Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, August 19
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»தமிழகத்தில் பழனிசாமி தலைமையில் கூட்டணி ஆட்சி: நயினார் நாகேந்திரன் உறுதி
    மாநிலம்

    தமிழகத்தில் பழனிசாமி தலைமையில் கூட்டணி ஆட்சி: நயினார் நாகேந்திரன் உறுதி

    adminBy adminJune 12, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    தமிழகத்தில் பழனிசாமி தலைமையில் கூட்டணி ஆட்சி: நயினார் நாகேந்திரன் உறுதி
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    திருநெல்வேலி: தமிழகத்தில் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிபெற்று, இபிஎஸ் தலைமையில் கூட்டணி ஆட்சி அமைக்கப்படும் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

    திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது : எங்கள் கூட்டணியில் மேலும் பல கட்சிகள் இணைய வாய்ப்புள்ளது. அதற்கான பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. தேர்தலுக்கு இன்னும் நாட்கள் இருப்பதால் அதுகுறித்து பின்னர் தெரியவரும்.

    தமிழகத்தில் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றிபெற்று, இபிஎஸ் தலைமையில் கூட்டணி கட்சி ஆட்சி அமையும். மக்கள் வாக்களித்த பின்னர்தான் எது வலிமையான கூட்டணி என்பது தெரியவரும். தாங்கள்தான் வலிமையான கட்சி என்று கூறிக் கொள்ளும் திமுக, தேர்தலில் தனித்து நிற்கத் தயாரா? திமுக கூட்டணிக்குள் ஏற்படும் சலசலப்பு போகப்போக வெளியாகும்.

    மதுரையில் நடைபெற உள்ள முருக பக்தர்கள் மாநாட்டுக்கு 4 லட்சத்துக்கும் அதிகமானோர் வருவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். இந்த மாநாட்டுக்கு ஆளுங்கட்சித் தரப்பிலிருந்து நெருக்கடி கொடுக்கப்படுகிறது. இந்த மாநாடு பாஜகவுக்கு ஆதரவாக இருக்கும் என்று அவர்கள் கருதுகிறார்கள். இந்த மாநாட்டில் முருக பக்தர்கள் அனைவரும் கலந்து கொள்ளலாம். திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளில் உள்ள முருக பக்தர்களும் கலந்து கொள்வார்கள்.

    அனைவரும் இந்துக்கள்… நாட்டில் மதவாதம் இருக்கக் கூடாது. மதத்தை நம்பி யாரும் ஆட்சிக்கு வர முடியாது. இந்தியாவில் பிறந்த அனைவரும் இந்துக்கள்தான். இந்து என்பது ஒரு பண்பாடு, ஒரு வழிமுறை. இந்து என்பது மதம் இல்லை. ஒரு மதத்துக்கு ஆதரவு தெரிவித்து ஆட்சிக்கு வருபவர்கள் யார் என்பது மக்களுக்குத் தெரியும்.

    நாட்டின் பெருமையை உலக அளவில் உயர்த்தி, பாதுகாப்பை உறுதிப்படுத்தியுள்ளார் பிரதமர் மோடி. காங்கிரஸ் ஆட்சியில் பொருளாதாரத்தில் 14-வது இடத்தில் இருந்த நாட்டை 4-வது இடத்துக்கு பிரதமர் கொண்டு வந்துள்ளார். கடந்த 11 ஆண்டுகளில் தமிழகத்துக்கு மட்டும் ரூ 10 லட்சம் கோடி நிதி கொடுக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் பேரிடர் நிதி கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு பைசா பாக்கியில்லாமல் ஜிஎஸ்டி தொகையை மத்திய அரசு தமிழகத்துக்கு வழங்குகிறது. ஆனால், இங்குள்ளவர்கள் உண்மையை மறைத்து பேசுகிறார்கள்.

    தமிழ் மொழிக்கு மோடி அரசு மிகுந்த முக்கியத்துவம் அளித்து வருகிறது. திருக்குறளை 63 மொழிகளில் மொழிபெயர்த்து, உலகம் முழுமைக்கு கொண்டு சேர்த்துள்ளார் காசியிலும் குஜராத்திலும் தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறினார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    கொருக்குப்பேட்டை போஜராஜன் நகரில் ரூ.30 கோடியில் கட்டி முடிக்கப்பட்ட சுரங்கப்பாலம்: உதயநிதி திறந்து வைத்தார்

    August 19, 2025
    மாநிலம்

    தமிழகத்தில் போதைப் பொருளால் இளைஞர்கள் சீரழிகின்றனர்: பழனிசாமி குற்றச்சாட்டு

    August 19, 2025
    மாநிலம்

    ராமரை இழிவாகப் பேசிய வைரமுத்துவை நடமாட விடக்கூடாது: மன்னார்குடி ஜீயர் எச்சரிக்கை

    August 19, 2025
    மாநிலம்

    கா​விரி​யில் வெள்​ளப்பெருக்கு அதிகரிப்பு: கரையோர மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

    August 19, 2025
    மாநிலம்

    மனமகிழ் மன்றங்களில் உறுப்பினர் அல்லாதவர்களுக்கு மது விற்றால் உரிமம் ரத்து: உயர் நீதிமன்றம் உத்தரவு

    August 19, 2025
    மாநிலம்

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சி யாருக்கும், எக்காலத்திலும் அடிபணியாது: சேலம் மாநாட்டில் முத்தரசன் திட்டவட்டம்

    August 19, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • கிருஷ்ண ஜெயந்தி விழாவில் மின்சாரம் பாய்ந்து 6 பேர் உயிரிழப்பு
    • துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு வெள்ளி!
    • கொருக்குப்பேட்டை போஜராஜன் நகரில் ரூ.30 கோடியில் கட்டி முடிக்கப்பட்ட சுரங்கப்பாலம்: உதயநிதி திறந்து வைத்தார்
    • பிரதமரின் ஜிஎஸ்டி குறைப்பு அறிவிப்பால் சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் உயர்வு
    • பீதி தாக்குதல்கள்: செய்ய வேண்டிய 4 விஷயங்கள், ஒரு சிறந்த மருத்துவரின் கூற்றுப்படி | – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.