Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, October 7
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»தனியார் நிறுவனத்தின் அத்துமீறலை தடுக்க வலியுறுத்தி அரசு கேபிள் டிவி ஆபரேட்டர்கள் ஆர்ப்பாட்டம்
    மாநிலம்

    தனியார் நிறுவனத்தின் அத்துமீறலை தடுக்க வலியுறுத்தி அரசு கேபிள் டிவி ஆபரேட்டர்கள் ஆர்ப்பாட்டம்

    adminBy adminOctober 7, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    தனியார் நிறுவனத்தின் அத்துமீறலை தடுக்க வலியுறுத்தி அரசு கேபிள் டிவி ஆபரேட்டர்கள் ஆர்ப்பாட்டம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: அரசு கேபிள் டிவி நிறு​வனத்​தில், தனி​யார் நிறு​வனத்​தின் அத்துமீறலை தடுத்து நிறுத்​தக்​கோரி அரசு கேபிள் டிவி ஆபரேட்​டர்​கள் சங்​கத்​தினர் சென்​னை​யில் நேற்று ஆர்ப்​பாட்​டத்​தில் ஈடு​பட்​டனர். அரசு கேபிள் டிவி நிறு​வனத்​தில், மந்​திரா எனும் தனி​யார் நிறு​வனம் ஆதிக்​கம் செலுத்தி பல ஆண்​டு​களாக தேங்​கிக் கிடக்​கும் செட்​டாப் பாக்​ஸ்​களை வாங்​க​வும், நல்ல நிலை​யில் இருக்​கும் பாக்​ஸ்​களை மாற்​ற​வும் நிர்ப்​பந்​திப்​பதை தடுக்க வேண்​டும். ஏற்​கெனவே தொழில் நடத்​திவரும் இடங்​களில் புதி​ய​வர்​களுக்கு ஒளிபரப்பு (எல்​சிஓ) உரிமம் வழங்​கு​வதை நிறுத்த வேண்​டும்.

    தமிழ்​நாடு நகர்ப்​புற வாழ்​விட மேம்​பாட்டு வாரிய குடி​யிருப்​பு​களில் அரசு கேபிள் டிவி செட்​டாப் பாக்​ஸ்​களைத்​தான் பொருத்த வேண்​டுமென்று நிர்ப்​பந்​திப்​ப​தைக் கைவிட வேண்​டும் உள்​ளிட்ட கோரிக்​கைகளை வலி​யுறுத்தி அரசு கேபிள் டிவி அலு​வல​கத்தை முற்​றுகை​யிடும் போராட்​டத்தை தமிழக கேபிள் டிவி ஆபரேட்​டர்​கள் பொதுநலச் சங்​கம் அறி​வித்​தது.

    இதையொட்டி சென்னை எழும்​பூர் ராஜரத்​தினம் மைதானத்​தில் நேற்று சங்​கத்​தினர் ஒன்று கூடி ஆர்ப்​பாட்​டத்தை தொடங்​கினர். சங்​கத்​தின் தலை​வர் சுப.வெள்​ளைச்​சாமி தலைமை தாங்​கி​னார். மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் சட்​டப்​பேரவை குழுத் தலை​வர் நாகை மாலி ஆர்ப்​பாட்​டத்தை தொடங்​கி​வைத்து பேசுகை​யில், “ஆட்சி மாறி​யும் காட்சி மாறாத நிலை உள்​ளது.

    அரசு கேபிள் டிவி நிறு​வனத்​தின் போர்​வை​யில் தனி​யார் நிறு​வனம் அத்துமீறுவதை​யும், அதற்கு அதி​காரி​கள் துணை​யாக இருப்​ப​தை​யும் அனு​ம​திக்க முடி​யாது. ஆபரேட்​டர்​களின் கோரிக்​கைகள் தொடர்​பாக முதல்​வரை நேரடி​யாக சந்​தித்​துப் பேச மார்க்​சிஸ்ட் கட்சி நடவடிக்கை எடுக்​கும்” என்று தெரி​வித்​தார்.

    இதற்​கிடையே, சென்னை தலை​மைச் செயல​கத்​தில் அரசு கேபிள் டிவி மேலாண் இயக்​குநர் வைத்​தி​நாதன், தமிழக கேபிள் டிவி ஆபரேட்​டர்​கள் பொதுநலச் சங்​கத்​தின் தலை​வர் சுப.வெள்​ளைச்​சாமி, பொதுச்​செய​லா​ளர் எஸ்​.​ரா​தாகிருஷ்ணன் உள்​ளிட்ட நிர்​வாகி​களு​டன் பேச்​சு​வார்த்தை நடத்​தி​னார்.

    இதன்​பின் செய்​தி​யாளர்​களிடம் சுப.வெள்​ளைச்​சாமி கூறுகை​யில், “முதல்​வரை சந்​தித்து கோரிக்​கைகளை வலி​யுறுத்த அனு​மதி கோரி 4 மாத​மாக காத்​திருக்​கிறோம். அனு​மதி கிடைக்​காத நிலை​யில் இந்த போராட்​டத்தை முன்​னெடுத்​தோம்.

    இயக்​குநருடன் நடை​பெற்ற பேச்​சு​வார்த்​தை​யில் புதி​தாக ஒளிபரப்பு உரிமம் (எல்​சிஓ) வழங்க மாட்​டோம் என்று உறு​தி​யளித்​துள்​ளார். அக்​.8-ம் தேதி முதல்​வரை சந்​திக்க ஏற்​பாடு செய்​வ​தாக மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் மாநிலச் செய​லா​ளர் பெ.சண்​முக​மும், நாகை மாலி எம்​எல்​ஏ​வும்​ உறு​தி அளித்​துள்​ளனர்​’’ என்​று தெரிவித்​தார்​.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்க நடவடிக்கை: முதல்வருக்கு முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி கடிதம்

    October 7, 2025
    மாநிலம்

    மத்திய அரசின் வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு திட்டத்தில் முதன்முறையாக வேலைக்கு சேருபவர்களுக்கு நிதியுதவி

    October 7, 2025
    மாநிலம்

    பாம்பனில் அரியவகை ‘டூம்ஸ்டே மீன்’ சிக்கியது

    October 7, 2025
    மாநிலம்

    “கூட்டணி ஆட்சி அமைந்தால்தான் விடிவுகாலம் வரும்!” – அரசியல் கணக்குகளை அலசும் கிருஷ்ணசாமி நேர்காணல்

    October 7, 2025
    மாநிலம்

    மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு: 15,000 கனஅடியாக குறைப்பு

    October 7, 2025
    மாநிலம்

    இலங்கை கடற்கொள்ளையர் தாக்கியதில் நாகை மீனவர்கள் 11 பேர் காயம்

    October 7, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • விஜே பார்வதி முதல் ‘வாட்டர்மெலன்’ திவாகர் வரை – பிக்பாஸ் சீசன் 9 போட்டியாளர்களின் பின்புலம் என்ன?
    • பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்க நடவடிக்கை: முதல்வருக்கு முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி கடிதம்
    • “என் கணவர் மிகவும் துஷ்பிரயோகம் செய்கிறார், ஆனால் அவர் மற்றவர்களுக்கு முன்பாக நடந்து கொள்கிறார் … நான் என்ன செய்ய வேண்டும்?” – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ஹைதராபாத் | பண்ணை வீட்டில் ‘கஞ்சா’ பார்ட்டி வைத்த 6 பேர் கைது
    • ‘நான் சொன்னதால் நிறுத்தினார்கள்’: இந்தியா – பாக். மோதல் குறித்து மீண்டும் பேசிய ட்ரம்ப்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • October 2025
    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.