Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Wednesday, December 3
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»தமிழகத்தில் வகுப்புவாதிகளால் பாகுபாடு ஏற்படுத்தப்படுகிறது: ஆளுநர் ஆர்.என்.ரவி வேதனை 
    மாநிலம்

    தமிழகத்தில் வகுப்புவாதிகளால் பாகுபாடு ஏற்படுத்தப்படுகிறது: ஆளுநர் ஆர்.என்.ரவி வேதனை 

    adminBy adminSeptember 13, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    தமிழகத்தில் வகுப்புவாதிகளால் பாகுபாடு ஏற்படுத்தப்படுகிறது: ஆளுநர் ஆர்.என்.ரவி வேதனை 
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    விழுப்புரம்: தமிழகத்தில் வகுப்புவாதிகளால் சாதி பாகுபாடு ஏற்படுத்தப்படுகிறது. பள்ளி வகுப்புகளில்கூட பாகுபாடு பார்க்கப்படுவதாக ஆளுநர் ஆர்.என்.ரவி வேதனை தெரிவித்தார். ஆரோவில் அறக்கட்டளை சார்பில், ‘இந்திய குடியரசின் சாதனை கள், சவால்கள் மற்றும் வருங்கால திட்டங்கள்’ எனும் தலைப்பில் ஒரு நாள் கருத்தரங்கம் புதுச்சேரி அடுத்த ஆரோவில்லில் நேற்று நடைபெற்றது. தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன், ஆரோவில் அறக்கட்டளையின் செயலர் ஜெயந்தி ரவி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    இந்நிகழ்வில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாவது: பாரதத்தின் நோக்கம் என்னவோ, அதுவே ஆரோவில் நோக்கமாகும். 75 வருட குடியரசு நாட்டில் நமக்கு கிடைத்தது என்ன? கிடைக்காதது என்ன? என்பதை யோசிக்க வேண்டும். 2014-ம் ஆண்டுக்கு முன்பும், பின்பும் என நமது நாட்டின் வளர்ச்சியைப் பிரிக்கலாம். நாட்டின் ஒவ்வொரு குடிமக்களுக்கும் சமூக, பொருளாதார நீதி, அரசியல் நீதி கிடைக்க வேண்டும்.

    நாள் தோறும் செய்தி தாள்கள் படிக்கும்போது, தமிழகத்தில் பட்டியலின மக்கள் படும் துயரங்களை பார்க்க முடிகிறது. அவர்களுக்கு தனி வழி, தனி பாதை என்பது நமது மாநிலத்தில் இருக்கிறது. வகுப்புவாதிகளால் இன்றைக்கும் பாகுபாடு ஏற்படுத்தப்படுகிறது. பள்ளிகளில் வகுப்பறைகளில் கூட சாதி பாகுபாடு இருக்கிறது.

    உலகளவில் பொருளாதாரத் தில் 6-வது வளர்ந்த நாடாக இருக்கிறோம். 2014-ம் ஆண்டுக்கு முன்பு 30 சதவீத மக்கள் நமது நாட்டில் ஏழை மக்களாக இருந்தனர். 75 ஆண்டுகளாக 3 தலைமுறைகளாக பெரிய பொருளாதார பிரச்சினைகளை சந்தித்து வந்தனர். மோடி பிரதமராகப் பொறுப்பேற்ற பிறகு ஏழைகளின் எண்ணிக்கை 26 சதவீதமாக குறைந்துள்ளது.

    முன்பு ஒரு இன மக்களுக்கும், மற்றொரு இன மக்களுக்கும் இடையே மோதல் நிலவியது. நாட்டின் 200 மாவட்டங்களில் மாவோயிஸ்ட் பிரச்சினை இருந்தது. காஷ்மீரில் இந்து மக்கள் துரத்தி அடிக்கப்பட்டனர். 2014-ம் ஆண்டுக்கு பிறகு நிலை மாறியது. வடகிழக்கு மாநிலங்களிலும் அமைதி ஏற்பட்டுள்ளது. இந்தியா மீது அணு ஆயுதத்தை பயன்படுத்துவோம் என்ற பாகிஸ்தான், தற்போது அடங்கி கிடக்கிறது. ஆனாலும், நம் நாட்டில் தேர்தலில்வாக்களிக்க பணம் கொடுக்கப்படுகிறது.

    ஆயிரம் ஆண்டுகளாக பிரித்தாளும் சூழ்ச்சி நடைபெறுகிறது. ஆயிரம் மதங்கள் இருந்தாலும், ஒரே தர்மம் மட்டுமே உள்ளது. அது சனாதன தர்மம். ‘பாரதத்தில் வாழும் அனைவருக்கும் ஆன்மிக ஆற்றல் உள்ளது’ என அரவிந்தர் கூறினார். ஆயிரம் ஆண்டுகள், அந்நியர்கள் நம்மை ஆட்சி செய்தாலும், பாரதத்தை அதன் தன்மைமாறாமல் சனாதனம்தான் காப்பாற்றியது.

    தமிழகம் ஆழ்வார்கள், நாயன்மார்களின் பூமி. பாரதத்தில் ஒரே குடும்பமாக நினைத்து வாழ வேண்டும். பிரதமர் மோடி, திருக்குறளை உலகம் முழுவதும் கொண்டு சேர்த்து வருகிறார். தமிழ் செம்மொழி ஆய்வு நிறுவனத்தை நிறுவினார். ராஜேந்திர சோழனை இந்திய அரசு பெருமைப்படுத்தியுள்ளது. இவ்வாறு ஆளுநர் பேசினார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    வானிலை முன்னறிவிப்பு: சென்னை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு

    December 3, 2025
    மாநிலம்

    மகிளா வங்கியை மூடிய பாஜக அரசு: ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

    December 3, 2025
    மாநிலம்

    “விருதுநகர் தொகுதியில் அதிமுகதான் போட்டி” – ராஜேந்திர பாலாஜி திட்டவட்டம்

    December 3, 2025
    மாநிலம்

    “பிஹார் தேர்தல் முடிவை விமர்சன கண்ணோட்டத்தோடு பார்க்க வேண்டும்” – கமல்ஹாசன் எம்.பி

    December 3, 2025
    மாநிலம்

    ‘புலி வருது, புலி வருது’ என்பது போல – ஆந்திராவுக்கு மடைமாறிய முதலீடு: நயினார் நாகேந்திரன் கிண்டல்!

    December 3, 2025
    மாநிலம்

    மேயர் இல்லாததால் மதுரை மாநகராட்சியில் திமுக – மார்க்சிஸ்ட் இடையே அதிகார மோதல்!

    December 3, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ‘ஸ்லீப்பி ஜோ’ முதல் ‘ஸ்லீப்பி டிரம்ப்’ வரை: பல ஆண்டுகளாக பிடனை கேலி செய்த டொனால்ட் டிரம்ப் ஒரு கூட்டத்தில் எப்படி மயங்கினார் | உலகச் செய்திகள் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • சைவ உணவு உண்பவர்கள் வைட்டமின் பி12 குறைபாட்டிற்கு அதிக வாய்ப்புள்ளது; இதோ ஏன் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • மேகன் மார்க்கலின் உடற்பயிற்சியின் உள்ளே: யோகா, வலிமை பயிற்சி மற்றும் மன ஆரோக்கியம் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • பெண்களுக்கு அமைதியான உடல்நல அபாயங்களைப் பிடிக்கும் 5 வருடாந்திர சோதனைகளை நிபுணர்கள் பட்டியலிட்டுள்ளனர் – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • இந்திய வம்சாவளி நகைச்சுவை நடிகர் ஜர்னா கார்க் கூறுகையில், இந்தியர்கள் டிரம்பை நேசிக்கிறார்கள், ஏனெனில் ‘அனைத்து அரசியல்வாதிகளும் வீட்டிற்கு திரும்பி வக்கிரமாக இருக்கிறார்கள்’ – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • December 2025
    • November 2025
    • October 2025
    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.