Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, September 22
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»தமிழகத்தில் ஆக.2 முதல் 5-ம் தேதி வரை டெல்டா உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை
    மாநிலம்

    தமிழகத்தில் ஆக.2 முதல் 5-ம் தேதி வரை டெல்டா உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை

    adminBy adminJuly 30, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    தமிழகத்தில் ஆக.2 முதல் 5-ம் தேதி வரை டெல்டா உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: தமிழகத்தில் ஆக.2-ம் தேதி முதல் 5-ம் தேதி வரை டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட சில மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசை காற்றில் வேகமாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக, நாளை (ஜூலை 31) ஓரிரு இடங்களிலும், ஆக.1 முதல் ஆக.5-ம் தேதி வரை ஒருசில இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

    ஆக.2-ம் தேதி டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், 3-ம் தேதி டெல்டா மாவட்டங்கள் மற்றும் கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    4-ம் தேதி டெல்டா மாவட்டங்கள் மற்றும் கடலூர், அரியலூர் மாவட்டங்களிலும், 5-ம் தேதி டெல்டா மாவட்டங்கள் மற்றும் கடலூர், அரியலூர், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

    தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் நாளை, அதிகபட்ச வெப்பநிலை, வழக்கத்தை விட 7 டிகிரி ஃபாரன்ஹீட் வரை அதிகமாக இருக்கக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

    தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் நாளை முதல் ஆக.3-ம் தேதி வரை சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிமீ வேகத்திலும், இடையிடையே 60 கிமீ வேகத்திலும் வீசக்கூடும். தமிழகத்தில் இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் நடுவட்டம், கிளன்மார்கன் ஆகிய இடங்களில் தலா 2 செமீ, செருமுள்ளி, மேல் கூடலூர், ஊட்டி பிரையர் எஸ்டேட், கூடலூர் சந்தை, பந்தலூர், பார்வூட், தேவாலா, விண்ட் வொர்த் எஸ்டேட், அவலாஞ்சி, கோவை மாவட்டம் சின்னக்கல்லார் ஆகிய இடங்களில் தலா 1 செமீ மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    சென்னை ஆட்சியர் அலுவலகம் கிண்டிக்கு மாறுகிறது: இடம் ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியீடு

    September 22, 2025
    மாநிலம்

    நடிகர் எஸ்.வி.சேகர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

    September 22, 2025
    மாநிலம்

    ஆளுநர் ரவி, அண்ணாமலை வரிசையில் விஜய்யும் அவதூறு அரசியல் செய்கிறார்: ஆளூர் ஷாநவாஸ் விமர்சனம்

    September 22, 2025
    மாநிலம்

    அதிமுக பிரச்சாரத்துக்கு வரும் கூட்டம் வாக்குகளாக மாறும்: நயினார் நாகேந்திரன் நம்பிக்கை

    September 22, 2025
    மாநிலம்

    காவிரி டெல்டா பகுதியில் மீண்டும் ஷேல் காஸ் ஆய்வு கிணறுகள்: தடுத்து நிறுத்த தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வலியுறுத்தல்

    September 22, 2025
    மாநிலம்

    போக்சோ வழக்கில் புகார் அளிக்க காலவரம்பு இல்லை: உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு

    September 22, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • எச்1பி விசா கட்டண உயர்வால் திருமணத்தை ரத்து செய்துவிட்டு அமெரிக்காவுக்கு அவசரமாக புறப்பட்ட இந்தியர்கள்
    • ரைட் படத்தில் சமூக அக்கறை விஷயம்! – நட்டி தகவல்
    • சென்னை ஆட்சியர் அலுவலகம் கிண்டிக்கு மாறுகிறது: இடம் ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியீடு
    • உங்கள் கண்கள் தலைவலியை ஏற்படுத்துகின்றனவா: நிவாரணம் கண்டுபிடிப்பதற்கான இணைப்பு, காரணங்கள் மற்றும் வழிகளைப் புரிந்துகொள்வது | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ’15 நிமிடங்கள் ஒரு நேரத்தில் ‘: எரிகா உஷா வான்ஸின் ஆறுதலின் வார்த்தைகளை நினைவு கூர்ந்தார்; அவளை ‘விலைமதிப்பற்ற பெண்’ என்று அழைக்கிறார் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.