Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, July 15
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»தஞ்சாவூர் வடக்கு மாவட்ட திமுக செயலாளர் பதவியில் இருந்து கல்யாணசுந்தரம் நீக்கம் ஏன்?
    மாநிலம்

    தஞ்சாவூர் வடக்கு மாவட்ட திமுக செயலாளர் பதவியில் இருந்து கல்யாணசுந்தரம் நீக்கம் ஏன்?

    adminBy adminJuly 15, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    தஞ்சாவூர் வடக்கு மாவட்ட திமுக செயலாளர் பதவியில் இருந்து கல்யாணசுந்தரம் நீக்கம் ஏன்?
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    தஞ்சாவூர் வடக்கு மாவட்ட திமுக செயலாளர் பொறுப்பிலிருந்து சு.கல்யாணசுந்தரம் எம்.பி நேற்று நீக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக கும்பகோணம் எம்எல்ஏ சாக்கோட்டை க.அன்பழகனை நியமித்து கட்சித் தலைமை உத்தரவிட்டுள்ளது.

    தஞ்சாவூர் வடக்கு மாவட்ட திமுக செயலாளராக திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினராக இருந்த சு.கல்யாணசுந்தரம் 2014-ம் ஆண்டு நியமிக்கப்பட்டார். கட்சியில் அனுபவம் மிக்கவரான கல்யாணசுந்தரம், பாபநாசம் தொகுதியில் 3 முறை போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். இதையடுத்து, கடந்த முறை இவருக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை கட்சித் தலைமை வழங்கியது.

    அதன்பின், திமுகவில் கும்பகோணம் ஒன்றியத்தை மூன்றாக பிரித்து, அதில் மேற்கு ஒன்றியச் செயலாளர் பதவியை தனது மகன் எஸ்.கே.முத்துச் செல்வனுக்கு வழங்கினார். மேலும், கடந்த முறை தஞ்சாவூர் மாவட்ட ஊராட்சிக்குழு துணைத் தலைவர் பதவியையும் பெற்று கொடுத்தார். இதனிடையே, கடந்த சில மாதங்களாக இருவர் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து, தற்போது மாவட்டச் செயலாளர் பதவியிலிருந்து கல்யாணசுந்தரத்தை விடுவித்து, எம்எல்ஏ சாக்கோட்டை க.அன்பழகனை நியமித்து கட்சித் தலைமை நேற்று உத்தரவிட்டுள்ளது.

    இந்த மாற்றத்துக்கான காரணம் குறித்து திமுகவினர் கூறியது: திமுகவில் மூத்த நிர்வாகியான கல்யாணசுந்தரம், கும்பகோணம் பரஸ்பர சகாய நிதி நிறுவனத்தின் தலைவராகவும் உள்ளார். நீர் நிலையில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த இந்த நிறுவனத்தின் கட்டிடத்தை அகற்ற முயன்ற போது, அதிகாரிகளை மிரட்டிய விவகாரம் நீதிமன்றம் வரை சென்றது. இதன் பின்னணியில் அப்போதைய மாநகராட்சி ஆணையரை இடமாற்றம் செய்ய கல்யாணசுந்தரமும், முத்துச்செல்வனும் தான் காரணம் என கூறப்பட்டது.

    அதேபோல, அரசு விழா ஒன்றில், மயிலாடுதுறை காங்கிரஸ் எம்.பி ஆர்.சுதாவை மேடையில் வைத்துக் கொண்டு, ”காங்கிரஸ் கட்சியில் இங்கு ஆளே இல்லை, தலைமை சொல்லியதால் உங்களை ஜெயிக்க வைத்தோம். உங்களது நிதியை கும்பகோணம் வளர்ச்சி பணிகளுக்கு செலவிட வேண்டும்” என கல்யாணசுந்தரம் பேசினார். இதனால் எம்.பி சுதா அதிருப்தியடைந்து, இவ்விவகாரத்தை திமுக தலைமையின் கவனத்துக்கு கொண்டு சென்றார்.

    மேலும், கல்யாணசுந்தரம் பட்டா வழங்கும் அரசு நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், ”பட்டா கேட்டவுடனே கிடைத்து விடாது. திருமணம் ஆனால் கூட 10 மாதம் கழித்த பிறகு தான் குழந்தை பிறக்கும். உடனே குழந்தை பிறக்க வேண்டும் என்றால், அது வேறு விதமாகத்தான் இருக்கும்” என்று பேசியதும், செய்தியாளர்கள் சந்திப்பில் துண்டுச் சீட்டில் கேள்விகளை எழுதிக் கொடுத்து, அந்த கேள்விகளை மட்டுமே கேட்க வேண்டும் எனக் கூறியதாக வெளியான தகவலும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    அதேபோல, கல்யாணசுந்தரத்தின் மகன் முத்துச்செல்வன் நடத்தி வரும் மினரல் வாட்டர் நிறுவனத்தில், தர நிர்ணய அதிகாரிகள் அண்மையில் நடத்திய ஆய்வில் போலி ஐஎஸ்ஐ முத்திரை பயன்படுத்தியது தெரியவந்த விவகாரமும் கட்சி தலைமையிடம் அதிருப்தியை உண்டாக்கியது.

    அத்துடன், அண்மையில் சென்னையில் ‘உடன்பிறப்பே வா’ நிகழ்ச்சியில் பங்கேற்ற பாபநாசம் தொகுதி திமுக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர் மற்றும் அவரது மகனின் செயல்பாடுகள் குறித்து திமுக தலைவர் ஸ்டாலினிடம் அடுக்கடுக்கான புகார்களை கூறியுள்ளனர். அதைத் தொடர்ந்து தான், தற்போது மாவட்டச் செயலாளர் மாற்றப்பட்டுள்ளார் என்றனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    “டெல்லி காவி அணியின் கனவுத் திட்டம் பலிக்காது!” – முதல்வர் ஸ்டாலின் பேச்சு

    July 15, 2025
    மாநிலம்

    காமராஜர் பிறந்தநாளில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தை தொடங்கி வைத்தேன்: முதல்வர் ஸ்டாலின்

    July 15, 2025
    மாநிலம்

    தமிழக அரசு வஞ்சிக்கலாமா? – ‘சிபில்’ விவகாரத்தில் விவசாயிகள் போராட்டம்

    July 15, 2025
    மாநிலம்

    “கொள்ளிடத்தில் தடுப்பணை கட்டப்படும்” – அரியலூரில் எடப்பாடி பழனிசாமி வாக்குறுதி

    July 15, 2025
    மாநிலம்

    “தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை” – செந்தில் பாலாஜி உறுதி

    July 15, 2025
    மாநிலம்

    வானிலை முன்னறிவிப்பு: கோவை, நீலகிரியில் 5 நாட்களுக்கு மிக கனமழை வாய்ப்பு

    July 15, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • “டெல்லி காவி அணியின் கனவுத் திட்டம் பலிக்காது!” – முதல்வர் ஸ்டாலின் பேச்சு
    • உலகில் 10 பிரபலமான சாக்லேட் தொழிற்சாலைகள் ஒவ்வொரு சோகோ – ஓவர் பார்வையிட வேண்டும் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • பிரதமர், ஆர்எஸ்எஸ் குறித்து சர்ச்சைக்குரிய கார்ட்டூன் வரைந்தவரின் மனு மீதான உச்ச நீதிமன்ற உத்தரவு சொல்வது என்ன?
    • ‘சிராஜ் அவுட்டான விதம் துரதிருஷ்டவசமானது’ – இங்கிலாந்து மன்னர் சார்லஸ் கருத்து
    • காமராஜர் பிறந்தநாளில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தை தொடங்கி வைத்தேன்: முதல்வர் ஸ்டாலின்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.