Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Wednesday, July 30
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»‘தனியார் பள்ளிக்கு வெறும் ரூ.1 வாடகைக்கு மதுரை மாநகராட்சியின் 2 ஏக்கர் இடம்’ – துணை மேயர் ‘பகீர்’
    மாநிலம்

    ‘தனியார் பள்ளிக்கு வெறும் ரூ.1 வாடகைக்கு மதுரை மாநகராட்சியின் 2 ஏக்கர் இடம்’ – துணை மேயர் ‘பகீர்’

    adminBy adminJuly 29, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ‘தனியார் பள்ளிக்கு வெறும் ரூ.1 வாடகைக்கு மதுரை மாநகராட்சியின் 2 ஏக்கர் இடம்’ – துணை மேயர் ‘பகீர்’
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    மதுரை: மதுரை மாநகராட்சிக்கு சொந்தமான 2 ஏக்கர் இடம், தனியார் பள்ளி நிர்வாகத்துக்கு கடந்த காலத்தில் வெறும் ரூ.1-க்கு வாடகை விடப்பட்டுள்ளது” என்று மாநகராட்சி துணை மேயரான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாகராஜன் ‘பகீர்’ குற்றச்சாட்டை கிளப்பியுள்ளார்.

    இதுகுறித்து மதுரை மாநகராட்சி கூட்டத்தில் அவர் கூறியது: “ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதை போல் சிலவற்றை மட்டும் கூறுகிறேன். குளிரூட்டப்பட்ட திருமண மஹால் ‘ஏ’ கிரேடில் வரிவசூல் செய்யப்பட வேண்டும். ஆனால், ‘சி’ பிரிவில் வரி வசூல் செய்யப்பட்டுள்ளது. பிபி.சாவடியில் உள்ள ஒரு பிரபலமான மஹாலுக்கு வரி வசூலில் 2,000 சதுர அடி உள்ளது. ஆனால், 15,000 ஆயிரம் வரை இருக்கும். இதேபோல் மதுரை முழுவதும் உள்ள திருமண மஹால்களை சரியாக அளந்து வரி விதிப்பு செய்தால் மாநகராட்சி வருவாய் பல கோடி ரூபாய் இழப்பு சரி செய்யப்படும்.

    மதுரையின் மையத்தில் உள்ள ஒரு கருத்தரித்தல் மையத்திற்கு 6 மாதத்திற்கு ரூ.10 லட்சம் ஆண்டிற்கு 20 லட்சம் வரிவிதிக்கப்பட்டுள்ளது. 2012-ம் ஆண்டில் இருந்து வரிவிதிக்க இந்த கட்டிடத்திற்கு உத்தரவு உள்ளது. ஆனால், 2018-ல் இருந்துதான் வரி விதிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சிக்கு இந்த கட்டிடத்தில் இருந்து மட்டும் ரூ.1 கோடியே 20 லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளது. ஆல் இந்தியா டூரிஸ்ட் டெவெலப்மெண்ட் கார்ப்பரேஷன் நிறுவனத்திற்கு ரயில்வே நிர்வாகம் ஒப்படைத்த வணிக வளாகத்திற்கு வாடகை விடும் ஒப்பந்தத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு வரி செலுத்த வேண்டும் என்று உள்ளது. ரயில்வே நிலையத்திற்கு மட்டும் விரிவிலக்கு உள்ளது. ஆனால், ரூ.4 கோடி வரை வரி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

    கிருஷ்ணாபுரம் காலனி செல்லும் வழியில் மாநகராட்சி இடம் சுமார் 2 ஏக்கர் கடந்த காலத்தில் தனியார் பள்ளி நிரவாகத்துக்கு வெறும் ரூ.1-க்கு வாடகைக்கு விடப்பட்டுள்ளது. இதேபோலவே மாநகராட்சிக்கு சொந்தமான கோடிக்கணக்கான மதிப்புள்ள இடம் தனியாருக்கு தாரைவார்க்கப்பட்டுள்ளது. அதை மீட்க வேண்டும். வரிவிதிப்பு விவகாரத்தில் மோசடி நடந்ததாக ஒட்டுமொத்த 5 மண்டல தலைவர்களையும் திமுக ராஜினாமா செய்ய வைத்தது வரவேற்க தக்க நடவடிக்கையாகும். வரி மோசடியில் கடந்த 10 ஆண்டுகளுக்கான விசாரணை, நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

    சொத்துவரி முறைகேட்டில் கடைநிலை ஊழியர்கள் முதல் உயர் மட்ட அதிகாரிகள் வரை, அவர்களை இயக்கிய அரசியல் வாதிகள் அனைவர் மீதும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து திருமண மஹால்கள், ஏசி மால்கள், ஷாப்பிங் மால்கள், ஹோட்டல்கள், லாட்ஜுகள், மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகள், மருத்துவமனைகள், தனியார் பள்ளிகள், சுயநிதி கல்லூரிகள் ஆகியவற்றை முழுமையாக அளவீடு செய்ய வேண்டும். மாநகராட்சிக்கு சொந்தமான ஓஎஸ்ஆர் இடம் பட்டா பெயர் மாற்றப்படாமல் தனியாருக்கு விற்பனை செய்து கோடிக்கணக்கில் முறைகேடு நடந்தள்ளது.

    முறையாக ஆய்வு செய்து மாநகராட்சி சொத்துகளை மீட்க வேண்டும். யார் யாருக்கு என்ன அளவு, என்ன விதி விதிக்கப்பட்டள்ளது என்பதை பொதுமக்கள் அனைவரும் வெளிப்படை தன்மையோடு பார்க்க வெப்சைட்டில் விவரங்களை வெளியிட வேண்டும். பெரிய நிறுவனங்களுக்கு குறைத்து வரிவிதிப்பு செய்யப்படுகிறது” என்று அவர் தெரிவித்தார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    நெல்லை ஆணவக் கொலை: பேச்சுவார்த்தை தோல்வி; கவின் உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு

    July 30, 2025
    மாநிலம்

    சவுக்கு சங்கர் மீதான வழக்கை 6 மாதங்களில் முடிக்க வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு

    July 30, 2025
    மாநிலம்

    அமெரிக்காவில் சிகிச்சை: இந்திய மருத்துவரின் பரிந்துரை கடிதத்தை தாக்கல் செய்ய செந்தில் பாலாஜி சகோதரருக்கு ஐகோர்ட் உத்தரவு

    July 30, 2025
    மாநிலம்

    ஆதாயக் கொலையும் மது போதை கொலையுமாக தமிழ்நாடு இருப்பது வெட்கக்கேடு: ராமதாஸ் கண்டனம்

    July 30, 2025
    மாநிலம்

    மேட்டூர் அணையில் இருந்து 1.10 லட்சம் கனஅடி உபரிநீர் தொடர்ந்து வெளியேற்றம்: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

    July 30, 2025
    மாநிலம்

    ‘நான் முதல்வன்’ திட்டத்துக்காக கூகுள், யூனிட்டி நிறுவனங்களுடன் ஒப்பந்தம்

    July 30, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • லாஃப்டா மெமர் அவரை அம்பலப்படுத்தியதாகக் கூறப்பட்ட பின்னர், ‘முழு’ உண்மையைச் சொல்லாததால், செல்வாக்கு செலுத்துபவர் பிரதீக் க aus சிக் இறுதியாக மறுபிரவேசம் செய்வதை கைவிடுகிறார்
    • பெற்றோரை இழந்த 22 குழந்தைகளின் கல்வி செலவை ஏற்றார் ராகுல் காந்தி
    • பொறியியல் மாணவர் சேர்க்கை: துணை கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க அழைப்பு
    • “நீளும் சாதிய அருவருப்பின் அட்டூழியம்” – நெல்லை ஐடி ஊழியர் கொலைக்கு மாரி செல்வராஜ் கண்டனம்
    • நெல்லை ஆணவக் கொலை: பேச்சுவார்த்தை தோல்வி; கவின் உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.