Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Thursday, July 3
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»டெல்டா மாவட்டங்களில் உள்ள அனைத்து கடைமடை பகுதிகளுக்கும் தண்ணீர் சென்றடைய நடவடிக்கை தேவை: இபிஎஸ்
    மாநிலம்

    டெல்டா மாவட்டங்களில் உள்ள அனைத்து கடைமடை பகுதிகளுக்கும் தண்ணீர் சென்றடைய நடவடிக்கை தேவை: இபிஎஸ்

    adminBy adminJuly 3, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    டெல்டா மாவட்டங்களில் உள்ள அனைத்து கடைமடை பகுதிகளுக்கும் தண்ணீர் சென்றடைய நடவடிக்கை தேவை: இபிஎஸ்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து 20 நாட்களுக்குப் பிறகும் கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் சென்றடையாத நிலையை ஏற்படுத்திய திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.

    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஒவ்வொரு ஆண்டும் டெல்டா பகுதிகளில் உள்ள பாசனக் கால்வாய்கள் முறையாக தூர் வாரப்பட்டு, ஜூன் மாதம் 12-ஆம் தேதியன்று, மேட்டூர் அணையிலிருந்து காவிரியில் திறக்கப்படும் தண்ணீர் குறித்த காலத்தில் கடைமடை பகுதிகளைச் சென்றடையும்.

    இந்த ஆண்டு காவிரி படுகைகளில் எந்தவித தூர்வாரும் பணிகளையும் செய்யாமல், வீண் ஜம்பத்திற்காகவும், வெற்று விளம்பரத்திற்காகவும் முதல்வர் ஸ்டாலின் போட்டோ ஷூட் நடத்தி ஜூன் 12–ந் தேதி மேட்டூர் அணையிலிருந்து தண்ணீரைத் திறந்துவிட்டார். அந்தத் தண்ணீர் காவிரி படுகை முழுவதும் தடையின்றி பயணம் செய்து கடைமடை வரைச் செல்லும் நிலை உள்ளதா என்பதை சிந்தித்துப் பார்க்காமல் ஸ்டாலின் செயல்பட்டது டெல்டா பாசன விவசாயிகளைப் பெரிதும் பாதிப்புக்குள்ளாக்கியுள்ளது.

    மேட்டூர் அணையிலிருந்து காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டு 20 நாட்கள் முடிவடைந்த நிலையில், இன்னும் டெல்டா மாவட்ட கடைமடை பகுதிகளுக்குக் காவிரி தண்ணீர் சென்றடையாமல், கடைமடை விவசாயிகள் நடவுப் பணிகளை உரிய நேரத்தில் மேற்கொள்ள இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.

    குறிப்பாக திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர், முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி, கோட்டூர் ஒன்றியங்கள்; நாகப்பட்டினம் மாவட்டத்தில் தலைஞாயிறு, வேதாரண்யம் ஒன்றியங்கள்; தஞ்சாவூர் மாவட்டத்தில் பேராவூரணி, பட்டுக்கோட்டை மற்றும் மதுக்கூர் ஒன்றியங்கள் உள்ளிட்ட பல இடங்களுக்கு இன்னும் காவிரி தண்ணீர் சென்று சேரவில்லை.

    விவசாயிகளின் வேதனைக் குரல் காதில் விழாத அளவிற்கு மமதையில் இந்த ஆட்சியாளர்கள் சுற்றித் திரிகிறார்கள். கடல் முகத்துவாரங்களில் வெங்காயத் தாமரை புதராக மண்டிக் கிடப்பதால் விவசாயிகள் கடும் அவதி அடைந்துள்ளனர். பாசன மதகுகள் மற்றும் கதவணைகள் பழுதுபார்க்கப்படாததால் பாசன நீரைத் தேவைக்கேற்ப திறக்க முடியவில்லை.

    ஆசிய வளர்ச்சி வங்கி, கடல் முகத்துவார சீரமைப்புக்காக வழங்கும் நிதியைப் பெற நிர்வாகத் திறனற்ற திமுக ஆட்சியாளர்கள் எந்தவித முயற்சியும் எடுக்கவில்லை என்று விவசாய அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றன.

    நிர்வாகத் திறனற்று செயல்படும் திமுக ஆட்சியில், டெல்டா பாசன விவசாயிகள் இந்த ஆண்டு முழு அளவில் பயிர் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையை ஏற்படுத்திய நிர்வாகத் திறனற்ற திமுக அரசுக்கு எனது கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    மேட்டூர் அணை நிரம்பி உபரி நீர் கடலில் கலக்கும் இச்சூழ்நிலையில், ஏன் கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் சென்றடையவில்லை. உரிய முறையில் தண்ணீரைக் கொண்டு சென்று விவசாயிகளிடம் சேர்ப்பதில் இந்த அரசுக்கு என்ன சிக்கல்? கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் சென்றடையாததால், தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்ட கடைமடை பகுதி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    டெல்டா மாவட்டங்களில் உள்ள அனைத்து கடைமடை பகுதிகளுக்கும் உடனடியாக தடையில்லாமல் தண்ணீர் சென்றடைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்த அரசை வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    புதுச்சேரியில் எஸ்பி மீது பெண் எஸ்ஐ பாலியல் புகார் – விசாரணைக்கு அதிமுக வலியுறுத்தல்

    July 3, 2025
    மாநிலம்

    அஜித்குமார் படுகொலை: ஐஜி அறிக்கை தாக்கல் செய்ய மனித உரிமை ஆணையம் உத்தரவு

    July 3, 2025
    மாநிலம்

    காங். எம்.பி ராபர்ட் புரூஸுக்கு எதிராக தேர்தல் வழக்கு ஏன்? – ஐகோர்ட்டில் நயினார் நாகேந்திரன் விளக்கம்

    July 3, 2025
    மாநிலம்

    20 ஆண்டுகளுக்கு பிறகு தைலாபுரத்துக்கு வந்துள்ளேன்: வாழப்பாடி ராமமூர்த்தியின் மகன் நெகிழ்ச்சி

    July 3, 2025
    மாநிலம்

    வணிகவரித்துறை, பள்ளிக்கல்வித்துறை காலியிடங்களை பதவி உயர்வின் மூலம் நிரப்ப தயக்கம் ஏன்?- அன்புமணி

    July 3, 2025
    மாநிலம்

    விளை நிலங்களுக்கு மத்தியில் வீட்டுமனைப் பிரிவுகளை கட்டமைப்பது ஆபத்தானது: ராமதாஸ்

    July 3, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • புதுச்சேரியில் எஸ்பி மீது பெண் எஸ்ஐ பாலியல் புகார் – விசாரணைக்கு அதிமுக வலியுறுத்தல்
    • மிளகுக்கீரை எண்ணெய் Vs ரோஸ்மேரி எண்ணெய்: உடனடி முடி வளர்ச்சிக்கு எது சிறந்தது?
    • இமாச்சலப் பிரதேசத்தில் கனமழைக்கு இதுவரை 63 பேர் உயிரிழப்பு – மீட்புப் பணிகள் தீவிரம்
    • “இந்தியாவில் ஜனநாயகம் என்பது வெறும் அமைப்பு அல்ல” – கானா நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரை
    • அஜித்குமார் படுகொலை: ஐஜி அறிக்கை தாக்கல் செய்ய மனித உரிமை ஆணையம் உத்தரவு

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.