Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Thursday, September 25
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»தமிழகத்தில் திமுகவை வேரோடு பிடுங்கி எறிய வேண்டும்: பாஜக மாநாட்டில் அமித் ஷா பேசியது என்ன?
    மாநிலம்

    தமிழகத்தில் திமுகவை வேரோடு பிடுங்கி எறிய வேண்டும்: பாஜக மாநாட்டில் அமித் ஷா பேசியது என்ன?

    adminBy adminAugust 23, 2025No Comments3 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    தமிழகத்தில் திமுகவை வேரோடு பிடுங்கி எறிய வேண்டும்: பாஜக மாநாட்டில் அமித் ஷா பேசியது என்ன?
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    திருநெல்வேலி: ‘தமிழகத்தில் திமுகவை வேரோடு பிடுங்கி எறிய வேண்டும்’ என்று, திருநெல்வேலியில் நடைபெற்ற கன்னியாகுமரி மண்டல பாஜக பூத் பொறுப்பாளர்கள் மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.

    திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் விருதுநகர் மாவட்டங்களை உள்ளடக்கிய கன்னியாகுமரி மண்டல அளவிலான பாஜக பூத் பொறுப்பாளர்கள் மாநாடு திருநெல்வேலியில் நேற்று நடைபெற்றது.

    இதில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதாவது:சரித்திரம், வீரம், பண்பாடு, கலாச்சாரம் மிகுந்த தமிழ் மண்ணை வணங்குகிறேன். நாகாலாந்து மாநில ஆளுநராகப் பணியாற்றிய இல.கணேசன் தனது வாழ்க்கையை பாஜகவுக்காக அர்ப்பணித்தவர்.

    அவரது ஆன்மா இளைப்பாற பிரார்த்திக்கிறேன். தமிழகத்தை சேர்ந்த சி.பி.ராதா கிருஷ்ணனை குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் முன்னிறுத்தி பெருமையடையச் செய்துள்ள பிரதமர் மோடிக்கும், பாஜக தேசிய தலைவர் நட்டாவுக்கும் நன்றி தெரிவிக்கிறேன்.

    பிரதமர், முதல்வர் ஆகியோர் கைதாகி சிறைக்குச் சென்று, 30 நாட்களுக்கு மேலிருந்தால் அவர்களது பதவி பறிபோகும் புதிய மசோதா மக்களவையில் கொண்டு வரப்பட்டுள்ளது. அதனை எதிர்க்கட்சிகள் எதிர்க்கின்றன.

    தமிழகத்தில் பொன்முடி, செந்தில் பாலாஜி ஆகியோர் சிறையில் இருந்துள்ளனர். சிறையில் இருந்தவர்கள் ஆட்சியாளர்களாக தொடர முடியுமா, சிறையில் இருந்து கொண்டே ஆட்சி நடத்த முடியுமா? என்பதை மக்கள்தான் சொல்ல வேண்டும்.

    மத்திய அரசின் இந்த புதிய மசோதாவை கருப்புச் சட்டம் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறுகிறார். அவ்வாறு சொல்ல அவருக்கு எந்த உரிமையும் இல்லை. தமிழகத்தில் டாஸ்மாக் ஊழல், எல்காட் ஊழல், போக்குவரத்து துறை ஊழல், இலவச வேட்டி-சேலையில் ஊழல், வேலை வாய்ப்பு வழங்குவதில் ஊழல் என, அனைத்து திட்டங்களிலும் ஊழல் செய்கிறார்கள். வரும் தேர்தலில் வெற்றிபெற்று தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும்போது இதற்கு முடிவு கட்டப்படும்.

    திமுகவும், காங்கிரஸும் தங்களது வாரிசுகளை அரியணையில் அமர்த்த துடிக்கிறார்கள். சோனியா காந்தி தனது மகன் ராகுலை பிரதமராக்கவும், ஸ்டாலின் தனது மகன் உதயநிதியை முதல்வராக்கவும் கனவு காண்கிறார்கள். அந்த கனவ ஒருபோதும் பலிக்காது. தமிழகத்தில் திமுக கூட்டணியை, தேசிய ஜனநாயக கூட்டணி நிச்சயம் தோற்கடிக்கும்.

    7,980-க்கும் மேற்பட்ட பூத்களில் இருந்து 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இங்கு வந்துள்ளனர். கடந்த தேர்தலில் பாஜக 18 சதவீதமும், அதிமுக 21 சதவீதமும் வாக்குகளைப் பெற்றுள்ளன. அவை இரண்டும் சேர்ந்தால் நிச்சயம் நமக்கு வெற்றி கிடைக்கும். தேசிய ஜனநாயகக் கூட்டணி என்பது வெறும் அரசியல் கூட்டணி அல்ல. தமிழகத்தை வளர்ச்சி, முன்னேற்றம் அடையச் செய்யும் கூட்டணி.

    அத்தியாவசிய பொருட்களுக்கான ஜிஎஸ்டி குறைக்கப்பட உள்ளது. ரூ. 1 லட்சம் கோடி திட்டமுதலீட்டில் இளைஞர்களுக்கான புதிய வேலைவாய்ப்பு திட்டங்களும், நாட்டின் அனைத்து பகுதிகளும் பாரபட்சமற்ற வகையில் முன்னேறும் வகையிலான திட்டங்களும் வகுக்கப்பட்டு வருகின் றன. இதை மக்களிடம் சொல்ல வேண்டும். வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவை வேரோடு பிடுங்கி ஆட்சி மாற்றத்தை உருவாக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார். மாநாட்டில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர் அண்ணாமலை, மூத்த தலைவர்கள் ஹெச்.ராஜா, தமிழிசை சவுந்தரராஜன், முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், அகில இந்திய பொறுப்பாளர் அரவிந்த் மேனன், துணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, தேசிய மகளிரணி தலைவி வானதி சீனிவாசன், மாநில அமைப்பு செயலர் கேசவ விநாயகம், எம்.ஆர். காந்தி எம்எல்ஏ, முன்னாள் எம்எல் ஏ.க்கள் சரத்குமார், விஜயதரணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    நன்றி கெட்டவர்களுடன் நான் ஏன் இருக்க வேண்டும்? – கே.எஸ்.ராதாகிருஷ்ணன் கேள்வி: ‘நன்றி கெட்டவர்கள் மத்தியில் நான் ஏன் இருக்க வேண்டும்?’ என, வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பினார். தென்காசி மாவட்டம் திருவேங்கடம் அருகே குறிஞ்சாங்குளத்தை சேர்ந்தவர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன். சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞராக உள்ளார். திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி, இவரை ‘ராதா’ என்று அழைக்கும் அளவுக்கு நெருக்கமானார்.

    1993-ல் மதிமுகவிலும், பின்னர் அதிமுகவிலும் இணைந்தார். பின்னர், திமுக செய்தி தொடர்பாளராக இருந்தார். 2022-ம் ஆண்டு திமுக தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அக்கட்சியை விட்டு விலகினார். இந்நிலையில், நெல்லையில் நடைபெற்ற பாஜக மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.

    திருநெல்வேலியில் மத்திய உள்துறை அமைச்சர்

    அமித் ஷா முன்னிலையில் பாஜகவில் இணைந்த

    வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன்.

    அப்போது அவர் கூறியதாவது: தேசிய நதிகளை இணைக்க வேண்டும் என்று, 40 ஆண்டுகளுக்கு முன்பே வழக்கு தொடுத்து தீர்வு கண்டுள்ளேன். தமிழகத்தில் நெய்யாறு, அடவிநயினார், செண்பகவல்லி, அச்சங்கோயில் – பம்பை – வைப்பாறு, முல்லை பெரியாறு, ஆழியாறு, பாண்டியாறு புன்னம்புழா, காவிரி என 19 நதிநீர் பிரச்சினைகள் உள்ளன.

    இவற்றுக்கு மத்திய அரசால்தான் தீர்வு காண முடியும். திமுகவிலிருந்து நான் விலகவில்லை. விலக்கப்பட்டேன். விளக்கம் கூட கேட்கவில்லை. திமுக சட்டப்படி பார்த்தால் நான் அங்கு உறுப்பினர்தான். நன்றி கெட்டவர்கள் மத்தியில் நான் ஏன் இருக்க வேண்டும்? எனது உழைப்பை திமுக வரலாறு சொல்லும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    முதுகலை ஆசிரியர் தேர்வை தள்ளிவைக்க ஆலோசனை 

    September 25, 2025
    மாநிலம்

    திண்டுக்கல் சீனிவாசனுக்காக ஓரங்கட்டப்படுகிறாரா நத்தம் விசுவநாதன்..?

    September 24, 2025
    மாநிலம்

    881 கவுரவ விரிவுரையாளர்களுக்கு தற்காலிக பணி; இன்று முதல் விண்ணப்பிக்கலாம்: அமைச்சர் கோவி.செழியன்

    September 24, 2025
    மாநிலம்

    இருக்கன்குடி மாரியம்மன் கோயில் விவகாரம்: அரசுக்கு கிருஷ்ணசாமி எச்சரிக்கை

    September 24, 2025
    மாநிலம்

    மாதம்பட்டி ரங்கராஜ் நிறுவனம் குறித்து கருத்து தெரிவிக்கவில்லை: ஜாய் கிரிசில்டா ஐகோர்ட்டில் தகவல்

    September 24, 2025
    மாநிலம்

    சீமானும், விஜயலட்சுமியும் பரஸ்பரம் மன்னிப்புக் கோர வேண்டும்: உச்ச நீதிமன்றம்

    September 24, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • முதுகலை ஆசிரியர் தேர்வை தள்ளிவைக்க ஆலோசனை 
    • சரியான அளவு தண்ணீரை குடிப்பது பக்கவாதம் மற்றும் இதய நோய்க்கான அபாயத்தை குறைக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • திண்டுக்கல் சீனிவாசனுக்காக ஓரங்கட்டப்படுகிறாரா நத்தம் விசுவநாதன்..?
    • கொலஸ்ட்ரால் கட்டுப்பாடு மற்றும் எடை மேலாண்மைக்கு பாதாம் பால்; அதன் ஆரோக்கிய நன்மைகளைக் கண்டறியவும் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • வாட்ஸ்அப் மெசேஜ்களை துரிதமாக மொழிபெயர்க்கும் அம்சம்: பயன்படுத்துவது எப்படி?

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.