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம், ஈரோடு மாவட்டம் நம்பியூரில் 3 செ.மீ., கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், நீலகிரி மாவட்டம் பில்லிமலை எஸ்டேட், நடுவட்டம், தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி, அரூர், திருச்சி மாவட்டம் சிறுகுடி, கோவை மாவட்டம் சின்னக்கல்லார், திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம், ஈரோடு மாவட்டம் கொடிவேரியில் 2 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இதற்கிடையே, தமிழகத்தில் நேற்று அதிகபட்சமாக ஈரோட்டில் 106 டிகிரி, கரூர் பரமத்தி, திருச்சியில் 105 டிகிரி, வேலூர், திருத்தணி, பரங்கிப்பேட்டை, பாளையங்கோட்டை, மதுரை விமான நிலையத்தில் 104 டிகிரி, மதுரை மாநகரில் 103 டிகிரி, தஞ்சாவூரில் 102 டிகிரி, சேலத்தில் 101 டிகிரி, சென்னை மீனம்பாக்கத்தில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    காங். எம்.பி ராபர்ட் புரூஸுக்கு எதிராக தேர்தல் வழக்கு ஏன்? – ஐகோர்ட்டில் நயினார் நாகேந்திரன் விளக்கம்

    July 3, 2025
    மாநிலம்

    20 ஆண்டுகளுக்கு பிறகு தைலாபுரத்துக்கு வந்துள்ளேன்: வாழப்பாடி ராமமூர்த்தியின் மகன் நெகிழ்ச்சி

    July 3, 2025
    மாநிலம்

    வணிகவரித்துறை, பள்ளிக்கல்வித்துறை காலியிடங்களை பதவி உயர்வின் மூலம் நிரப்ப தயக்கம் ஏன்?- அன்புமணி

    July 3, 2025
    மாநிலம்

    விளை நிலங்களுக்கு மத்தியில் வீட்டுமனைப் பிரிவுகளை கட்டமைப்பது ஆபத்தானது: ராமதாஸ்

    July 3, 2025
    மாநிலம்

    மதுரை அமமுகவில் இருந்து அடுத்தடுத்து விலகி அதிமுகவில் இணையும் நிர்வாகிகள்!

    July 3, 2025
    மாநிலம்

    டிரான்ஸ்பார்மர்கள் முறைகேடு புகார்: செந்தில் பாலாஜி மீது வழக்கு பதிவது குறித்து ஒரு வாரத்தில் முடிவு

    July 3, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • பெருங்குடல் புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகள் ஒருவர் ஒருபோதும் புறக்கணிக்கக்கூடாது
    • அரசுப் பள்ளிகளில் பணிநிரவல் கலந்தாய்வு: ஆசிரியர்களுக்கு கட்டாய மாறுதல் வழங்க தடை!
    • பழநி முருகன் கோயிலில் குடும்பத்துடன் நயன்தாரா சுவாமி தரிசனம்
    • காங். எம்.பி ராபர்ட் புரூஸுக்கு எதிராக தேர்தல் வழக்கு ஏன்? – ஐகோர்ட்டில் நயினார் நாகேந்திரன் விளக்கம்
    • ஆப்டிகல் மாயை- இந்த படத்தில் நீங்கள் முதலில் பார்ப்பது உங்கள் மறைக்கப்பட்ட பலங்களை வெளிப்படுத்துகிறது | – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.