Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Wednesday, July 9
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»தஞ்சை: உபரி நீர் கடலில் கலப்பதை தடுத்து நீர் நிலைகளில் வறட்சியை போக்க ராமதாஸ் வலியுறுத்தல்
    மாநிலம்

    தஞ்சை: உபரி நீர் கடலில் கலப்பதை தடுத்து நீர் நிலைகளில் வறட்சியை போக்க ராமதாஸ் வலியுறுத்தல்

    adminBy adminJuly 9, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    தஞ்சை: உபரி நீர் கடலில் கலப்பதை தடுத்து நீர் நிலைகளில் வறட்சியை போக்க ராமதாஸ் வலியுறுத்தல்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீர் உபரி நீராக காவிரியில் திறக்கப்பட்டு அதிகளவில் கடலில் கலக்கிறது. இப்படி நடவாது தடுத்தால் மட்டுமே 85 ஏரிகளும், குளங்களும், நீர் நிலைகளும் காப்பாற்றப்படும். இதில் தமிழக அரசு உரிய தீர்வு காண பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தஞ்சை மாவட்டம், செங்கிப்பட்டி – பூதலூர் பகுதிகளில் வறண்டு நிற்கும் ஏரிகளுக்கு தண்ணீர் திறக்க வலியுறுத்தி, விவசாயிகள் ‘மினியன்’ ஏரியில் இறங்கி போராட்டம் நடத்தியுள்ளனர்.

    விவசாயி ஜீவகுமார், ஏரி மேம்பாட்டுக்குழு சார்பில் ரவிச்சந்திரன், மேனாள் பஞ்சாயத்து தலைவர் கமலதாசன் உள்ளிட்டோர் தலைமையில் விவசாயிகளும், ஊர் பொதுமக்களும் இங்கே ஓரணியாய் போராடியுள்ளனர்.கொள்ளிடம் ஆற்றில் உபரிநீர் சென்று கடலில் வீணாய் கலப்பதை தடுத்து நிறுத்த வேண்டியே அனைவரும் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

    தஞ்சாவூர் மாவட்டத்தின் செங்கிப்பட்டி – பூதலூர், புதிய கட்டளைமேட்டு வாய்க்கால் மூலம் 61 ஏரிகளும், உய்யக்கொண்டான் நீட்டிப்பு வாய்க்கால் மூலம் 24 ஏரிகளும் நிரப்பப்பட்டு பாசனத்துக்கு பயன்படுத்தப் படுகிற அதே வேளையில்தான்; செங்கிப்பட்டி மற்றும் பூதலூர் பகுதிகளிலுள்ள ஏரிகள், குளங்கள் வறண்டுபோய் கிடக்கிறது.கல்லணைக்கு மிக அருகிலுள்ள ஏரி, குளங்களே இந்த நிலையில்தான் உள்ளது.

    புதிய கட்டளைமேட்டு வாய்க்கால், உய்யகொண்டான் நீட்டிப்பு வாய்க்கால் மூலம் 30 ஆயிரம் ஏக்கருக்கும் மேலாக பாசனவசதி கிடைத்து வருவதை நினைத்து மகிழ்வதா; மேட்டூர் அணைக்கு வருகிற நீர், உபரி நீராக காவிரியிலும் – முக்கொம்பு அணையிலிருந்து கொள்ளிடத்திலும் திறக்கப்பட்டு மொத்த நீரும் கடலில் போய் கலப்பதை எண்ணி வேதனைப்படுவதா தெரியவில்லை.

    செங்கிப்பட்டி – பூதலூர் பகுதிகளில் வறண்டுபோய் கிடக்கும் ஏரிகள் உள்ளிட்ட நீர் நிலைகளுக்கு தண்ணீர் வரத்து எப்போதுதான் என்று விவசாயிகளும், பொதுமக்களும் ஏங்கிக் கிடக்கிறார்கள்.உபரி நீரை மாயனூர் கதவணையில் திருப்பி புதிய கட்டளைமேட்டு வாய்க்கால், உய்யக்கொண்டான் நீட்டிப்பு வாய்க்கால் மூலமாக சுற்றுப்பகுதிகளில் இருக்கிற ஏரி – நீர்நிலைகளை நிரப்பிட தமிழ்நாடு அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும். வருகிற காலங்களில் மாயனூர் கதவணையில் தண்ணீரை திறக்கும் நிலை உண்டானால் மட்டுமே உபரிநீர் கடலில் கலப்பது குறையும்.

    மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீர் உபரி நீராக காவிரியில் திறக்கப்பட்டு அதிகளவில் கடலில் கலக்கிறது. இப்படி நடவாது தடுத்தால் மட்டுமே 85 ஏரிகளும், குளங்களும், நீர் நிலைகளும் காப்பாற்றப்படும். தமிழக முதல்வர் இதில் உரிய தீர்வு காண விரைந்து முன்வர வேண்டும்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய ஓபிஎஸ் வலியுறுத்தல்

    July 9, 2025
    மாநிலம்

    தமிழகத்துக்கு அவப்பெயரை தேடி தந்ததே திமுக அரசின் சாதனை: நயினார் நாகேந்திரன்

    July 9, 2025
    மாநிலம்

    “எனது கரங்களைப் பிடித்து கவலைகளைத் தெரிவித்த கோவை மக்கள்…” – அதிமுகவினருக்கு இபிஎஸ் மடல்

    July 9, 2025
    மாநிலம்

    தமிழகத்தில் வெப்பநிலை 3 நாட்களுக்கு வழக்கத்தை விட 7 டிகிரி வரை உயர வாய்ப்பு

    July 9, 2025
    மாநிலம்

    கேரளாவில் மீண்டும் நிபா வைரஸ் பாதிப்பு: கோவை மக்களுக்கு ஆட்சியர் தரும் ‘அலர்ட்’ குறிப்புகள்

    July 9, 2025
    மாநிலம்

    மாங்கனி திருவிழாவை ஒட்டி காரைக்காலில் நாளை உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

    July 9, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • நானியின் ‘தி பாரடைஸ்’ படத்தில் ‘கில்’ வில்லன்!
    • பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய ஓபிஎஸ் வலியுறுத்தல்
    • தினமும் 10 நிமிடங்கள் பின்னோக்கி நடக்க 7 காரணங்கள்
    • வாக்குரிமையை களவாடவே வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம்: பாட்னாவில் ராகுல் காந்தி சீற்றம்
    • கார்த்திக் சுப்பராஜ் தயாரிப்பில் ரத்னகுமார் இயக்கும் படம்!

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.