Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, June 30
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»தமிழகத்தில் கஞ்சா, போதைப்பொருள் நடமாட்டம் விவகாரம்: பேரவையில் முதல்வர் – எதிர்க்கட்சி தலைவர் காரசார விவாதம்
    மாநிலம்

    தமிழகத்தில் கஞ்சா, போதைப்பொருள் நடமாட்டம் விவகாரம்: பேரவையில் முதல்வர் – எதிர்க்கட்சி தலைவர் காரசார விவாதம்

    adminBy adminApril 29, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    தமிழகத்தில் கஞ்சா, போதைப்பொருள் நடமாட்டம் விவகாரம்: பேரவையில் முதல்வர் – எதிர்க்கட்சி தலைவர் காரசார விவாதம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    தமிழகத்தில் போதைப்பொருள், கஞ்சா விற்பனை விவாகாரம் தொடர்பாக நேற்று சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமிக்கும் காரசார விவாதம் நடந்தது.

    சட்டப்பேரவையில் நேற்று காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் உறுப்பினர்கள் பேசினர்.

    எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி: பொதுக்கூட்டம், மக்கள் பிரச்சினைகளுக்காக ஆர்ப்பாட்டம் நடத்த காவல் துறை அனுமதி மறுக்கிறது. காவல்துறைக்கு தெரியாமல் போதைப்பொருள், கஞ்சா விற்பனை நடைபெற வாய்ப்பு இல்லை. சட்டவிரோத மதுபான விற்பனையை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவர்கள் போதைக்கு அடிமையாகி சமூகவிரோத செயல்களில் ஈடுபடுகின்றனர்.

    முதல்வர் மு.க.ஸ்டாலின்: போராட்டம் நடத்த உரிய நேரத்தில் விண்ணப்பித்தால் காவல்துறை அனுமதி அளிக்கிறது. அதிமுக ஆட்சிக்காலத்தில்தான் போதைப்பொருட்கள், குட்கா விற்பனை தலைவிரித்தாடியது. நாங்கள் அதனை தடுக்க அதிரடி நடவடிக்கை எடுத்தோம். போதைப்பொருட்கள் தடுப்பு நடவடிக்கையில் தமிழகம் முன்னணி மாநிலமாக திகழ்வதாக மத்திய அரசு அறிக்கை கூறுகிறது.

    பழனிசாமி: அண்டை மாநிலங்களில் இருந்து ரயில்கள் வழியாக போதைப்பொருட்கள் கடத்தி வரப்படுகின்றன. உளவுத்துறை முற்றிலும் செயலிழந்துவிட்டது. எதிர்க்கட்சிகளின் செயல்களைத்தான் அவர்கள் கண்காணிக்கின்றனர். கொள்ளையடிக்க ஏற்ற இடம் என்று கருதிதான் சென்னைக்கு விமானத்தில் வந்து கொள்ளை அடித்துச்செல்கிறார்கள். குற்றவாளிகளுக்கு தமிழகம் என்றால் பயமும், அச்சமும் வரவேண்டும்.

    அவை முன்னவர் துரைமுருகன்: திமுக ஆட்சியில் ரவுடிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

    ஸ்டாலின்: கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை காவல்துறையினர் விரைந்து கைதுசெய்தனர். உங்கள் ஆட்சிக்காலத்தில் போலீஸ் டிஜிபி, ஐஐ ஆகியோர் கூட குட்கா விற்பனையில் ஈடுபட்டது தெரியாதா. அதிமுக ஆட்சிக்காலத்தில் டெல்லியில் இருந்து விமானத்தில் வந்து கொள்ளையடித்துச் சென்றது ஞாபகம் இருக்கட்டும்.

    பழனிசாமி: போக்சோ வழக்குகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வண்ணம் உள்ளது. அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டார். நாங்கள் 2026-ல் ஆட்சிக்கு வந்ததும் இந்த சம்பவம் குறித்து மீண்டும் விசாரிப்போம்.

    ஸ்டாலின்: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் சம்பவத்தில் உடனடியாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு குற்றவாளி குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். குற்றப்பத்திரிகையும் விரைந்து தாக்கல் செய்யப்பட்டது. இதை உயர் நீதிமன்றமே பாராட்டியுள்ளது. உங்கள் ஆட்சியில் நடந்த பொள்ளாச்சி சம்பவத்தில் குற்றவாளிகள் எப்படி பாதுகாக்கப்பட்டார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு நடவடிக்கைகளில் தேசிய சராசரியைவிட தமிழகம் அதிகம்.

    சமூகநலத்துறை அமைச்சர் கீதா ஜீவன்: திமுக ஆட்சியில் போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வு காரணமாக பெண்கள் தைரியமாக புகார் செய்கின்றனர். அதனால் போக்சோ வழக்குகள் அதிகம் பதிவாகி வருகின்றன.

    பழனிசாமி: திமுக ஆட்சியில் என்கவுன்ட்டர், லாக்-அப் மரணங்கள் தொடர்கின்றன. போலி என்கவுன்ட்டர்கள் மூலம் கொல்லப்படுவதை உயர் நீதிமன்றமே கண்டித்திருக்கிறது. கனிம வளங்கள் கடத்தப்படுகின்றன.

    ஸ்டாலின்: உரிய அனுமதி பெற்று குவாரிகளில் இருந்து கனிமங்களை எடுத்துச்செல்ல அரசு அனுமதி அளிக்கிறது. அனுமதி பெறாதவர்கள் மீது அபராதம் உட்பட கடும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இவ்வாறு விவாதம் நடந்தது.

    தொடர்ந்து யூடியூபர் சவுக்கு சங்கர் வீட்டில் கழிவுநீரை கொட்டப்பட்ட சம்பவம் குறித்து பழனிசாமி பேசினார். அப்போது குறிக்கிட்ட முதல்வர், இச்சம்பவம் தொடர்பான சிபிசிஐடி விசாரணை நிலுவையில் இருப்பதால் எதிர்க்கட்சித் தலைவரின் பேச்சை அவைக்குறிப்பில் இருந்து நீக்க கோரினார். அவ்வாறே நீக்கப்படுவதாக பேரவை தலைவரும் அறிவித்தார். அப்போது அதிமுக உறுப்பினர்கள் கூச்சலிட்டதால் அவையில் அமளி நிலவியது.

    அப்போது பழனிசாமி, சவுக்கு சங்கர் விகாரத்தில் உங்களுக்கு அச்சமும் பயமும் வருகிறது என்றார். இதற்கு பதிலளித்த ஸ்டாலின் எங்களுக்கு அச்சமோ, பயமோ இல்லை என்றார். பின்னர் முதல்வரின் வேண்டுகோளை ஏற்று சவுக்கு சங்கர் விவகாரம் தொடர்பான பேச்சு அவைக்குறிப்பில் பதிவு செய்யப்படுவதாக பேரவைத் தலைவர் அறிவித்தார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    கோயில்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் தினக்கூலி பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய கோரிக்கை

    June 30, 2025
    மாநிலம்

    ஜூலை 1-ம் தேதி மருத்துவர்கள் தினத்தில் அரசு மருத்துவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுகோள்

    June 30, 2025
    மாநிலம்

    பெண் கல்வி, வாழ்வாதார மேம்பாட்டுக்கு உதவ வேண்டும்: நீதிபதி டி.வி.தமிழ்ச்செல்வி வேண்டுகோள்

    June 30, 2025
    மாநிலம்

    வியாசர்பாடி கணேசபுரம் மேம்பால பணி 40 சதவீதம் நிறைவு: மாநகராட்சி நிர்வாகம் பதில்

    June 30, 2025
    மாநிலம்

    மகளிர் உரிமை தொகை பெறுவதற்கான விதிகளில் 3 தளர்வுகள் அறிவிப்பு: தமிழக அரசு அரசாணை வெளியீடு

    June 30, 2025
    மாநிலம்

    திமுக கூட்டணி மறுபரிசீலனைக்கு அவசியமில்லை: நிர்வாக குழு கூட்டத்துக்கு பிறகு வைகோ திட்டவட்டம்

    June 30, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • மாரடைப்பு அறிகுறிகள்: ஒரு மாதத்திற்கு முன்பு தோன்றக்கூடிய மாரடைப்பின் 5 எச்சரிக்கை அறிகுறிகள் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • Calalhoyuk: பெண்களால் ஆளப்படும் 9,000 ஆண்டுகள் பழமையான நகரம், டி.என்.ஏ திருமண நாகரிகத்தின் கதையை வெளிப்படுத்துகிறது | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ​விம்​பிள்​டன் டென்​னிஸ் போட்டி இன்று தொடக்​கம்!
    • கோயில்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் தினக்கூலி பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய கோரிக்கை
    • க்ளோசெட் டிடாக்ஸ்: நாம் ஒருபோதும் அணியாத ஆடைகளை ஏன் பதுக்கி வைக்கிறோம் என்பதற்குப் பின்னால் உள்ள உளவியல்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.