Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, August 26
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»தமிழகத்தில் கொடிக் கம்பங்களை அகற்றும் ஐகோர்ட் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை!
    மாநிலம்

    தமிழகத்தில் கொடிக் கம்பங்களை அகற்றும் ஐகோர்ட் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை!

    adminBy adminAugust 25, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    தமிழகத்தில் கொடிக் கம்பங்களை அகற்றும் ஐகோர்ட் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை!
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுடெல்லி: தமிழகத்தில் பொது இடங்கள், சாலையோரங்களில் உள்ள அரசியல் கட்சிகள், சாதி, மத அமைப்புகளின் கொடிக் கம்பங்களை அகற்ற வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்துள்ள உச்ச நீதிமன்றம், தற்போதைய நிலையே தொடர உத்தரவிட்டுள்ளது.

    கொடிக்கம்பங்கள் தொடர்பான உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மார்கிஸ்ட் மாநில செயலாளர் பி.சண்முகம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அதில், ‘கொடிமரங்களை அகற்ற வேண்டும் என்பது அரசியல் சாசன உரிமை, சமத்துவம், சுதந்திர உரிமைகளைப் பறிப்பதாகும். பொது இடங்கள், சாலைகள், உள்ளாட்சி அமைப்புகளுக்கு சொந்தமான இடங்களில் நிரந்தரமாக அமைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சிகள், சாதி, மத மற்றும் பிற அமைப்புகளின் கொடிக் கம்பங்களை அகற்ற வேண்டுமென தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு மாநில அரசின் நிர்வாக உரிமையில் தலையிடுவதாகும்.

    கருத்துரிமை, பொது இடங்களில் கூடும் உரிமைகளை மறுக்க முடியாது. கொடிகளை அகற்ற உத்தரவிடும் முன்பாக அரசியல் கட்சிகளின் கருத்துகளையும் கோரவில்லை. எனவே, கொடிக் கம்பங்களை அகற்ற வேண்டும் என தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை உறுதி செய்து 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு பிறப்பித்துள்ள உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும். தற்போதுள்ள நிலையே தொடர உத்தரவிட வேண்டும்’ எனக் கோரியிருந்தார்.

    இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை நீதிபதிகள் விக்ரம்நாத், சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று நடைபெற்றது. மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் எஸ்.முரளிதர் மற்றும் வழக்கறிஞர் எஸ்.பிரசன்னா ஆகியோர், ‘இந்த வழக்கு விசாரணையில் சில முரண்பாடுகள் உள்ளன. அனைத்து அம்சங்களையும் கருத்தில் கொள்ளாமல் உயர் நீதிமன்ற மதுரை கிளை இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது’ என வாதிட்டனர்.

    அதையடுத்து நீதிபதிகள், இந்த மேல்முறையீட்டு வழக்கில் தமிழக அரசு உள்ளிட்ட எதிர்மனுதாரர்கள் பதிலளிக்க உத்தரவிட்டனர். அதுவரை தமிழகத்தில் பொது இடங்கள், சாலையோரங்களில் உள்ள கொடிக் கம்பங்களை அகற்றக் கூடாது என்றும், தற்போதுள்ள நிலையே தொடர வேண்டும் என்றும் உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்துள்ளனர்.

    வழக்கின் பின்னணி – முன்னதாக, மதுரை கொடிக்குளத்தைச் சேர்ந்த அமாவாசை தேவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில், விளாங்குடியில் அதிமுக சார்பில் கொடிக் கம்பம் அமைக்க அனுமதி கோரி தாக்கல் செய்திருந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், ‘பொது இடங்கள், சாலைகள், உள்ளாட்சி அமைப்புகளுக்குச் சொந்தமான இடங்களில் நிரந்தரமாக வைக்கப்பட்டுள்ள அனைத்து அரசியல் கட்சிகள், சாதி, மத மற்றும் பிற அமைப்புகளின் கொடிக் கம்பங்களை அகற்ற வேண்டும். தேவைப்பட்டால் இந்த கொடிக் கம்பங்களை, அவர்களுக்கு சொந்தமான இடங்களில் வைத்துக்கொள்ளலாம்’ என்று உத்தரவிட்டார்.

    இந்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜெ.நிஷாபானு, எஸ்.ஸ்ரீமதி ஆகியோர் அடங்கிய அமர்வு, தனி நீதிபதியின் உத்தரவை உறுதி செய்து, மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

    உயர் நீதிமன்ற மதுரை கிளையின் இந்த உத்தரவை எதிர்த்து அமாவாசை தேவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜெ.கே.மகேஸ்வரி, விஜய் விஷ்னோய் ஆகியோர் அடங்கிய அமர்வு, ‘அரசு நிலத்தில் கொடிக் கம்பங்கள வைக்க எப்படி அனுமதி கோர முடியும்?’ எனக் கூறி உயர் நீதிமன்ற உத்தரவில் தலையிட மறுப்பு தெரிவித்தனர்.

    இதையடுத்து, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் கொடிக் கம்பங்களை அகற்றும் விவகாரம் தொடர்பான வழக்கை விசாரித்த 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வும், உச்ச நீதிமன்ற உத்தரவு அடிப்படையில் கொடிக் கம்பங்களை அகற்றும் உத்தரவை கடந்த ஆகஸ்ட் 14-ல் உறுதி செய்தது குறிப்பிடத்தக்கது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    கோட்டூர்புரம் உதவி மையத்தில் முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு

    August 26, 2025
    மாநிலம்

    ஆபரேஷன் சிந்தூர் பணியில் இருந்த இளம் ராணுவ வீரர் சரண் மாரடைப்பால் மரணம்

    August 25, 2025
    மாநிலம்

    மதுரை: பெண்ணின் இதயம் வரை குத்தியிருந்த ஊசியை பாதுகாப்பாக அகற்றிய மருத்துவர்கள்!

    August 25, 2025
    மாநிலம்

    அதிமுகவினர் தாக்குதல் எதிரொலி: 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கு பாதுகாப்பு கேட்டு வழக்கு!

    August 25, 2025
    மாநிலம்

    தமிழகம் முழுவதும் உடல் உறுப்பு திருட்டை விசாரிக்க ஐஜி தலைமையில் சிறப்பு படை: ஐகோர்ட் உத்தரவு

    August 25, 2025
    மாநிலம்

    “எந்தக் கட்சியும் தனித்து போட்டியிட்டு முதல்வராக முடியாது” – ஜான் பாண்டியன்

    August 25, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • கோட்டூர்புரம் உதவி மையத்தில் முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு
    • நடிகர் தனிஷ்டா சாட்டர்ஜி பாதிக்கப்பட்டுள்ள ஒலிகோமெட்டாஸ்டேடிக் புற்றுநோய் என்றால் என்ன – இந்தியாவின் காலங்கள்
    • காசாவில் இஸ்ரேல் தாக்குதல்: 5 பத்திரிகையாளர்கள் உட்பட 20 பேர் உயிரிழப்பு
    • ஆபரேஷன் சிந்தூர் பணியில் இருந்த இளம் ராணுவ வீரர் சரண் மாரடைப்பால் மரணம்
    • புற்றுநோய் சிகிச்சையின் போது ஏற்படும் பிரச்சினைகள்: காரணங்கள், சவால்கள் மற்றும் நடைமுறை தீர்வுகள் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.