Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, September 16
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»தமிழகத்தின் 11.9% வளர்ச்சியை எல்.முருகனால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை: டிஆர்பி ராஜா
    மாநிலம்

    தமிழகத்தின் 11.9% வளர்ச்சியை எல்.முருகனால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை: டிஆர்பி ராஜா

    adminBy adminAugust 7, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    தமிழகத்தின் 11.9% வளர்ச்சியை எல்.முருகனால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை: டிஆர்பி ராஜா
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    திருவாரூர்: தமிழகத்தின் 11.9% என்ற இரட்டை இலக்க வளர்ச்சியை பொறுத்துக் கொள்ள முடியாமல் தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் எல். முருகன் வயிற்றெரிச்சலில் பேசுவதாக அமைச்சர் டிஆர்பி.ராஜா கருத்து தெரிவித்துள்ளார்.

    திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் உள்ள ராஜகோபால சுவாமி அரசினர் கலை கல்லூரியில் இன்று நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க வந்த தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, செய்தியாளர்களை சந்தித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது: இந்தியாவிலேயே பொருளாதாரத்தில் அதிவேகமாக வளரும் மாநிலமாக தமிழகம் உள்ளதாக மத்திய அரசின் தரவுகள் தெரிவித்துள்ளது. கடந்த நிதிநிலை அறிக்கையில் தமிழகம் 9 சதவீதம் வளர்ச்சி அடையும் என தெரிவிக்கப்பட்டு இருந்த நிலையில், அதையும் தாண்டி 11.19% உயர்ந்திருப்பதாக மத்திய அரசின் தரவுகள் கூறுகிறது.

    தமிழகம் பொருளாதாரத்தில் இரட்டை இலக்க வளர்ச்சி அடைந்திருப்பது 11 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தற்போது நடைபெற்றுள்ளது. இதற்கு முன்னர் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் ஆட்சியில் இரட்டை இலக்க வளர்ச்சியை தமிழகம் அடைந்தது. இந்நிலையில் கடந்த தேர்தல் வாக்குறுதியில் எதிர்க்கட்சி தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் அடுத்த 10 ஆண்டுகளில் தமிழகம் பொருளாதாரத்தில் இரட்டை இலக்க வளர்ச்சி அடையும் என தெரிவித்திருந்த நிலையில், தற்போது நான்கு ஆண்டுகளிலேயே இரட்டை இலக்க வளர்ச்சி என்பது 11.19% என்பது சாத்தியமாகி உள்ளது.

    இதற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின்தான் முழு காரணம். தமிழக முதல்வரின் கடுமையான உழைப்பின் காரணமாக தமிழ்நாடு நம்பர் ஒன் மாநிலமாக உள்ளது. தனிநபர் வருமானமும் இதன்பிறகு பன்மடங்கு உயரும் தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் வளர்ச்சி என்பதை இலக்காக கொண்டு முதல்வரும், துணை முதல்வரும் அதிகாரிகளை அரவணைத்து சென்றதன் விளைவு தான் இன்றைய வளர்ச்சி, தொழில்துறை சார்பிலும் தமிழக மக்கள் சார்பிலும் முதல்வருக்கு தனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    தமிழ்நாடு மிகப்பெரிய வளர்ச்சி அடைந்த நிலையில், மத்தியில் உள்ள அமைச்சர் வேறு யாரேனும் விமர்சித்திருந்தால் மன்னித்து விடலாம். ஆனால் தமிழகத்தை சேர்ந்த மத்திய அமைச்சர் எல்.முருகன் பேசியிருப்பது வயிற்றெரிச்சல் தவிர வேறு ஏதும் இல்லை” என்றார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    நன்கொடை தராததால் நற்பெயரைக் கெடுத்தாரா? – மதிமுக மாவட்டச் செயலாளர் – காங்கிரஸ் எம்எல்ஏ மல்லுக்கட்டு!

    September 16, 2025
    மாநிலம்

    ஈரோடு, சேலம், வேலூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு

    September 16, 2025
    மாநிலம்

    ஏஐ தொழில்நுட்பத்தை செயல்படுத்த சுகாதாரத் துறையில் குழு அமைப்பு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

    September 16, 2025
    மாநிலம்

    திமுக நடத்திய ஓரணியில் தமிழ்நாடு முன்னெடுப்பில் ‘தமிழகத்தை தலைகுனிய விடமாட்டோம்’ உறுதிமொழி ஏற்பு

    September 16, 2025
    மாநிலம்

    மின்வாரியம் சார்பில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை: தளவாடப் பொருட்களை இருப்பு வைக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்

    September 16, 2025
    மாநிலம்

    பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் ரூ.2,000 வழங்கும் ‘அன்புக் கரங்கள்’ திட்டம் தொடக்கம்

    September 16, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • நன்கொடை தராததால் நற்பெயரைக் கெடுத்தாரா? – மதிமுக மாவட்டச் செயலாளர் – காங்கிரஸ் எம்எல்ஏ மல்லுக்கட்டு!
    • புற்றுநோய் அறிகுறிகள்: உடனடி கவனம் தேவைப்படும் குழந்தைகளில் புற்றுநோயின் 5 அறிகுறிகள்
    • ஈரோடு, சேலம், வேலூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
    • ஏஐ தொழில்நுட்பத்தை செயல்படுத்த சுகாதாரத் துறையில் குழு அமைப்பு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
    • திமுக நடத்திய ஓரணியில் தமிழ்நாடு முன்னெடுப்பில் ‘தமிழகத்தை தலைகுனிய விடமாட்டோம்’ உறுதிமொழி ஏற்பு

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.