Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Thursday, July 10
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»தமிழகத்தில் இருந்து ஹஜ் புனித பயணம் தொடங்கியது: சென்னையில் இருந்து புறப்பட்ட முதல் விமானத்தில் 402 பேர் சென்றனர்
    மாநிலம்

    தமிழகத்தில் இருந்து ஹஜ் புனித பயணம் தொடங்கியது: சென்னையில் இருந்து புறப்பட்ட முதல் விமானத்தில் 402 பேர் சென்றனர்

    adminBy adminMay 17, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    தமிழகத்தில் இருந்து ஹஜ் புனித பயணம் தொடங்கியது: சென்னையில் இருந்து புறப்பட்ட முதல் விமானத்தில் 402 பேர் சென்றனர்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: தமிழகத்தில் இருந்து ஹஜ் புனித பயணம் தொடங்கியது. சென்னையில் இருந்து புறப்பட்ட முதல் விமானத்தில் 402 பேர் புறப்பட்டனர். தமிழகத்திலிருந்து நடப்பாண்டு 5,730 பேர் ஹஜ் புனித பயணம் மேற்கொள்கின்றனர். சென்னை விமான நிலையத்தில் இருந்து சவூதி அரேபியன் ஏர்லைன்ஸ் விமானம் மூலமாக 5,407 பேரும், மீதமுள்ள 323 பேர் பல்வேறு மாநிலங்களில் உள்ள விமான நிலையங்களில் இருந்தும் பயணம் மேற்கொள்கின்றனர்.

    ஹஜ் புனித பயணம் மேற்கொள்ளும் 402 பேர் அடங்கிய முதல் குழுவினர் நேற்று சென்னை விமான நிலையத்திலிருந்து சவுதி அரேபியன் ஏர்லைன்ஸ் தனி விமானத்தில் ஜெட்டாவுக்கு புறப்பட்டனர். அவர்களை சென்னை விமான நிலையத்தில் சிறுபான்மையர் நலன் மற்றும் வெளிநாட்டு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர் வழி அனுப்பி வைத்தார்.

    சட்டப்பேரவை உறுப்பினர் மற்றும் தமிழக மாநில ஹஜ் குழு தலைவர் ப.அப்துல் சமது, செயல் அலுவலர் மு.அ.சித்திக், நாடாளுமன்ற உறுப்பினர் கா.நவாஸ்கனி, சட்டப்பேரவை உறுப்பினர் அசன் மவுலானா மற்றும் பிறப்படுத்தப்பட்டோர் – சிறுபான்மையினர் நலத்துறை செயலர் சா.விஜயராஜ்குமார் உள்ளிட்ட உடன் இருந்தனர்.

    அப்போது, அமைச்சர் நாசர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான ஹஜ் புனித பயணத்தின் முதல்கட்ட பயணம் தொடங்கியுள்ளது. வரும் 30-ம் தேதி வரை தமிழகத்திலிருந்து ஹஜ் புனித பயணத்துக்கு பயணிகள் செல்கின்றனர். 14 விமானங்கள் மூலம் 5,730 பேர் பயணம் மேற்கொள்ளவுள்ளனர். முதல் நாளான இன்று (நேற்று) மட்டும் 843 பேர் செல்கின்றனர். பயணம் செய்பவர்களுக்காக அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    பயணம் மேற்கொள்பவர்களுக்கு உரிய உணவு, தங்குமிடம் என தமிழக அரசு பல ஏற்பாடுகளை செய்து வருகிறது. முந்தைய அதிமுக ஆட்சியில் ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ளும் ஒரு நபருக்கு ரூ.3,000 அல்லது ரூ.2,000 கூட தரப்படுவதில்லை. ஆனால், இந்த ஆட்சியில் பயணம் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.25,000 மானியம் வழங்கப்படுகிறது.

    இதற்காக இந்த ஆண்டு ஹஜ் புனித பயணம் மேற்கொள்பவர்களுக்காக ரூ.14.21 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு விண்ணப்பித்த அனைத்து நபர்களுக்கும் மானியம் வழங்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு தமிழகத்திலிருந்து ஹஜ் புனித பயணம் மேற்கொள்வோரின் எண்ணிக்கையை அதிகரிப்பது முதல்வர் நடவடிக்கை எடுப்பார்” என்றார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    இபிஎஸ் ‘டம்மி வாய்ஸ்’ ஆக இருக்க வேண்டிய அவசியம் இல்லை: ஸ்டாலினுக்கு நயினார் நாகேந்திரன் பதிலடி

    July 10, 2025
    மாநிலம்

    திருவண்ணாமலை மாநகராட்சியை கண்டித்து ஜூலை 16-ல் அதிமுக ஆர்ப்பாட்டம்

    July 10, 2025
    மாநிலம்

    தவெக கொடி வண்ணம் பூசிய நாட்டுப் படகுகளுக்கு மானியம் நிறுத்தம்: நெல்லை மீனவர்கள் அதிர்ச்சி

    July 10, 2025
    மாநிலம்

    பொய் தகவலை பரப்பிய வழக்கு: முன்ஜாமீன் கோரி மதுரை ஆதீனம் மனு தாக்கல்

    July 10, 2025
    மாநிலம்

    பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறும் சூழல் ஏதுமில்லை: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி

    July 10, 2025
    மாநிலம்

    பாஜக தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: 5 ஐஏஎஸ் அதிகாரிகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆஜர்

    July 10, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • டெக்சாஸ் பெருவெள்ளம்: இதுவரை 120 பேர் உயிரிழப்பு; 170 பேர் மாயம்
    • இபிஎஸ் ‘டம்மி வாய்ஸ்’ ஆக இருக்க வேண்டிய அவசியம் இல்லை: ஸ்டாலினுக்கு நயினார் நாகேந்திரன் பதிலடி
    • வெற்று வயிற்றில் அதிகப்படியான பூண்டு சாப்பிடுவது உங்கள் ஆரோக்கியத்திற்கு பாதுகாப்பானதா? அதன் நன்மைகள் மற்றும் பக்க விளைவுகளை அறிந்து கொள்ளுங்கள் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • இடதுசாரி தீவிரவாத அமைப்புகளை முடக்க மகாராஷ்டிர பேரவையில் மசோதா தாக்கல்
    • திருவண்ணாமலை மாநகராட்சியை கண்டித்து ஜூலை 16-ல் அதிமுக ஆர்ப்பாட்டம்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.