Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, July 29
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»தமிழகத்தில் கவுரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்: ஓபிஎஸ் வலியுறுத்தல்
    மாநிலம்

    தமிழகத்தில் கவுரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்: ஓபிஎஸ் வலியுறுத்தல்

    adminBy adminJuly 29, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    தமிழகத்தில் கவுரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்: ஓபிஎஸ் வலியுறுத்தல்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: தமிழகத்​தில் கவுரவ விரிவுரை​யாளர்​களை பணி நிரந்​தரம் செய்ய வேண்​டும் என்று முன்​னாள் முதல்​வர் ஓ.பன்​னீர்​செல்​வம் வலி​யுறுத்​தி​யுள்​ளார்.

    இது தொடர்​பாக அவர் வெளி​யிட்ட அறிக்​கை​: தமிழகத்​தில் மொத்​தம் 180 அரசு கலை மற்​றும் அறி​வியல் கல்​லூரி​கள் உள்​ளன. கடந்த 4 ஆண்டு திமுக ஆட்​சி​யில் 35 அரசு கலை மற்​றும் அறி​வியல் கல்​லூரி​கள் புதி​தாக தொடங்​கப்​பட்​டன. இதில் 2025-2026 ஆண்டில் மட்​டும் 15 புதி​யக் கல்​லூரி​கள் தொடங்​கப்​பட்​டதோடு, 253 புதிய பாடப் பிரிவு​களும் தொடங்​கப்​பட்​டுள்​ளன.

    ஆனால், ஒரு ஆசிரியர் கூட புதி​தாக பணி​யமர்த்​தப்​பட​வில்லை என்​பது​தான் வேதனை அளிக்​கிறது. தமிழகத்​தில் உள்ள அரசுகலை மற்​றும் அறி​வியல் கல்​லூரி​களில் உள்ள அனு​ம​திக்​கப்​பட்ட உதவி பேராசிரியர்​கள் மற்​றும் பேராசிரியர்​களின் எண்ணிக்கை 14 ஆயிரம் எனும் நிலை​யில், வெறும் 5 ஆயிரம் உதவி பேராசிரியர்​கள் மற்​றும் பேராசிரியர்​கள் மட்​டுமே நிரந்தரமாக பணி​யாற்றி வரு​கின்​றனர்.

    கிட்​டத்​தட்ட 8 ஆயிரம் பேர் கவுரவ விரிவுரை​யாளர்​களாக 20 ஆண்​டு​களுக்​கும் மேலாக ரூ.25 ஆயிரம் தொகுப்பு ஊதி​யத்​தில் ஆண்டுக்கு 11 மாதச் சம்​பளத்தை பெற்​றுக் கொண்டு பணி​யாற்​றிக் கொண்​டிருக்​கின்​றனர். இவர்​கள் அனை​வருமே முதுகலைப் பட்​டம், ஆய்​வியல் நிறைஞர் பட்​டம், முனை​வர் பட்​டம் போன்​றவற்றை பெற்​றுள்​ளதோடு, தேசிய தகு​தித் தேர்​வு, மாநில தகு​தித் தேர்வு ஆகிய​வற்​றி​லும் தேர்ச்சி பெற்​றுள்​ளனர்.

    இவர்​கள் நிரந்​தரம் செய்​யப்​பட​வில்​லை. பல்​கலைக்​கழக மானியக் குழு பரிந்​துரைத்த ஊதி​ய​மும் இவர்​களுக்கு வழங்கப்படவில்லை. இதன் காரண​மாக, இவர்​கள் அனை​வரும் விரக்​தி​யின் விளிம்​பில் உள்​ளனர். இதற்​கிடை​யில் அரசு கலை, அறி​வியல் கல்​லூரி​களில் 4 ஆயிரம் உதவிப் பேராசிரியர்​கள் காலிப் பணி​யிடங்​களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரி​யத்​தால் அறிவிக்கை வெளி​யிடப்​பட்​டு, உயர்​நீ​தி​மன்ற உத்​தர​வைத் தொடர்ந்து ரத்து செய்​யப்​பட்​டது. அதனைத் தொடர்ந்து மேலும் 500 கவுரவ விரிவுரை​யாளர்​களை நியமிக்க திமுக அரசு நடவடிக்கை எடுத்து வரு​கிறது.

    கல்​லூரி​களில் அவ்​வப்​போது முறை​யாக உதவிப் பேராசிரியர்​கள் நியமிக்​கப்​ப​டாததும், நீண்ட கால​மாக பணி​யாற்​றும் கவுரவ விரிவுரை​யாளர்​கள் பணி நிரந்​தரம் செய்​யப்​ப​டாததும் கடும் கண்​டனத்​துக்​குரியது. அரசு கலைக் கல்​லூரி​களில் உதவிப் பேராசிரியர் பணி​யிடங்​கள் நிரப்​பப்​ப​டாத​தால் மாணவ, மாண​வியர் சேர்க்கை சென்ற ஆண்​டுடன் ஒப்​பிடும்​போது 16,000 ஆக குறைந்​துள்​ள​தாக புள்ளி விவரம் தெரிவிக்​கிறது.

    எனவே, உயர் கல்​வியை மேம்​படுத்த அரசு கலை மற்​றும் அறி​வியல் கல்​லூரி​களில் ஆசிரியர் தேர்வு வாரி​யம் மூலம் நிரந்​தர​மாக உதவிப் பேராசிரியர்​களை நியமிக்​க​வும், 20 ஆண்​டு​களுக்​கும் மேலாக பணிபுரி​யும் கவுரவ விரிவுரை​யாளர்​களை பணி நிரந்​தரம் செய்​ய​வும் நடவடிக்கை எடுக்​க வேண்​டும்​. இவ்​வாறு அறிக்​கையில் கூறப்பட்டுள்ளது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    சென்னை ரயில்வே கோட்ட புதிய மேலாளராக சைலேந்திர சிங் பொறுப்பேற்பு

    July 29, 2025
    மாநிலம்

    பாஜகவை எதிர்க்க துணிந்த ஓபிஎஸ்… விஜய்யுடன் ‘மெகா’ கூட்டணி அமைக்க திட்டம்!

    July 29, 2025
    மாநிலம்

    சு.வெங்கடேசன் எம்.பி.க்கு கொலை மிரட்டல்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

    July 29, 2025
    மாநிலம்

    மதுரை: சொத்துவரி விவகாரத்தில் பதவி விலகக் கோரி மேயரை முற்றுகையிட்ட அதிமுக கவுன்சிலர்கள்

    July 29, 2025
    மாநிலம்

    உயர்கல்வியை சீரமைக்க உடனடி நடவடிக்கை தேவை: முதல்வருக்கு பாலகுருசாமி வேண்டுகோள்

    July 29, 2025
    மாநிலம்

    திருவள்ளூரில் கூடுதல் ரயில்களை நிறுத்தகோரி ரயில்வேக்கு 150-க்கும் மேற்பட்ட மின்னஞ்சல்கள் அனுப்பிய பயணிகள்

    July 29, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • சென்னை ரயில்வே கோட்ட புதிய மேலாளராக சைலேந்திர சிங் பொறுப்பேற்பு
    • 8 உங்கள் இன்சுலின் அதிகரிக்கும் அன்றாட காலை உணவு பழக்கம் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • “பிஹார் தேர்தலுக்குப் பிறகும் நிதிஷ் குமார் முதல்வராக இருப்பார்” – சிராக் பாஸ்வான் நம்பிக்கை
    • பொதுத் தேர்வு அட்டவணை அக்டோபரில் வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல்
    • விஜய் இல்லாமல் ‘எல்சியு’ படங்கள் இல்லை: லோகேஷ் கனகராஜ்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.