Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Thursday, August 7
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»தமிழகத்தில் விரைவில் எம்பிபிஎஸ் கலந்தாய்வு தொடக்கம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
    மாநிலம்

    தமிழகத்தில் விரைவில் எம்பிபிஎஸ் கலந்தாய்வு தொடக்கம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

    adminBy adminJune 16, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    தமிழகத்தில் விரைவில் எம்பிபிஎஸ் கலந்தாய்வு தொடக்கம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    கோவை: தமிழகத்தில் எம்பிபிஎஸ் மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு விரைவில் தொடங்கும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

    கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதல்நிலை செயற்கை கருத்தரிப்பு மையம், வளர்ச்சி குறைபாடுள்ள குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கும் ‘சோமாட்ரோகான்’ மருந்து வழங்குதல் உள்ளிட்ட 4 திட்டங்களின் தொடக்க விழா நேற்று நடைபெற்றது.

    விழாவில் பங்கேற்ற அமைச்சர் மா.சுப்பிரமணியன், செய்தியாளர்களிடம் கூறியதாவது: புற்றுநோயை துல்லியமாகக் கண்டறியும் ‘பெட் சிடி ஸ்கேன்’ தமிழகத்தில் 4 இடங்களில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கோவை மருத்துவமனையில் ரூ.16.30 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள முதல்நிலை செயற்கை கருத்தரிப்பு மையம் மூலம் 180 பெண்களுக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில் இருவர் கருவுற்றுள்ளனர்.

    இந்த அமைப்பு முழு பயன்பாட்டுக்கு வரும்போது நூற்றுக்கணக்கான பெண்கள் செயற்கை கருத்தரித்தல் மூலம் கருவுறும் நிலை ஏற்படும். தமிழகத்தில் வளர்ச்சி குறைபாடுள்ள குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க ‘சோமாட்ரோகான்’ மருந்து வழங்கும் திட்டம் ரூ.13.28 கோடியில் செயல்படுத்தப்பட உள்ளது. இதில் ஒரு குழந்தைக்கு 5 வாரத்துக்கு ரூ.60 ஆயிரம் மதிப்பில் மருந்து வழங்கப்படுகிறது.

    தமிழகத்தில் நீட் தேர்வு விலக்கு பெற வேண்டும் என்பதற்காக தொடர்ந்து சட்டப் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. நடப்பாண்டு தமிழகத்தைச் சேர்ந்த 1,35,715 பேர் தேர்வெழுதினர். இதில் 76,181 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தகுதி பெற்றவர்களுக்கு இடம் கிடைக்காவிட்டாலும், முன்னுரிமை பெறுவார்கள். நாடு முழுவதும் முதல் 100 இடங்களில் தேர்ச்சி பெற்றவர்களில் தமிழகத்தைச் சேர்ந்த 6 பேர் இடம்பெற்றுள்ளனர்.

    எம்பிபிஎஸ் மருத்துவப் படிப்புக்காக 32 ஆயிரம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. நீட் மதிப்பெண் அடிப்படையில், தேசிய தேர்வு மையம், தமிழ்நாடு மருத்துவ தேர்வுக் குழு வழிகாட்டுதலின் பேரில் விரைவில் மருத்துவக் கலந்தாய்வு தொடங்கப்படும்.

    நீட் தேர்வில் தேர்ச்சி பெறத் தவறிய மாணவர்களுக்கு மனநல ஆலோசனைகள் வழங்கும் திட்டம் சென்னையில் இன்று (ஜூன் 16) தொடங்கி வைக்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில், சுகாதார துறைச் செயலர் செந்தில்குமார், ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தொடர்ந்து, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் இஎஸ்ஐ மருத்துவமனைகளில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்துகொண்டு, மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    அதிமுக ஆட்சி அமைந்ததும் வீட்டுமனை உள்ள ஏழைகளுக்கு கான்கிரீட் வீடு: இபிஎஸ் உறுதி

    August 7, 2025
    மாநிலம்

    பொது இடங்களில் கொடிக் கம்பங்கள், கட்-அவுட்கள் அமைக்க தனி விதிமுறைகள்: நீதிமன்றம் யோசனை

    August 7, 2025
    மாநிலம்

    ரூ.28 கோடியில் கிளாம்பாக்கம் காவல் நிலையம், கூடுதல் பள்ளி கட்டிடம்: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

    August 7, 2025
    மாநிலம்

    திருப்பூரில் கொல்லப்பட்ட சிறப்பு எஸ்ஐ குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி நிவாரண நிதி: முதல்வர் உத்தரவு

    August 7, 2025
    மாநிலம்

    சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ரூ.338 கோடியில் மழைக்கால முன்னெச்சரிக்கை பணி: அதிகாரிகளுக்கு துணை முதல்வர் அறிவுறுத்தல்

    August 7, 2025
    மாநிலம்

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான 17 பேர் மீதான குண்டர் சட்டம் ரத்து: ஐகோர்ட் உத்தரவு

    August 7, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • அதிமுக ஆட்சி அமைந்ததும் வீட்டுமனை உள்ள ஏழைகளுக்கு கான்கிரீட் வீடு: இபிஎஸ் உறுதி
    • பொறியியல் மாணவர் சேர்க்கை; இன்று 3-வது சுற்று கலந்தாய்வு: தொழில்நிறுவன ஒதுக்கீடு அதிகரிப்பு
    • பொது இடங்களில் கொடிக் கம்பங்கள், கட்-அவுட்கள் அமைக்க தனி விதிமுறைகள்: நீதிமன்றம் யோசனை
    • ரூ.28 கோடியில் கிளாம்பாக்கம் காவல் நிலையம், கூடுதல் பள்ளி கட்டிடம்: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்
    • ஹார்வர்ட் கல்லீரல் மருத்துவர் ஒரு கொழுப்பு கல்லீரலைக் குணப்படுத்தும் அல்லது தீங்கு விளைவிக்கும் 10 உணவுகளை வரிசைப்படுத்துகிறார்: சிலர் உங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கக்கூடும்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.