Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Sunday, January 11
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் இன்று நிறைவு: விசைப்படகு மீனவர்கள் நள்ளிரவில் கடலுக்கு புறப்படுகின்றனர்
    மாநிலம்

    தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் இன்று நிறைவு: விசைப்படகு மீனவர்கள் நள்ளிரவில் கடலுக்கு புறப்படுகின்றனர்

    adminBy adminJune 14, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் இன்று நிறைவு: விசைப்படகு மீனவர்கள் நள்ளிரவில் கடலுக்கு புறப்படுகின்றனர்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: தமிழக கடலோரப் பகுதிகளில் 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் இன்றுடன் நிறைவடைகிறது. இதனைத் தொடர்ந்து விசைப்படகு மீனவர்கள் இன்று நள்ளிரவு கடலுக்கு புறப்பட்டுச் செல்கின்றனர்.

    கடலில் மீன் வளத்தைப் பெருக்கும் விதமாக, அவற்றின் இனப்பெருக்க காலத்தை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் கோடை காலத்தில் வங்கக் கடலில், நாட்டின் கிழக்கு கடற்கரையில் அமைந்துள்ள தமிழக கடலோரப் பகுதிகளில் 61 நாட்கள் விசைப்படகு மீனவர்கள், மீன் பிடிக்க கடலுக்குச் செல்ல மத்திய அரசு தடை விதித்துள்ளது.

    அந்த வகையில் மேற்கு கடற்கரையில், அரபிக் கடல் பகுதியில் கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த ஜூன் 1-ம் தேதி முதல் 61 நாட்கள் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

    அதேபோல், தமிழக கடலோரப் பகுதிகளில் கடந்த ஏப்ரல் 15-ம் தேதி முதல் ஜூன் 14-ம் தேதி வரை மீன்பிடி தடைக்காலமாக அறிவிக்கப்பட்டது. இதனால், விசைப்படகு மீனவர்கள் ஏப்.15-ம் தேதி முதல் கடலுக்குச் செல்லவில்லை.

    மீன்பிடி தடை காலத்தில், கேரளா மற்றும் மகாராஷ்டிர மாநில கடலோரப் பகுதிகளில் பிடிக்கப்படும் மீன்கள், சென்னைக்கு கொண்டுவரப்பட்டன. மீன்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு அவற்றின் விலையும் கடுமையாக உயர்ந்தது. இந்த 2 மாத காலத்தில் மீனவர்கள் தங்கள் படகுகள், வலைகளைச் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

    இந்நிலையில், மீன்பிடி தடைக்காலம் இன்று (ஜூன் 14) இரவுடன் நிறைவடையும் நிலையில், நேற்று மாலையிலிருந்தே சென்னை காசிமேடு மீன்பிடித் துறைமுகம், திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுச்சேரி, கரைக்கால், புதுக்கோட்டை, தூத்துக்குடி, திருநெல்வேலி, ராமநாதபுரம், கன்னியாகுமரி ஆகிய கடலோர மாவட்டங்களில் இருந்து 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 1 லட்சத்துக்கும் அதிகமான மீனவர்கள் கடலுக்குச் செல்ல தயாராகி வருகின்றனர்.

    இன்று நள்ளிரவு இவர்கள் கடலுக்கு செல்ல உள்ளனர். இதனால் வரும் நாட்களில் மீன்கள் விலை குறைவதுடன், பல்வேறு ரக மீன்களும் கிடைக்கும் என மீன் பிரியர்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

    இதற்கிடையே, மீனவர்கள் கடலுக்கு செல்ல இருப்பதையொட்டி, ‘‘18 வயது நிறைவடைந்தவர்களை மட்டுமே மீனவர்கள் மீன்பிடிக்க அழைத்துச் செல்ல வேண்டும். இந்திய கடல் எல்லையைத் தாண்டி சென்று மீன்பிடிக்கக் கூடாது. மீனவர் அடையாள அட்டை, படகு பதிவு உள்ளிட்ட ஆவணங்களின் நகல்களை உடன் வைத்திருக்க வேண்டும். உயிர் காப்பு உபகரணங்கள் மற்றும் தொலை தொடர்பு சாதனங்களை அவசியம் எடுத்துச் செல்ல வேண்டும்” என்று மீன்வளத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    வானிலை முன்னறிவிப்பு: சென்னை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு

    December 3, 2025
    மாநிலம்

    மகிளா வங்கியை மூடிய பாஜக அரசு: ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

    December 3, 2025
    மாநிலம்

    “விருதுநகர் தொகுதியில் அதிமுகதான் போட்டி” – ராஜேந்திர பாலாஜி திட்டவட்டம்

    December 3, 2025
    மாநிலம்

    “பிஹார் தேர்தல் முடிவை விமர்சன கண்ணோட்டத்தோடு பார்க்க வேண்டும்” – கமல்ஹாசன் எம்.பி

    December 3, 2025
    மாநிலம்

    ‘புலி வருது, புலி வருது’ என்பது போல – ஆந்திராவுக்கு மடைமாறிய முதலீடு: நயினார் நாகேந்திரன் கிண்டல்!

    December 3, 2025
    மாநிலம்

    மேயர் இல்லாததால் மதுரை மாநகராட்சியில் திமுக – மார்க்சிஸ்ட் இடையே அதிகார மோதல்!

    December 3, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ஜோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்புவின் $1.7 பில்லியன் விவாகரத்துப் போர்: மனைவியின் அதிர்ச்சியூட்டும் துரோகக் கூற்றுகள், அவர்களின் உயர் நீதிமன்றப் போராட்டம் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • உங்கள் துணையுடன் கிசுகிசுக்க விரும்புகிறீர்களா? இது ஏன் உங்கள் உறவுக்கு நல்லது என்பதை இங்கே காணலாம் – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • கேரளாவின் ஆலப்புழாவில் 92 வயதான ஒருவர், இலவச மருத்துவ சரணாலயத்தை உருவாக்க உடல் மற்றும் உணர்ச்சி குறைபாடுகளுடன் எவ்வாறு போராடினார் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ஒரு உள்ளூர் இந்திய கண்காட்சியில் பாதுகாப்புக் கவசமின்றி 80 ரூபாய்க்கு ஊஞ்சலில் சவாரி செய்த இங்கிலாந்து மனிதர், தனது பெருங்களிப்புடைய, ஆனால் திகிலூட்டும் அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார், ‘அவ்வளவு மன அழுத்தத்தில் நான் இருந்ததில்லை….’ – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • துணியை மென்மையாக்கும் சோப்பு ஏன் வாங்கக்கூடாது – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • January 2026
    • December 2025
    • November 2025
    • October 2025
    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2026 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.