Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, September 22
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»தனது வாழ்நாளில் பொது வாழ்க்கைக்காக 80 ஆண்டுகளை ஒப்படைத்தவர் கருணாநிதி: முதல்வர் ஸ்டாலின் புகழாரம்
    மாநிலம்

    தனது வாழ்நாளில் பொது வாழ்க்கைக்காக 80 ஆண்டுகளை ஒப்படைத்தவர் கருணாநிதி: முதல்வர் ஸ்டாலின் புகழாரம்

    adminBy adminJune 30, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    தனது வாழ்நாளில் பொது வாழ்க்கைக்காக 80 ஆண்டுகளை ஒப்படைத்தவர் கருணாநிதி: முதல்வர் ஸ்டாலின் புகழாரம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: தனது வாழ்நாளில் 80 ஆண்டுகளை பொது வாழ்க்கைக்கு ஒப்படைத்த மாபெரும் தலைவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி என்று முதல்வர் ஸ்டாலின் புகழாரம் சூட்டினார்.

    சாகித்ய அகாடமி, டெல்லி ஜவஹர்லால் பல்கலைக்கழகம் சார்பில் கருணாநிதி நூற்றாண்டு கருத்தரங்கம் சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடைபெற்றது. முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, கருத்தரங்கை தொடங்கி வைத்தார்.

    ‘முத்தமிழ் அறிஞர் கலைஞரின் இலக்கிய ஆளுமை’ எனும் சிறப்பு மலரையும் வெளியிட்டார். நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: கவிதை, புனைகதை, செவ்வியல், நாடகம், திரை வசனம், உரைநடை ஆகிய தலைப்புகளில் கருத்தரங்கம் நடத்தப்படுகிறது.

    கருணாநிதி பன்முகத் திறன் பெற்றவர் என்பதை இது காட்டுகிறது. அவர் தனது வாழ்நாளில் 80 ஆண்டுகளை பொது வாழ்க்கைக்கு ஒப்படைத்த மாபெரும் தலைவர். வாழ்வையே தமிழ் சமூகத்தின் மேம்பாட்டுக்காக அர்ப்பணித்ததால்தான் 5 முறை தமிழக முதல்வராக அவரால் இருக்க முடிந்தது.

    இலக்கியத்தை இளைப்பாறும் நிழலாக கருதினார். ‘எனது செங்கோலை பறித்துவிடலாம். ஆனால், எனது எழுதுகோலை யாராலும் பறிக்க முடியாது’ என்றார். இலக்கியவாதிகளுக்காக கருணாநிதி ஏராளமான பணிகளை செய்தார். அவர் முதல்வராக இருந்தபோது, 108 தமிழ் அறிஞர்களின் நூல்களை நாட்டுடைமையாக்கி, நூல் உரிமை தொகையாக ரூ.7.76 கோடி வழங்கப்பட்டது. அதை பின்பற்றி, கடந்த 4 ஆண்டுகளில் எனது ஆட்சியில் 36 தமிழ் அறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டு, நூல் உரிமை தொகையாக ரூ.425 கோடி வழங்கப்பட்டுள்ளது.

    சாகித்ய அகாடமி விருது பெறும் படைப்பாளிகளுக்கு வீடு வழங்கும் ‘கனவு இல்லம்’ திட்டத்தை தமிழக அரசு கடந்த 2022-ல் அறிமுகம் செய்தது. இந்த திட்டத்தில் இதுவரை 25 பேருக்கு வீடு வழங்கப்பட்டுள்ளது.

    இந்த கருத்தரங்கம் கருணாநிதியின் புகழ்பாடுவதாக மட்டும் இல்லாமல், அவர் விரும்பிய சமத்துவம், முற்போக்கு சிந்தனை கொண்ட சமுதாயத்தை உருவாக்க பயன்பட வேண்டும். தமிழ் சமூகத்தில் கருணாநிதி போன்ற படைப்பாளிகள் உருவாக வேண்டும். படைப்பாற்றல் பெற்றவர்கள் தொடர்ந்து எழுத வேண்டும்.

    படைப்பாளிகளை அவர்கள் வாழும் காலத்திலேயே போற்ற வேண்டும், அங்கீகரிக்க வேண்டும். அதுதான் உயர்ந்த சமூகமாக இருக்க முடியும். இதைத்தான் தமிழக அரசு செய்து வருகிறது. சாகித்ய அகாடமி போன்ற அமைப்புகளும் இந்த பணியை தொய்வின்றி தொடர வேண்டும். இவ்வாறு முதல்வர் பேசினார்.

    அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக துணைவேந்தர் சாந்திஸ்ரீ துலிப்புடி பண்டிட், சாகித்ய அகாடமி செயலர் சீனிவாச ராவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    மாணவர்களால் சலசலப்பு: நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பு, பார்வையாளர்கள் பகுதியில் இருந்த கல்லூரி மாணவ, மாணவிகளை வீடியோ எடுக்கும்போது, முன்வரிசையில் இருந்த மாணவர் ஒருவர் தனது கைக்குட்டையை எடுத்து காண்பித்தார். அதில், தவெக தலைவர் விஜய் படம் இருந்ததால் சலசலப்பு ஏற்பட்டது. உற்சாக குரல் எழுப்பிய 3 மாணவர்களை அரங்கத்தில் இருந்து போலீஸார் வெளியேற்றினர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    நிபந்தனைகளை மீறியதாக தவெக நிர்வாகிகள் மீது வழக்கு

    September 22, 2025
    மாநிலம்

    தூத்துக்குடியில் கட்டும் கப்பல் தளத்தால் வளர்ச்சி: முதல்வர் பெருமிதம்

    September 22, 2025
    மாநிலம்

    பாஜகவின் சர்வாதிகார அரசியலுக்கு உடன்பட்டு துரோகம் செய்பவர்களை புறக்கணிக்க வேண்டும்: முதல்வர் அழைப்பு

    September 22, 2025
    மாநிலம்

    கடந்த 4 ஆண்டுகளில் நாட்டுடைமையாக்கப்பட்ட 37 தமிழறிஞர்களின் நூல்கள்: அமைச்சர் பிடிஆர் தகவல்

    September 22, 2025
    மாநிலம்

    சிறந்த நிர்வாகத்துக்கு குடிமைப் பணியாளர்கள்தான் முதுகெலும்பு: முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் புகழாரம்

    September 22, 2025
    மாநிலம்

    ஏழைகளின் ‘டாக்டர்’ கனவை நனவாக்கி வரும் 7.5% உள் இடஒதுக்கீடு: அரசு பள்ளி மாணவர் 632 பேர் மருத்துவம் படிக்க வாய்ப்பு

    September 22, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • பிஹார் சட்டப்பேரவை தேர்தல் தேதி அக்டோபர் முதல் வாரத்தில் வெளியீடு
    • நிபந்தனைகளை மீறியதாக தவெக நிர்வாகிகள் மீது வழக்கு
    • பெரும்பாலான மனித நடத்தை ‘தன்னியக்க பைலட்’ ஆல் இயக்கப்படுகிறது, தேர்வு அல்ல | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • அமெரிக்காவில் உள்ள இந்தியர்கள் நாடு திரும்ப நல்ல வாய்ப்பு: சோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு கருத்து
    • அமெரிக்கர்கள் வேலை பறிபோவதை தடுக்கவே கட்டுப்பாடு: வெள்ளை மாளிகை அறிக்கை வெளியீடு

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.