Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Saturday, September 6
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»தமிழகத்தில் நல்லிணக்கம், சகோதரத்துவம் போற்றுவோம்: முதல்வர், தலைவர்கள் மீலாது நபி வாழ்த்து
    மாநிலம்

    தமிழகத்தில் நல்லிணக்கம், சகோதரத்துவம் போற்றுவோம்: முதல்வர், தலைவர்கள் மீலாது நபி வாழ்த்து

    adminBy adminSeptember 6, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    தமிழகத்தில் நல்லிணக்கம், சகோதரத்துவம் போற்றுவோம்: முதல்வர், தலைவர்கள் மீலாது நபி வாழ்த்து
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: நபிகள் நாயகம் பிறந்தநாளான மீலாது நபி பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, பல்வேறு தலைவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அதன் விவரம்:

    முதல்வர் மு.க.ஸ்டாலின்: உண்மை, இரக்கம், ஈகை, அன்பு, கல்வியறிவு, புறம் பேசாமை, பெண்களை மரியாதையோடு நடத்துதல் என உலகத்துக்கு என்றென்றும் தேவையான நற்கருத்துகளை போதித்தவர் நபி. அவரது போதனைகளைப் பின்பற்றி வாழும் இஸ்லாமியர்களின் உரிமைகளுக்கும், நலனுக்கும் திமுக அரசு ஒவ்வொரு முறை ஆட்சியமைக்கும்போதும் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.

    இஸ்லாமியர்களுக்கும், இலங்கைத் தமிழருக்கும் எதிரான குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்து ஆட்சிக்கு வந்ததுமே சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியதோடு, தமிழகத்தில் சிஏஏ நடைமுறைப்படுத்தப்படாது என்றும் அறிவித்தோம். இப்படி, உங்களில் ஒருவராகவே இருந்து செயல்படும் அரசின் சார்பில் மீலாதுன் நபி வாழ்த்துகளை அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி: நபிகள் நாயகத்தின் பிறந்தநாளில் அமைதி தழைக்கவும், சமாதானம் ஓங்கவும், சகோதரத்துவம் வளரவும் உழைப்போம்.

    தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை: முஸ்லிம் சகோதரர்கள் அனைவரும் நபிகள் நாயகத்தின் கொள்கைகளை பின்பற்றி மகிழ்ச்சியும், நலமும் பெற்று வாழ வாழ்த்துகிறேன்.

    முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்: ‘பூமியில் உள்ளவர்க ளிடம் கருணையுடன் நடந்து கொள்ளுங்கள், வானத்தில் உள்ளவர் உங்கள் மீது கருணை காட்டுவார்’ என்று போதித்த நபிகள் நாயகத்தின் பிறந்தநாளில், கோபத்தை அடக்கி எல்லோரிடமும் கருணை காட்ட உறுதியேற்போம்.

    மதிமுக பொதுச் செயலாளர் வைகோ: நாம் அனைவரும் சகோதரர்கள், ஏற்றத்தாழ்வு அற்றவர்கள் என்று பெருவெளி யில் முழங்கிய நபிகள் நாயகத்தின் பிறந்தநாளில், தமிழகத்தில் மதநல்லிணக்கத்தையும், சகோதரத்துவத்தையும் பாதுகாக்க உறுதி கொள்வோம். இவ்வாறு அவர்கள் தெரிவித் துள்ளனர்.

    மேலும், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், பாமக தலைவர் அன்புமணி, ஐஜேகே நிறுவனர் பாரிவேந்தர், வி.கே.சசிகலா, ஐஜேகே தலைவர் ரவிபச்சமுத்து, முன்னாள் எம்.பி திருநாவுக்கரசர் உள்ளிட்டோரும் வாழ்த்து தெரி வித்துள்ளனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனம்: 9 பேர் கொண்ட பட்டியலை திருப்பி அனுப்பிய மத்திய அரசு

    September 6, 2025
    மாநிலம்

    ராமதாஸின் எந்த கேள்விகளுக்கும் பதில் அளிக்கப் போவதில்லை: அன்புமணி திட்டவட்டம்

    September 6, 2025
    மாநிலம்

    சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட 50 தொகுதிகளை கேட்கும் பாஜக: 40-ஐ கொடுத்து 20-ஐ தேர்ந்தெடுக்க சொல்லும் அதிமுக

    September 6, 2025
    மாநிலம்

    சொத்து குவிப்பு வழக்கு: மறுவிசாரணைக்கு அமைச்சர் துரைமுருகன் செப்.15-க்குள் ஆஜராகாவிட்டால் பிடிவாரன்ட்

    September 6, 2025
    மாநிலம்

    396 பேருக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது: ஆசிரியர் தினத்தையொட்டி உதயநிதி வழங்கினார்

    September 6, 2025
    மாநிலம்

    பொதுச் செயலாளராக தேர்வு: இபிஎஸ்-க்கு எதிரான வழக்கை நிராகரித்து நீதிமன்றம் உத்தரவு

    September 6, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • பிரபல பாடலாசிரியர் பூவை செங்குட்டுவன் காலமானார்
    • உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனம்: 9 பேர் கொண்ட பட்டியலை திருப்பி அனுப்பிய மத்திய அரசு
    • யுஎஸ் ஓபன் டென்னிஸ் தொடர்: இறுதிப் போட்டியில் சபலென்கா – அனிசிமோவா பலப்பரீட்சை
    • ராமதாஸின் எந்த கேள்விகளுக்கும் பதில் அளிக்கப் போவதில்லை: அன்புமணி திட்டவட்டம்
    • ஒரேநாளில் பத்திரப் பதிவு மூலம் ரூ.274 கோடி வருவாய்: அமைச்சர் மூர்த்தி தகவல்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.