Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, August 18
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»“தமிழகத்தில் திருப்புமுனையாகவே முருக பக்தர்கள் மாநாடு அமையும்” – காடேஸ்வரா சுப்பிரமணியம்
    மாநிலம்

    “தமிழகத்தில் திருப்புமுனையாகவே முருக பக்தர்கள் மாநாடு அமையும்” – காடேஸ்வரா சுப்பிரமணியம்

    adminBy adminJune 9, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    “தமிழகத்தில் திருப்புமுனையாகவே முருக பக்தர்கள் மாநாடு அமையும்” – காடேஸ்வரா சுப்பிரமணியம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    பழநி: “2026 தேர்தலில் இந்துக்களுக்கு விரோதமாக பேசுகிறவர்கள் காணாமல் போவார்கள்,” என்று பழநி முருகன் கோயிலில் வேல் வழிபாடு செய்த இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

    இந்து முன்னணி சார்பில் மதுரை சுற்றுச்சாலை அம்மா திடலில் ஜூன் 22-ல் முருக பக்தர்களின் ஆன்மிக மாநாடு நடைபெற இருக்கிறது. இந்த மாநாட்டு வளாகத்தில் அறுபடை வீடுகளின் மாதிரி கோயில்கள் அமைக்கப்படுகிறது. அதில், அறுபடை வீடுகளில் இருந்தும் வேல் கொண்டு சென்று பிரதிஷ்டை செய்ய திட்டமிட்டுள்ளனர். அதன்படி, பழநி முருகன் கோயிலில் வேல் வழிபாடு செய்து மதுரையில் நடக்க உள்ள மாநாட்டுக்கு வேலை கொண்டு செல்வதற்காக இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் திங்கட்கிழமை (ஜூன் 9) மாலை பழநிக்கு வந்தார்.

    பழநி அடிவாரத்தில் உள்ள திருஆவினன்குடி கோயில், புலிப்பாணி ஆசிரமத்தில் வழிபட்ட காடேஸ்வரா சுப்பிரமணியம் பின்னர் கூறியது: “மதுரையில் நடக்க உள்ள முருக பக்தர்களின் ஆன்மிக மாநாட்டுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் அழைப்பதற்காக, அவரை சந்திக்க கடிதம் அனுப்பினோம். ஆனால், இதுவரை எந்த பதிலும் வரவில்லை. அமைச்சர் சேகர்பாபு சங்கிகள் நடத்தும் மாநாடு என்பதால் யாரும் வரமாட்டார்கள் என்று பயத்தில் உளறிக் கொண்டிருக்கிறார்.

    பழநியில் நடத்திய முருக பக்தர்கள் மாநாடு, திமுகவின் கட்சி மாநாடு போல இருந்தது. அந்த மாநாட்டுக்கு தமிழக அரசும், காவல் துறையும் அனுமதி கொடுத்தது. கடவுள் இல்லை என்று சொல்லும் கட்சி மற்றும் ஆட்சியில் இருந்து இதுவரை யாரும் நடத்திராத வகையில் ஜூலை 7-ம் தேதி முதல் முருக பக்தர்கள் மாநாடு நடத்துவோம் என அமைச்சர் சேகர்பாபு அறிக்கை கொடுத்துள்ளார்.

    இந்துக்கள் மத்தியில் பெரிய எழுச்சி ஆரம்பித்துள்ளது. குறிப்பாக, சென்னிமலையில் தொடங்கி, திருப்பரங்குன்றத்தில் மையம் கொண்டு தற்போது மதுரையில் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களுக்கு முடிவுரை எழுதப்படுகின்றது என மக்கள் மத்தியில் பேசப்படுகிறது. கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் முருக பக்தர்கள் மாநாட்டை எதிர்ப்பதால் பலம் கூடிக் கொண்டிருக்கிறது. அறுபடை வீடுகளில் இருந்து வேல் கொண்டு சென்று, மாநாட்டில் மக்கள் வழிபாடு செய்யும் வகையில் பிரதிஷ்டை செய்ய இருக்கிறோம்.

    இந்த மாநாடு தமிழகத்தில் பெரிய திருப்புமுனையாக அமையும். சூரபத்மனை வதம் செய்ய பார்வதி முருகனுக்கு வேல் கொடுத்தது போல் நாட்டில் அக்கிரமம், அநியாயத்தை அழிப்பதற்கு இந்த வேல் பயன்படும். தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு மிக மோசமாக உள்ளது. குறிப்பாக, உளவுத் துறை சரியில்லை. போதைப் பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளது. இந்துக்களை ஒன்றுப்படுத்துவதற்காக இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 2026 தேர்தலில் இந்துக்களுக்கு விரோதமாக பேசுகிறவர்கள் காணாமல் போவார்கள்,” என்று அவர் கூறினார். தொடர்ந்து, பழநி மலைக்கோயிலுக்கு சென்ற அவர், அங்கு வேல் வழிபாடு செய்து சுவாமி தரிசனம் செய்தார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    சென்னை அம்பத்தூரில் திடீரென ஏற்பட்ட ராட்சத பள்ளம்: வாகனங்கள் விழுந்தன

    August 18, 2025
    மாநிலம்

    சி.பி.ராதாகிருஷ்ணனை குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக பாஜக அறிவிப்பு – குடும்பத்தினர் நெகிழ்ச்சி 

    August 18, 2025
    மாநிலம்

    சுயசான்று அடிப்படையில் கட்டிட அனுமதி விண்ணப்ப நடைமுறை, தகுதி விதிகளில் திருத்தம்

    August 18, 2025
    மாநிலம்

    ராமேசுவரம் மீனவர்கள் 7-வது நாளாக வேலைநிறுத்தப் போராட்டம்: ரூ.15 கோடி வருவாய் இழப்பு

    August 17, 2025
    மாநிலம்

    மதுரை மாநாடு வெற்றி பெற கோயிலில் கிடா வெட்டி விருந்தளித்த தவெகவினர்: பிரம்மாண்ட ஏற்பாடுகள் தீவிரம்

    August 17, 2025
    மாநிலம்

    தமிழகத்தில் 23-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு

    August 17, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • சென்னை அம்பத்தூரில் திடீரென ஏற்பட்ட ராட்சத பள்ளம்: வாகனங்கள் விழுந்தன
    • ஆப்டிகல் மாயை: 23 களின் கடல் ஒரு ’22’ ஐ மறைக்கிறது, அதை எவ்வளவு வேகமாக கண்டுபிடிக்க முடியும்? | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • சி.பி.ராதாகிருஷ்ணனை குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக பாஜக அறிவிப்பு – குடும்பத்தினர் நெகிழ்ச்சி 
    • அல்கலைன் நீர் புற்றுநோயைத் தடுக்க அல்லது குணப்படுத்த முடியுமா:? சிறந்த புற்றுநோயியல் நிபுணர் விளக்குகிறார் – இந்தியாவின் நேரங்கள்
    • குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் பாஜக கூட்டணி வேட்பாளராக அறிவிப்பு: 21-ம் தேதி வேட்புமனு தாக்கல் 

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.