Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, September 15
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும்: பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தகவல்
    மாநிலம்

    தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும்: பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தகவல்

    adminBy adminJuly 18, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும்: பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தகவல்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: ‘தமிழகத்​தில் ஆசிரியர்​கள் எப்​போ தெல்​லாம் போராட்​டம் நடத்​தி​யிருக்​கிறார்​களோ, அப்​போதெல்​லாம் ஆட்சி மாற்றம் ஏற்​பட்​டுள்​ளது’ என பாஜக மாநில தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் தெரி​வித்தார். தமிழகத்​தில் அரசு பள்​ளி​களில் ஆசிரியர் பற்​றாக்​குறையை சமாளிக்க பகு​திநேர ஆசிரியர்​கள் 2012-ம் ஆண்டு முதல் தொகுப்​பூ​தி​யத்​தில் பணி நியமனம் செய்யப்​படு​கின்​றனர். அதன்​படி தற்​போது 12 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட பகு​தி நேர ஆசிரியர்​கள் பணிபுரிந்து வரு​கின்​றனர்.

    இந்​நிலை​யில், திமுக தேர்​தல் அறிக்​கை​யில் கூறி​யுள்​ளபடி தங்​களை பணி நிரந்​தரம் செய்​யக்​கோரி, சென்​னை​யில் கடந்த 8-ம் தேதி முதல் தொடர் போராட்​டம் நடத்தி வரு​கின்​றனர். 10-வது நாளான நேற்று டிபிஐ வளாகம் முன்பு ஆர்ப்​பாட்​டத்​தில் ஈடு​பட்ட ஆசிரியர்​களை, போலீ​ஸார் கைது செய்து திரு​வல்​லிக்கேணி​யில் உள்ள சமூகநலக்​கூடத்​தில் அடைத்து வைத்​தனர்.

    இதற்​கிடையே, போராட்​டத்​தில் ஈடு​பட்​டுள்ள ஆசிரியர்​களை சந்​தித்து ஆதரவு தெரி​விப்​ப​தற்​காக நாம் தமிழர் கட்​சி​யின் தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமான், தமிழக பாஜக தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் ஆகியோர் சமூக கூடத்​துக்கு வந்​தனர். ஆனால், அவர்​களுக்கு போலீ​ஸார் அனுமதி தரவில்​லை.

    இதுகுறித்து செய்​தி​யாளர்​களிடம் சீமான் கூறும்​போது, ‘‘வீடு தேடி சேவை என்று விளம்​பரம் செய்​யப்​படு​கிறது. ஆனால், மக்​கள் சாலைக்கு வந்து போராடும் நிலையே உள்​ளது. திமுக ஆட்​சிக்கு வந்து 4 ஆண்​டு​களாகி​யும் கொடுத்த வாக்​குறு​தியை நிறை வேற்ற​வில்​லை. இந்த விவ​காரத்​தில் முதல்​வர் ஸ்டா​லின்​தான் முதல் எதிரி. எனவே, ஆசிரியர்​களின் கோரிக்​கையை நிறைவேற்ற தமிழக அரசு முன்வர வேண்​டும்’’ என்​றார்.

    தமிழக பாஜக தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: பகு​திநேர ஆசிரியர்​கள் பணி நியமனம் செய்யப்​படு​வார்​கள் என திமுக​வின் தேர்​தல் அறிக்​கை​யில் கூறப்​பட்​டிருந்​தது. ஆனால், திமுக அரசு நிறைவேற்​ற​வில்​லை. அதை நிறைவேற்​றச் சொல்​வது ஆசிரியர்​களின் உரிமை. அந்த வகை​யில், உரிமைக்​காகப் போராடிய பகு​திநேர ஆசிரியர்​கள் சென்​னை​யில் 250 பேரும், தூத்​துக்​குடி​யில் 150 பேரும் கைது செய்​யப்​பட்​டுள்​ளனர். இது கண்​டனத்​துக்​குரியது.

    திரு​வள்​ளூர் மாவட்​டம் கும்​மிடிப்​பூண்​டி​யில் 10 வயது பெண் குழந்​தையை தூக்​கிச்​சென்று பாலியல் வன்​கொடுமை செய்த நபரை போலீ​ஸார் இன்​னும் கைது செய்​ய​வில்​லை. அதே​போல், மயி​லாடு​துறை​யில் 23 பார்​களை சீல் வைத்​ததற்​காக டிஎஸ்​பி-யின் அரசு வாக​னம் திரும்​பப் பெறப்​பட்​டுள்​ளது.

    ஆனால், உரிமைக்​காகப் போராடிய ஆசிரியர்​களை மட்​டும் காவல்​துறை​யினர் கைது செய்​துள்​ளனர். ஆதி​தி​ரா​விடர் பள்​ளிகளில் 30 சதவீதம் மாணவர்கள் சேர்க்கை நடை​பெற​வில்​லை. அதே​போல், தமிழகம் முழு​வதும் உள்ள ஆதி​தி​ரா​விடர் பள்​ளி​களில் 5 ஆயிரத்​துக்கும் மேற்​பட்ட ஆசிரியர்​கள் பணி​யிடங்​கள் காலி​யாக உள்​ளன.

    ஆனால், தமிழக முதல்​வர் ஓரணி​யில் திரளுவோம் என ஊர்​வலம் சென்று கொண்​டிருக்​கிறார். ஆசிரியர்​கள் எப்போதெல்லாம் அரசை எதிர்த்து போராடு​கிறார்​களோ, அப்போதெல்லாம் அந்த அரசு வீழ்ந்​திருக்​கிறது. தேர்​தலுக்குப் பிறகு ஆட்சி மாற்​றம் வரும். அதன்​பிறகு நிச்​ச​யம்​ இந்த பிரச்​சினை முடிவுக்​கு வரும்​. இவ்​வாறு அவர்​ கூறி​னார்​.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    அண்ணா பிறந்தநாள் விழா: குன்னூரில் திமுக, அதிமுக இடையே மோதல்!

    September 15, 2025
    மாநிலம்

    புதுச்சேரியில் கூட்டணியை வலுப்படுத்த பாஜக ஆலோசனை

    September 15, 2025
    மாநிலம்

    மாநிலத்துக்குள் மின்சார வர்த்தகம் மேற்கொள்ள ​பசுமை எரிசக்தி கழகத்துக்கு உரிமம் வழங்கல்: மின்வாரிய அதிகாரிகள் தகவல்

    September 15, 2025
    மாநிலம்

    ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அலுவலக ஊழியர் லஞ்சம் கேட்டதாக அரசு மருத்துவர் புகாரால் பரபரப்பு

    September 15, 2025
    மாநிலம்

    “அரசியலில் சொகுசுக்கு இடமில்லை!” – ‘அன்புக் கரங்கள்’ திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின் பேச்சு

    September 15, 2025
    மாநிலம்

    வானிலை முன்னறிவிப்பு: ஈரோடு, சேலம் உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு கனமழை வாய்ப்பு

    September 15, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • அண்ணா பிறந்தநாள் விழா: குன்னூரில் திமுக, அதிமுக இடையே மோதல்!
    • நாள்பட்ட தூக்கமின்மையால் பாதிக்கப்படுகிறதா? இது மூளைக்கு ஒரு நேர வெடிகுண்டு – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • புதுச்சேரியில் கூட்டணியை வலுப்படுத்த பாஜக ஆலோசனை
    • இதய ஆரோக்கியம்: உங்கள் இதய ஆரோக்கியத்தைப் பற்றி உங்கள் நாக்கு என்ன சொல்கிறது | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ஆந்திராவில் பள்ளிச் சுவர் இடிந்து விழுந்து 5 வயது மாணவர் உயிரிழப்பு; 10 பேர் காயம்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.