Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Wednesday, September 24
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»தமிழகத்தில் தே.ஜ. கூட்டணியின் தலைவரும், முதல்வர் வேட்பாளரும் பழனிசாமி தான்: நயினார் நாகேந்திரன் 
    மாநிலம்

    தமிழகத்தில் தே.ஜ. கூட்டணியின் தலைவரும், முதல்வர் வேட்பாளரும் பழனிசாமி தான்: நயினார் நாகேந்திரன் 

    adminBy adminAugust 24, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    தமிழகத்தில் தே.ஜ. கூட்டணியின் தலைவரும், முதல்வர் வேட்பாளரும் பழனிசாமி தான்: நயினார் நாகேந்திரன் 
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    திருச்சி: “தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பெரிய கட்சி அதிமுக. தமிழகத்தில் எங்கள் கூட்டணியின் தலைவர் அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி தான். முதல்வர் வேட்பாளரும் அவர் தான்.” என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

    கள்ளக்குறிச்சியில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ரயில் மூலம் நெல்லையிலிருந்து திருச்சி வந்தார்.

    திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது; பாஜக இந்தியா முழுவதும் 1200 எம்எல்ஏக்களையும், 330 நாடாளுமன்ற உறுப்பினர்களையும் கொண்ட கட்சி. பாஜக – அதிமுக பொருந்தா கூட்டணி என கூறுபவர்களுக்கு எத்தனை நாடாளுமன்ற உறுப்பினர்கள், எத்தனை எம்.எல்.ஏக்கள், எத்தனை கவுன்சிலர்கள் இருக்கிறார்கள்?. ஒவ்வொருத்தர் குறித்தும் குறை கூற காரண காரியங்கள் வேண்டும்.

    திமுக அரசு மக்கள் விரும்பாத அரசாக உள்ளது. சட்டம் ஒழுங்கு பிரச்சினை, போதைப் பழக்கம் அதிகரித்து இருப்பது போன்ற பல்வேறு பிரச்சினைகள் தமிழ்நாட்டில் நிலவுகிறது. தமிழ்நாட்டில் பாலியல் வன்கொடுமை அதிகமாக நடந்துள்ளது. எப்போது தேர்தல் வந்தாலும் வீட்டுக்கு அனுப்பக்கூடிய அரசாங்கமாக திமுக அரசாங்கம் உள்ளது.

    முன்னாள் குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தன்கர் வீட்டுg காவலில் வைக்கப்பட்டுள்ளார் என கூறுவது வதந்தி. தமிழ்நாட்டில் தான் இது போன்ற வதந்திகள் பரப்பப்படுகிறது. ஜெகதீப் தன்கர் சுதந்திரமாகத்தான் இருக்கிறார்.

    தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பெரிய கட்சி அதிமுக. தமிழகத்தில் எங்கள் கூட்டணியின் தலைவர் அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி தான். முதல்வர் வேட்பாளரும் அவர் தான்.

    தமிழ்நாட்டுக்கு பிரதமர் இனி அடிக்கடி வருவார்.

    தமிழகத்தில் திமுகவின் பி- டீமாக பலர் இருக்கிறார்கள். திமுக ஆட்சி இருக்கக் கூடாது என்பது மட்டும் நோக்கமாக இருக்க வேண்டும். கூட்டணி ஆட்சியா, தனித்து ஆட்சியா என்பதில் ஊடகத்தினர் குழப்பிக்கொள்ள வேண்டாம்.

    தேசிய ஜனநாயக கூட்டணியில் இன்னும் சில கட்சிகள் இணைவார்கள். பலமான கூட்டணி அமைத்து தான் வெற்றி பெற வேண்டும் என அவசியம் இல்லை. நிச்சயமாக தமிழ்நாட்டில் மிகப்பெரிய மாற்றம் வரும். திமுக அரசு வீட்டுக்கு அனுப்பப்படும். இவ்வாறு கூறினார்.

    ஓ.பன்னீர் செல்வம் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைவாரா எனும் கேள்விக்கு, “திமுக அரசு வீழ்த்தப்பட வேண்டும் என்கிற நோக்கத்தோடு எம்ஜிஆர் கொள்கையை பின்பற்றுபவர்கள் அனைவரும் ஒன்று சேர வேண்டும்.” இவ்வாறு தெரிவித்தார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    இபிஎப் நிறுவனத்தில் நடப்பாண்டு ஜூலையில் தமிழகம் உட்பட 6 மாநிலங்களில் அதிக உறுப்பினர் சேர்க்கை

    September 24, 2025
    மாநிலம்

    நலத்திட்ட உதவிகளை விரைந்து வழங்க அரசு அலுவலர்களுக்கு உதயநிதி அறிவுறுத்தல்

    September 24, 2025
    மாநிலம்

    கோவில்பட்டி தொகுதியில் திமுக வெற்றி பெறாது: கடம்பூர் ராஜு ‘லாஜிக்’

    September 24, 2025
    மாநிலம்

    மக்களின் வரிப் பணத்தில் முன்னாள் தலைவருக்கு சிலை வைத்து ஏன் துதிபாட வேண்டும்? – உச்ச நீதிமன்றம்

    September 24, 2025
    மாநிலம்

    கோபியில் பழனிசாமிக்கு அதிமுகவினர் வரவேற்பு: செங்கோட்டையன் புறக்கணிப்பு

    September 23, 2025
    மாநிலம்

    ரூ.1.50 கோடி அபராதம்: வருமானவரித் துறை உத்தரவை ரத்து செய்யக் கோரி விஜய் வழக்கு!

    September 23, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா கொடியேற்றம்: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காப்பு கட்டி வேடமணிந்தனர்
    • இபிஎப் நிறுவனத்தில் நடப்பாண்டு ஜூலையில் தமிழகம் உட்பட 6 மாநிலங்களில் அதிக உறுப்பினர் சேர்க்கை
    • வீட்டிலுள்ள கால் சோளங்களை பாதுகாப்பாக அகற்றுவதற்கான இயற்கை வழிகள் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • நலத்திட்ட உதவிகளை விரைந்து வழங்க அரசு அலுவலர்களுக்கு உதயநிதி அறிவுறுத்தல்
    • ஆப்பிள்களை சேமித்து, வாரங்களுக்கு மிருதுவாக வைத்திருக்க இயற்கை வழிகள் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.